Unordered List

09 நவம்பர் 2011

சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்

மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.

மழையிலும் கடமையில் ஆட்டோக்காரர்கள்

சாலை முழுவதும் தண்ணீர்



இரவில் மழைநாள்

நொய்ந்த வீடு,
நொய்ந்த கதவு,
நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம்,
நொய்ந்த உடல்,
நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம்
-இவற்றைக் புடைத்து நொறுக்கிவிடுவான்.

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
நமக்குத் தோழனாகிவிடுவான்

மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.



நான் கிளிக்கிய படங்கள். பாரதியின் வரிகளோடு