Unordered List

01 செப்டம்பர் 2014

உலகெலாம் புகழ் நம்ம ஏரியா VIP

நம்ம வீட்டுக்கு பக்கத்துல யாராவது வீ.ஐ.பி வீடு இருந்தால் இரு பெருமை தானே. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருப்பது சேக்கிழாருடையது, பெரியபுராணம் எழுதியவர். பெரியவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்காமல் இருக்கலாமா? சென்ற வாரயிறுதியில் கிளம்பிவிட்டேன்.

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்வழியில் வலதுபுறம் செல்லும் ஒரு சிறிய சாலையில் சென்றால் இருக்கிறது அவரது வீடு, சரி கோவில்.




சிறிய கோவில்தான், ஆனால் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. அதிக கூட்டமில்லை. உண்மையைச் சொன்னால் எங்களைத் தவிர யாருமில்லை அப்போது. சரிதான் இந்தக் கோவிலுக்கு எந்தப் பரிகாரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போல. அமைதியே சிறப்புதான் இப்படிப்பட்ட நினைவிடங்களுக்கு.

காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு மணி நேரம் தான் பூஜை நேரம் என்றாலும், கோவில் எப்போதும் திறந்திருக்கிறது. பக்கத்திலயே அவர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிவன் கோவிலும் பக்கத்திலேயே இருப்பது போனஸ்.






உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்



அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்



மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

பெரியபுராணம் இங்கே படிக்கக் கிடைக்கிறது..


நம்ம புராணமே பெரிய புராணமாக இருக்கே இதுல இது வேறயா என்று சலித்துக்கொள்கிறீர்களா? இதையும் படியுங்கள்  :-)