Unordered List

28 டிசம்பர் 2017

ரஜினியைக் கவனித்தல்

காலையில் இந்தச் செய்தித்தாள்களின் படங்களை  நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. நமக்குப்பிடித்த ஒருவரை உலகமே முக்கியமாகப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சி அது. ஆனால் நேற்று ரஜினி பேசிய உரையின் பதினாலு நிமிடங்களில் வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே அரசியலைப் பற்றி பேசினார், அது  முக்கிய பத்திரிக்கைகளின் தலைப்புச்செய்தியாக இருக்கிறது. மக்கள் தங்கள் கேட்க விரும்புவதைக் கேட்கிறார்கள்



தற்போதைய அரசியல் சூழலில் தங்கள் குரலைப் பதிவு செய்ய பலரும் பொதுக்கூட்டம், ப்ரஸ் மீட், பத்திரிக்கைகள் பேட்டி மற்றும் சமூக வலைத்தள நடவடிக்கைகள் என கடும் முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில் வேறொரு நிகழ்ச்சியில் வெறும் 4 நிமிடம் பேசியது இவ்வளவு பரபரப்பாகி இருப்பது ரஜினியின் செல்வாக்கை காட்டுகிறது.





"இந்த முறையும் ஏமாற்றி விடுவார், வெறுப்பாக இருக்கிறது" என்றும் சில குரல்கள். "அவர் வரவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் வந்தால் உடனடியாக ஆதரிப்பீர்களா" என்று கேட்டால் பதிலில்லை. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு வெறுப்படைய காரணம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஜினி சொல்வதை சொல்லட்டும், அதை கவனிக்கலாம் எனவே பொதுவாக மக்கள் ஆர்வத்துடன் இருப்பதை கவனிக்க முடிகிறது. அவர் என்ன சொல்லவேண்டும் என முடிவு செய்து காத்திருப்பவர்கள் தான் என்ன நடந்தாலும் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒருமுறை பாகிஸ்தான் நமது இந்திய ராணுவ வீரர்கள் சிலரை முறை தவறிக்கொலை செய்தது; இந்தியாவைக் கடுமையாகச் சீண்டும் செயல் அது. உடனே பதிலடி கொடுக்கப்போகிறோமா, என்ன செய்யப்பபோகிறோம் என இந்திய ராணுவத் துணைத் தளபதியிடம் கேட்கப்பட்டது. அந்த சூழலில் அவர் சொன்ன பதில் மிக உறுதியானது.


"பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை நாம் நினைக்கும் இடத்தில், நாம் நினைக்கும் நேரத்தில் கொடுப்போம் என்றார். (will respond to Pakistan at time and place of our choosing). எதிரி எதிர்பார்க்கும் செயலைத் தவிர்த்து, நமது செயல்பாட்டை முடிவெடுப்பதை நாமாகவே செய்வதில் இருப்பதில் இருக்கும் உறுதி அது.

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி எழுப்படும் எதிர்மறைக் கேள்விகள், கிண்டல்கள் அனைத்தும் அவரை சீண்டும் செயல்கள் தான். அவர்களுக்கு இன்று ரஜினியும் அப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார்.

01 அக்டோபர் 2017

கிரிக்கெட்டை முன்னறிதல்

நான் TV பார்ப்பதில்லை. தேவையென்றால் இண்டெர்நெட்டில் அவ்வப்போது சினிமா பார்த்துக்கொள்வது வசதி; நேரமும் மிச்சம். இதில் இன்னொரு ஆச்சர்ய அட்வாண்டேஜ் இருப்பதை இப்போது அறிந்தேன்,

டிவியில் பார்க்காமல் hotstarல் கிரிக்கெட் பார்ப்பது ஒரு சயிண்ஸ் பிக்சன் உலகுக்குள்  வாழும் அனுபவத்தைத் தரவல்லது. பரபரப்பாக டோனி பந்தை எதிர்கொள்ளும் முன்னரே அவர் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடிக்கப்போகிறாரா அல்லது அவுட் ஆகப் போகிறாரா எனத் தெரிந்து விடுவது நமக்கு ஒரு சூப்பர் பவர் இருக்கும் உணர்வைத் தருகிறது.

ஆனால் அடுத்த 5 நிமிடத்துக்கு என்ன நடக்கும் என தெரிந்துகொண்டு பார்க்கும் வசதி Hotstarல் இலவசமாகப் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான். so called "Premium members"களுக்கு இந்த வசதி இல்லையாம். அடப் பாவமே..

முழு அனுபவம் பெற hotstar பார்க்கும்போது ப்ரொவுசரின் இன்னொரு tabல் cricinfo வைத்துக்கொள்ளவும்.


14 ஏப்ரல் 2017

சாகசம் என்றால்

சாகசம் என்றால்  துப்பறிதலும்,  கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு. 

சணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அல்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும். 

இதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும்,  எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.

முதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும். 
கண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும். 

எறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. 

புற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும். 

சிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.

அன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து  தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது. 

எறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள். 

அந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள். 

வழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத்த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.

எறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை.  ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை. 

ஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக்  கொல்லத்  தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது. 

அந்தக் பரபரப்பு  கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா? எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.


சமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.


புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து

நிம்மதியாக இருக்கிறேன்.

கொசு விரட்டிகள்

கொசுக்களை விரட்டி விடுகின்றன.

ஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.

ஒரு கொசு பறந்து போக

நானும் பறந்து போய்

சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…

இன்பம் என் உள்ளத்தில் "பட்" என்றுதெறிக்கிறது.

" பட்…  பட்…  பட்பட்பட்…."

  இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி

  ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து

  "தயை"…  "தயை".. என்று கதறும்.

  கதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு

 " பட்..பட்..பட்பட்…. "  " பட்பட்..பட்"

 பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவதுபோலே

மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.

என் வீட்டின் முன்னே

குளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.

கொசுவீர் !

பிறந்து எழுந்து திரண்டு வருக !


கவிதையின் தலைப்பு "எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்".



கவிதையின் கடைசியில் "தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக" என்ற வரி

என்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது