Unordered List

10 அக்டோபர் 2024

வேட்டையனும் ஜெயிலரும்

நான் பொதுவாகவே non-fiction புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் உடையவன், fictionம் வாசிப்பதுண்டு. இரண்டுமே ஒவ்வொரு வகையில் நமக்குத் தேவை.

சினிமாவிலும் கதைசொல்லிகளும் இருக்கிறார்கள், கருத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சினிமா என்பது கதைசொல்லிகளுக்கான மீடியம். சமீபத்தில் வந்த லப்பர் பந்து நமக்கு பிடிப்பதற்குக்காரணம் அதில் அரசியல் தான் மையம் என்றாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதால் தான்.

சமீபத்திய ரஜினி படங்களில் ஜெயிலர் மிக பெரிய ஹிட் அடித்தற்குக் காரணம் நெல்சன் என்ற கதைசொல்லி உருவாக்கிய பாத்திரங்கள், அந்த கதை சொல்லல். சமீப காலங்களில் உருவான இயக்குனர்களில் முதன்மையானவர் நெல்சன். ஒருவேளை தமிழில் TopGun Maveric, john wick, breaking bad போன்ற படைப்புகள் வரவேண்டுமென்றால் நெல்சன் போன்றவர்களால் தான் அது வரமுடியும்.

இப்போது வேட்டையன் ட்ரைலர் பார்த்தபோது அந்தப் படத்தின் மீது எந்த ஆர்வமும் உருவாகவில்லை, மெதுவா பார்க்கலாம், அல்லது சாய்ஸில் விடலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று காலையில் ஆபீஸ் போனதுமே காலையில் மீட்டிங்கில் என் பாஸ் கேட்ட முதல் கேள்வி இங்கே என்ன பண்ணிட்டு இருக்க, படம் பார்க்க போகலையா என தான். பின்னர் பல நண்பர்கள் படம் எப்படி இருக்கு என கேட்க இன்னும் பார்க்கலை என்று சொல்லி சமாளித்து வந்த்தேன் 🙂



இப்பொது சில நல்லா இருக்கு பல கமெண்ட் பார்க்க மகிழ்சிதான். ஆனால் "ஜெயிலர் விட பெட்டர்" என பகீர் கமெண்டை தடாலடியாக சில ரஜினி ரசிகர்கள் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு வகை படங்கள். உங்களுக்கு இந்த வகை படங்கள் பிடிக்கும் என்றால் நல்லது, ஆனால் இது பிடிக்கும் என்பதற்காக ஜெயிலரைக் குறைப்பது தான் தவறான விஷயம். ரஜினி ரசிகர்கள் அதைச் செய்யக்கூடாது, மீடியா உருவாக்கும் இந்த trapல் மறந்தும் கால் வைக்கக்கூடாது.

நமது ரசனை நமக்காக இருக்கும்வரை தான் நாம் கலைக்காக செலவளிக்கும் நேரம் அர்த்தமுடையது

06 அக்டோபர் 2024

லப்பர் பந்து

பல நண்பர்கள் ரெகெமெண்ட் செய்து நேற்று தியேட்டரில் லப்பர் பந்து படம் பார்த்தேன். தியேட்டரில் நேற்று முழு கூட்டம், நான் பார்த்த தியேட்டரில் இரண்டாம் பகுதியில் மக்கள் ஆர்வமான சிரித்து கைதட்டி பார்த்தது உணர முடிந்தது.

படம் நல்லா இருக்கு என சொல்லும்/எழுதும் பலரும், இதில் கெத்து (தினேஷ்) கேரக்டர் தான் சிறப்பு, அவர் தான் ஹீரோ என சொல்வதை கவனிக்க முடிகிறது. ஆனால் அது மையம் இல்லை என்றே நினைக்கிறேன். வெங்கட் பிரபு ஸ்டைலில் theatre momentகளை ரசித்து நல்ல படம் என்று சொல்லும் ஒரு ரசனை உருவாகிவருவதன் விளைவு இது. இதில் விஜயகாந்த், கெத்து எல்லாமே சின்ன சுவாரஸ்யங்கள், தியேட்டர் மொமெண்டுகள் அவை படத்தை சுவாயஸ்படுத்துகின்றன அவ்வளவு தான்.

