Unordered List

02 அக்டோபர் 2010

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - தன்னை நம்பிய மனிதன்


காந்தியின் சுயசரிதையை படிக்கும்போது ஒன்று தெளிவாகிறது, இவர் ஒன்றும் ஒரு குறைகளே இல்லாத ஒருவர் அல்ல. காந்தியும் பலவிதமான பலவீனங்களைக்கொண்டிருந்தவர்தான்.

ஆனால் எது அவரை ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தலைவனாகியது?

தான் தனக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும், எந்த நிலையிலும் பயமற்று இருப்பதும், தனக்கு சரியென்றுபடுவதை தானும் செய்து, அதை வெளிப்படையாக விளக்கி பிறரையும் செய்தவைப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதை காந்தி எப்போதும் மிக விழிப்புணர்வுடன் செய்திருந்திருக்கிறார்.

காந்தியை நினைக்கும் இத்தருணத்தில், நமது மனதின் உண்மையான வலிமையையும் அதன் ஆற்றலையும் எண்ணிபார்க்கலாம்.