Unordered List

20 டிசம்பர் 2010

வாழும் வரலாறே!!

வாழும் வரலாறே!!" என்று அரசியல் கோஷங்கள் பல பார்த்துள்ளோம்.


கிடைக்க வேண்டிய புகழ் பலருக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமலே இருந்திருக்கிறது.  இதற்கு உதாரணங்கள் பல..


ஆனால் புகழ் கிடைப்பதும் எவ்வளவு பெரிய சுமை என்று சிலருக்குத் தான் தெரியும்.
"கிரிக்கெட்டின் கடவுள்" சச்சின், "இசைக் கடவுள்" இளையராஜா, "இந்திய சூப்பர் ஸ்டார்" ரஜினி ஆகியோர் இந்த சிலரில் சிலர்.


எனக்கும் இவர்களை மிகப் பிடிக்குமென்றாலும், இந்த அதீதப் பட்டங்கள்  கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..

"இசை ஞாநி" , "master balster" போன்றவை பரவாயில்லை.. 

"இசைக் கடவுள்" என்று இளையராஜவையோ "கிரிக்கெட் கடவுள்" சச்சின்-னையோ ஊடகங்கள்  புகழும் போது "அவர்களை வேலையைச் செய்ய விடுங்கப்பா.." என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

இந்த அதீத புகழ்ச்சியினால் அவர்களுக்கு கொஞ்சம் நன்மை போலத் தோற்றமளித்தாலும்  ஊடகங்களின் நோக்கம் பரபரப்புத் தான் (Sensationalism)
அடுத்த முறை ஒரு சின்ன தவறு என்றாலும் இதே ஊடகங்கள் இன்னொரு அதீதமான முறையில் வசைபாடவும் தயங்குவதில்லை. அதுவும் ஒரு sensation. 



இந்தப் பிரச்சனைக்குப் பயந்தே பல பிரபலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் வேலையே குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது பத்திரிக்கைகள் விரும்பும்படி மாற்றிக் கொள்கிறார்கள்.  ரஜினி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.



இப்போதிருக்கும் சூழலில் பொறுப்பான அணுகுமுறையை ஊடகங்களிடிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்தான். 

பாராட்டினாலும் அல்லது திட்டினாலும் எல்லாமே ஒரு extreme தான்..

ஊடகங்கள் எவ்வளவு பாராட்டினாலும், திட்டினாலும் தன வேலையைச் தான் விரும்பும்படி செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், அதை ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செய்யவது சச்சின்.


புகழ்வதோ அல்லது விமர்சிப்பதோ அது விமர்சகர்களின் வேலை. ஒரு சாதனையாளர் அதைப் பார்க்க தேவையில்லை..


ஊடகங்கள் தான் பிரபலங்களைத் தொடரவேண்டும்,  பிரபலங்கள் ஊடகங்களை ஊடகங்களைத் தொடரக் கூடாது. இதை நடைமுறையில் காட்டி வெற்றி மேல் வெற்றி படைக்கும் சச்சினுக்கு வாழ்த்துக்கள்..


5 நாள் கிரிக்கெட் போட்டியில் 50-வது சதத்தை நிறைவு செய்துள்ள master blaster  சச்சின்-னுக்கு வாழ்த்துக்கள், வரலாறாக இல்லை. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக.