Unordered List

01 டிசம்பர் 2019

உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்லது பெஸிமிஸ்ட்டா

சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. அமெரிக்க ஹைவே ஒன்றில் வழக்கமான சோதனைக்காக ஒரு காரை போலீஸ் நிறுத்தச் சமிக்கை செய்ய, அந்தக் கார் நிற்கவில்லை, கொஞ்சம் சமோயோசிதமான போலீஸ்காரர் காரின்முன் தன் காரை மெதுவாக ஓட்டிச்சென்று அந்தக் காரின் வேகத்தைக் குறைக்கவைத்து நிறுத்தினார், அங்கே ஒரு ஆச்சர்யம். அந்தக் காரின் ஓட்டுனர் அதீத குடிபோதையில் இருக்க அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தது காரின் செல்ப் ட்ரைவிங்க் அல்காரிதம்.


தானியங்கி கார் 

இதில் இருக்கும் சட்ட விஷயங்களை ஒருபுறம் இருக்க, இது சில தார்மீகக் கேள்விகளை எழுப்புகிறது. காரை ஓட்டியது அல்காரிதம் தான் என்றால் மனிதருக்கு பொறுப்பில்லை என்றாகிவிடுமா? இன்னும் இந்தத் தொழில் நுட்பம் வளரஎல்லாக் கார்களையுமே இந்த அல்காரிதங்கள் ஓட்ட ஆரம்பித்தால் மனிதர்களுக்கு அதில் என்ன பங்கு? 

இளைஞன், வயதானவர், அவசரக்காரர், நிதானமானவர், அவசரமாக வேலைக்குச் செல்பவர், ஊர் சுற்றிப்பார்க்கும் ஒருவர், விட்டுக்கொடுப்பவர், அடித்துச் செல்லும் மன நிலை கொண்டவர் அனைவரின் வாகனங்க்களும் ஒரே மாதிரி சாலையில் செல்லும் நிலை எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிலையை நாம் ஒப்புகொள்வோமா,அதை மனித இயல்பு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நமக்கேற்றபடி செயல்படும் அல்காரிதங்களை (தானியங்கிக் கார்களை) எதிர்பார்ப்போமா? 

அப்படி தனிப்பட்ட குணத்துக்கேற்ப செயல்படும் தானியங்கிக் கார்களை நாம் எதிர்பார்த்தால் கார் தயாரிப்பாளர்கள் கார் எஞ்சின்களை ஆராய்வது ஒருபுறமிருக்க மனித மனஆராய்ச்சி வேறு செய்யவேண்டியிருக்கும்.

இவையெல்லாம் புதிய டெக்னாலஜி உலகத்தின் கேள்விகள். ஆனால் இவற்றின் அடிப்படைகள் மனித அதாவது சேப்பியன்ஸின் இயல்பில் இருந்து வருபவை. என்ன தான் தானியங்கி கார்கள் தொழில்நுட்ப சாதனையால் உருவானாலும் அவை சாலையில் செல்லும்போது அங்கு நடக்கும் மனிதர்களின் இயல்பை புரிந்துகொள்ளாமல் வெற்றியடைய முடியாது இல்லையா.


...


கொஞ்சம் வாசிப்பு பழக்கம் இருக்கும் யாருக்குமே சேப்பியன்ஸ் உட்பட அவரது மூன்று புத்தகங்க்களிலும் யுவால் ஹஹாரி சொல்வது எதுவும் புதிய தகவல்கள் இல்லை என்று தெரியும். ஆனால் அவர் அவற்றை ஒரு மிகப்பெரிய சித்திரம் அளிக்கிறார் என்பதே அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதை சிலர் தகவல் களஞ்சியமாக படிப்பதும், தீர்க்கத் தரிசனமாகப் பார்ப்பதும் அவர்களின் புரிதலில் சிக்கலுக்கு வழிகோலுகிறது.  இதில் சொல்லப்படும் தகவல்கள் இந்தப் மனிதனின் பயணத்தை காட்டுவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயல்பை வைத்து நாம் இப்போது சந்திக்கும் பல பிரச்சனைகள் செல்லும் போக்கு கணிக்கப்படுகிறது.

பெருமழை அல்லது புயல் வரும் என்று ஒருவர் கணித்தால் அதற்கான முன்னெச்செரிக்கை செய்துகொள்ள முடியுமே தவிர அதைத் தடுக்க முடியாது, மாறாக ஷேர் மார்க்கெட்லோ, தேர்தலிலோ செய்யப்படும் கணிப்புகள் அவற்றை மாற்றக் கூடியவை. இறுதி முடிவுகள் அல்ல. இந்த வகை சரியான கணிப்புகளை மனதில்கொண்டு செயலாற்றி அவற்றை மாற்ற முடியும். யுவால் விவாதிப்பது இரண்டாம் வகை கணிப்புகள். இவற்றை பெஸிமிஸ்ட் என்று சிலர் வகை செய்வது அவரிடம் 'நல்ல' தீர்க்கதரிசனத்தை அவர்கள் எதிர்பார்ப்பதால் விளைவது.


சென்ற வாரத்தில் மட்டும் நடந்த சில நிகழ்வுகள் இவை

1. சென்னையைச் சேர்ந்த ஒரு சினிமாதியேட்டரின் உரிமையாளர் வருத்தத்துடன் ஒரு ட்விட் போட்டிருந்தார். மக்கள் தாங்கள் ரசிப்பதிலும் கைதட்டுவதும் விட அதை போட்டோ எடுத்து ஷேர் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள் என்று. 

பார்ப்பதை விட பகிர்வதே மகிழ்ச்சி 
2. இப்போது பிரபலமாக இருக்கும் போன் ரிவியூ செய்யும் ஒரு யுடியூப் சேனலில் வழக்கத்துக்குமாறாக நிறைய பெண்கள் ஐடிகளில் பின்னூட்டம் இருந்திருக்கிறது, அவை எல்லாமே அந்த போன் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டவை. அதில் சந்தேகம் கொண்டு கொஞ்சம் ஆராய்ந்ததில் அவை எல்லாம் தானியங்க்கி கமெண்ட்கள் என தெரியவருகிறது. அவை அந்த போன் நிறுவனம் தன் பொருளை விளம்பரப்படுத்த செய்யும் தந்திரமாக இருக்கலாம்.  (https://www.youtube.com/watch?v=kaDYbYWV7hI&t=1s)

3. இதை நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான். சென்னையில் இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு ஒருவர் ரிவியூ எழுதியிருக்கிறார். ஒரு நாள் 'உள்ளே' இருந்த ஒரு இளைஞன் கராராக 4 ஸ்டார் ரேட்டிங்க் கொடுத்திருந்தாலும், அதை மஸ்ட் விசிட் ப்ளேஸ் என்கிறார். :)

 அனுபவம் என்பது எல்லாம் பகிர்வதற்கே 



இவற்றில் வியக்க ஏதுமில்லை, நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் இது. கடவுள் கொள்கையில் இருந்து, மனிதமைய சிந்தனைக்கு வந்து இப்போது டேட்டாயிஸத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். டேட்டாவே நமது முடிவுகளில் பங்காற்றுகிறது, அந்த பெரும் டேட்டா உருவாக நாம் பங்காற்றுகிறோம்.

உடை மற்றும் பொருட்கள் ரிவியூ பார்த்து வாங்குவது ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கூட திருணம் போன்ற முக்கிய முடிவுகளும் அவர்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்க்கள் பொருத்துதான் முடிவு செய்யப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ள இயலாததால இருக்கும். ஆனால் அது இப்போது நடைமுறையாகிவிட்டது.  நாம் ப்ரைவஸியைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிம்போது கிடைக்கும் வசதிகள் மிகப் பெரிதாக இருக்கின்றன. ஆனால் இதனால் வரும் பிரச்சனைகளும் புதியவை.

Invisible Hand of Market, அதாவது சந்தை தேவைக்கேற்ப தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் என்று சொல்லப்படுவதைப் போல இப்போது டேட்டா அந்த வேலையைச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. நாமும் தினம்தோரும் கொடுத்துவாங்கிக்கொண்டிருக்கிறோம். நமது முடிவுகளை அது பார்த்துக்கொள்கிறது.

இதில் இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதை அறிந்த நிறுவனங்களும்  இயக்கங்களும் கட்சிகளும் இதில்  தீவிரமாக இயங்குகின்றன, பெரும் பணம் செலவளிக்கின்றன பல சமயங்களில் செயற்கையான மோசடிகளிளும் இறங்குகின்றன. Click Farm, Fake review எல்லாம் நாம் அறியாமல் நம் சிந்தனையை மாற்றும் மோசடிகள். சமூக வலைத்தளங்க்களில் ட்ரெண்ட் கவனிப்பது என்பதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ட்ரெண்ட் செய்வோம் என்று செயல்படுவது டேட்டாயிஸத்தின் பலனை அழிக்கும் மோசடி, ஆனால் இதை எல்லாத்தரப்பும் வெளிப்படையாகச் செய்கின்றன என்பது நாம் பார்க்கும் தினசரிச் செய்தி.

இவற்றைப் புரிந்துகொள்ள ஒரு விசாலமான பார்வை தேவையாக இருக்கிறது. முன்னெப்போதையும் விட நமக்கு வரலாற்று உணர்வும் அதற்கு மனிதன் இந்த இடத்துக்கு எப்படி வந்தான் என்ற கதையும் தேவைப்படுகிறது.
டெக்னாலஜி வளர்ச்சியை எதிர்கொள்வது மனிதனின் கதையை தெரிந்துகொள்ளாமல் சாத்தியம் இல்லை.

யுவால் மட்டுமல்ல Francis Fukuyama, Jared Diamond  உள்ளிட்டோர் அந்த மிகப் பெரிய காலத்தின் கதையை நமக்குச் சொல்கிறார்கள். இவற்றை அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால் கண்டிப்பாக இவர்கள் அளிக்கும் கருவிகளை குறைத்துமதிப்பிட முடியாது. யுவால் உருவாக்கும் விவாதங்களின் நோக்கம் கலகமோ அல்லது நல்லது கெட்டது சொல்வதோ இல்லை, ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவது மட்டுமே.

அமெரிக்காவில் இருந்த மிகப் பெரிய விலங்கினங்கள் எப்படி அழிந்தன, பொதுவாகவே உயிரிங்களுக்கு அவற்றின் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பரிணாம வளர்ச்சியிலேயே வழி இருக்கும். இருந்தும் எப்படி அழிந்தது என ஒரு கேள்வி எழுந்தது. மனிதனின் திடீர் அறிவு வளர்ச்சியும், பயணங்களால் அவர்கள் திடீரென அங்கு வந்ததும், அந்தப் பெரிய மிருகங்களுக்கு பரிணாம மாற்றத்துக்கு நேரம் இல்லாமல் செய்துவிட்டது. எதிர்பாராத இந்த எதிரியை அவை எதிர்கொள்ளமுடியாமல் அழிந்தன.

மனிதகுலத்தின் முன்னும் அப்படி திடீரென தொழில் நுட்பம் வளர்கிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இங்கு வந்தோம் என்பது தெரிந்துகொள்வது அவசியம்.  ஏனென்றால் மனித குலத்தின் அதாவது சேப்பியனின் இயல்பு சவால்களில் ஆச்சர்யப்பட்டு நிற்பது அல்ல, அதன்மூலம் தன்னை மாற்றிக்கொண்டு அவற்றை எதிர்கொள்வது.




சுட்டி: