Unordered List

22 ஜூன் 2011

ரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்!

ஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை காப்பியடித்த ஒரு ஆங்கிலப் படம் நமது கவனத்திற்கு வந்துள்ளது.
தமிழ் படத்தை காப்பியடித்த அந்த ஆங்கிலப் படம் இதுதான். A History of Voilence (https://en.wikipedia.org/wiki/A_History_of_Violence).
இது நமது பாட்சா படத்தின் அப்பட்டமான காப்பி. உலகப் புகழ் பெற்ற "உள்ளே போ" காட்சிகூட அப்படியே உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :)
இந்தக் கதையைக் கேளுங்கள்..
ஒருஊரில் ஒருவன் அமைதியாக ஒரு ஹோட்டல் நடத்திவருகிறான். பாட்சவில் ஆட்டோ..
அப்போது சில ரௌடிகள் வம்பிழுக்க அமைதியாக இருக்கிறான். பின் வேறு வழியின்றி அவர்களை அடிக்கிறான். முதல் பிரச்சனை..
பின்னே என்ன? ரௌடிகள் அவன் வீட்டின்முன்னே வருகிறார்கள். அவர்கள் கடத்தி வருவது அவனது மகனை. (பாட்சாவில் தங்கச்சியை) அவனை வைத்து மிரட்டுகிறார்கள். ஹீரோ அங்கு வருகிறார். ஹீரோவின் மனைவியும் பையனும் வில்லன்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அப்போது ஹீரோவின் பார்வையில் ஒரு மாற்றம்..
பிறகு என்ன? அதே தான்.. "உள்ளே போ!!".
நம்பமுடியாமல் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்க ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்..
இப்படிப் போகிறது இந்தப் படம்.
பாட்சா வந்தது 1995 -இல், இந்தப் படம் வந்தது 2005 இல்.
தலைவர் படத்தை இப்படி காப்பியடித்து வைத்திருக்கிறார்களே இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையா?
யாராவது இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?
--------
இது இப்படி இருக்க இப்போது வந்துள்ள "KUNG FU PANDA 2" கூட ரஜினி படத்தின் காப்பி என்பதுதான் இப்போதுள்ள பரபரப்பான பேச்சு.
இது எந்த ரஜினி படம் என்று நான் சொல்லப்போவதில்லை. நீங்களே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்
இந்தக் கதை என்னவென்றால்..
ஊரில் பன்ச் டைலாக் பேசிக்கொண்டு ஜாலியாக திரியும் ஹீரோவுக்கு திடீரென தன்னை வளர்த்தது தன் உண்மையான அப்பா இல்லை என்று தெரிகிறது. எனவே அவனது உண்மையான பெற்றோர் யாருன்று தேட ஆரம்பிக்கிறார்.
அப்போது பக்கத்து ஊரில் பிரச்சனை செய்யும் வில்லனைப் பார்க்கிறார். அந்த வில்லன்தான் ஹீரோ அவரது பெற்றோரைப் பிரிய காரணமானவர். சட்டென பிளாஷ்பாக் அவருக்கு ஞாபகம் வருகிறது..
பிறகென்ன.. பழிக்குப் பழி..
இடையிடையில் ஆன்மீக தத்துவ வசனங்கள், வில்லன் எரியும் வெடிகுண்டை கையில் பிடித்து மறுபடி வில்லன் மீதே எறியும் காட்சிகள் என ஒரே பரபரப்புதான்
இது என்னபடம் என்று யோசித்தால் பல ரஜினி படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டுகிறது.
எனக்குத் தெரிந்து ரஜினி இதுபோன்ற கதையில் ஒரு பத்து படத்திலாவது நடித்திருப்பார் என நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்தனை படங்கள் ஞாபகம் வருகிறது?
-- இதன் மூலம் நாம் சொல்லவருவது என்னவென்றால்,எத்தனை பேர் காப்பியடித்தாலும் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை ஹாலிவூட்-க்கும் சொல்லிக்கொள்கிறோம். :)

20 ஜூன் 2011

பயணம் - ஏலகிரி

திடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.

சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.


சென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தமலை. சாலைகள் மிகவும் நன்றாகவேஉள்ளன. சாலையில் தெளிவான வழிகாட்டி பலககைகள் உள்ளதால் வழிகண்டுபிடிப்பது மிக எளிது. அதிகாலையில் கிளம்பினால் பகல் உணவுக்குசென்றுவிடலாம்.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச் சாலையில் ஒட்டுவதால் எனக்கு சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது. மலைச் சாலை மிகவும் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான அறிவுப்புப் பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல அனுபவம் தான்.


நல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும் வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம் முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.

எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.

உண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில் போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம் அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.

ஏலகிரியை அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே, இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள் மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.

நல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி படகுசவாரியைத் தவிர சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.

உண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக நினைக்க முடியவில்லை. ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.

திரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.

அங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம் எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

மலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு பயணம் சென்று வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிப் பார்க்க ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.

ஏலகிரி.. "சும்மா" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.