உதாரணமா விஜயகாந்த் இல்லாமல் அந்த இடத்தில் இன்னொரு நடிகர், உதாரணாமா முரளியோ வைத்திருந்தாலும் கேரக்டரிலோ அல்லது வசனத்திலோ கூட பெரிய மாற்றம் வந்திருக்காது.

சிஎஸ்கே ரெபெரென்ஸ் மற்றும் விஜயகாந்த் ரெபரென்ஸ் இரண்டுமே GOAT படம் விட இதில் இன்னும் கொஞ்சம் கவனிப்பட்டது. எங்கள் ஊரில் நானென்னால் ரஜினி ரசிகராக இருந்த பள்ளி காலத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் அவரை அண்ணன் என்ற இடத்தில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஒரு படத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் காட்டப்பட்டது மகிழ்ச்சி தான் ஆனால்,

விஜயகாந்த் ரசிகர் என சொல்லப்படுகிறது/காட்டப்படுகிறதே தவிர அந்த கேரக்டரில் விஜயகாந்தை பார்க்கமுடியவில்லை, ரஜினி ரசிகர்கள் கேரக்டரிலேயே ரஜினி பெர்சனாலிட்டி இருக்கும். அது போல சிலரைப் பார்த்ததுமே ரஜினி, விஜயகாந்த் அல்லது கமல் ரசிகர்கள் என கூட சொல்ல முடியும். இந்தப் படத்தில் அப்படி இல்லை.




அன்பு என்றெ கேரக்டர் என்ன செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை மற்றும் அரசியல். திரைக்கதையாகவும் அது அன்பு என்ன செய்கிறான் என்பதில் ஆரம்பித்து, அதில் தான் முடிகிறது. மிக நேரடியாக. படம் நல்லா இருக்கிறது என பாராட்டுவதோ, அல்லது விவாதத்துக்குறியது விமர்சிப்பததோ இதில் தான் இருக்கவேண்டும்.
அன்பு விட கெத்து கேரக்டர் மேல் கவனம் என்பது இந்த படம் சொல்லும் அரசியலை பார்க்கத் தயங்குவது/மறுப்பது தான்.

22 ஆகஸ்ட் 2024

Super Mario மற்றும் Prince of persia

Super Mario மற்றும் Prince of persia இவையிரண்டும் ஆரம்பகால கம்ப்யூட்டர் கேம்கள். நாங்கள் படித்த கம்ப்யூட்டர் செண்டர் கப்ம்யூட்டர்களில் ஒளித்துவைத்து கொஞ்சம் அனுமதி கேட்டு விளையாடி பழகியது.


ஆரம்பத்தில் prince விளையாடவே. பிடிக்கும் காரணம் prince of persia கொஞ்சம் மேம்பட்ட விளையாட்டு. அதன் அரபு இசை, கத்திச்சண்டை, கொஞ்சம் யோசிக்கவைக்கும் தடைகள் எல்லாம், ஒப்பிட mario கொஞ்சம் சின்னப்புள்ளதனமாக இருக்கும், அந்த கார்டூன் ஸ்டைல் இசை, தாவிச்செல்லும் கேம்ப்ளே என. ஆனால் இரண்டும் அந்த ஆரம்ப ஆர்வம் கடந்தபின் பார்த்தால் mario விளையாடுவதே ஜாலியா இருக்கும், அதுவே பெட்டர்.

அதற்குக் காரணம் இப்போது யோசித்துப்பார்த்தால் இவையிரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் இருக்கிறது.

Prince of persiaல் ஒவ்வொரு எதிரியையும் எதிர்கொண்டு சண்டைபோட்டு கொன்று தான் கடக்கமுடியும் அது மிக சுவாரஸ்யமான கத்திச்சண்டையாக இருக்கும் என்பது உண்மை தான், ஆனாலும் marioல் அந்த அவசியம் இல்லை, அவ்வப்போது சண்டை செய்யலாம் என்றாலும் பெரும்பாலும் எதிரிகள் மீது ஜப்ம் செய்து தாவிச் செல்லலாம், மிக க்யூட்டாக.

இன்றைய கனெக்டட் உலகில் பலரும் கொந்தளித்துக்கொண்டேயிருப்பதை கவனிக்க் முடிகிறது, ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படும் பரபரப்புகளை ஒன்றுவிடாமல் தங்கள் அறிவால், லாஜிகல் ஸிஸ்டத்தால் எதிர்கொண்டு கத்திச்சண்டையிடும் prince of pereia வழி அது. அது தவறல்ல, அது ஒரு தேர்வு. ஆனால் தினந்தோறும் கொந்தளிப்புக்கான உத்திரவாதம் அது.

இப்போதெல்லாம் ஏதாவது ஒரு பரபரப்பு நிகழும்போது அதைப்பற்றி காண்டெக்ஸ்ட் தெரியாமல் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது



உண்மையில் mario வழியே நம் கிட்னிக்கு நல்லது. பெரும்பாலான பரபரப்புகளை ஜம்ப் செய்து, நமக்கான பரபரப்பை மட்டும் செலக்ட் செய்வது.

20 ஏப்ரல் 2024

ஆர்வக்கோளாறு வாக்காளர்களும் privacy இழப்பும்

சமீபத்தில் திருச்சியில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தோம். சாமி தரிசனம் செய்யும்போது உள்ளே மொபைல் போன் கொண்டுபோகக்கூடாது என ஒரு அறிவிப்பு. செல்போன் அந்த 10 நிமிடம் வைத்திருக்க ஒரு போனுக்கு 30 ரூபாய், நாங்கள் கொடுத்த 4 போனையும் செங்கல் கட்டிபோல அடுக்கி ஒரு இரும்பு பொந்தில் வைத்தார்.

பார்த்துப் பார்த்து வாங்கிய, curved display இருக்கும் என்னுடைய புது விவோ போனை இப்படி செங்கல் போல இரும்பு பொந்தில் வைக்கிறாரே என சோகம் இருந்தாலும் கூட வந்த நண்பரின் ஐபோனுக்கே அதே ட்ரீட்மெண்ட் என்பது கொஞ்சம் ஆறுதல்.


என்ன கொடுமை இது பேசிக்கொண்டிருந்தோம், இந்த அளவு கூட மக்களின் sensibilityயை நம்ப முடியாதா என..
இது இப்போது ஏன் நினைவுக்கு வருது என்றால்



ஓட்டு போட போனவர்கள் ஓட்டு போடுவதை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது facebook live போடுவது என செய்யும் விடலைத்தனங்களை பார்க்கும்போது அடுத்த தேர்தலில் இங்கும் ஒரு 30 ரூபாய் செலவு + இரும்பு பெட்டி உரசலுக்குத்தான் நம்ம மக்கள் தயார் செய்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒரு உரிமை கிடைக்கும்போது அதை முடிந்த அளவு கீழே கொட்டி வீணடிப்பது தான் இது.


ரகசிய ஓட்டுபோடும் முறையை போட்டொ எடுப்பது எந்த வகையிலும் பெருமைக்குறியது அல்ல. அது 100% முட்டாள்தனம்


ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், அல்லது மிரட்டுபவர்களுக்கு எதிராக எந்தக் குரலுமற்ற மக்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பு இந்த ரகசிய வாக்கு முறை, இனிமே ஓட்டு போட்டு அதை வீடியோ எடுத்துக்காட்டு என அரசியல்வாதிகள் கேட்கவும் வழி உருவாகிறது. ஓட்டு போடும்போது செல்போன் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.


முன்பெல்லாம் ஓட்டு ஸ்லிப் அதற்கு ஒரு க்யூ என்பதெல்லாம் இல்லாமல் செல்போனில் டீடெயில் காட்டி ஸ்டைலாக செல்லும் வசதி வழக்கம்போல நம் மக்களின் ஆர்வக்கோளாரால் பறிபோகிறது.


அரசியல் திருவிழாவில் வெற்றி, தோல்வி, மரியாதையான தோல்வி, வரலாறு எல்லாமே அரசியல் தரப்புக்குத்தான். மக்கள் தரப்புக்கு மிச்சம் இருப்பது இந்தச் சின்ன privacy இதை இழக்கக்கூடாது எந்த காரணத்துக்காகவும்.

19 ஏப்ரல் 2024

ஓட்டு சச்சரவு

ஏழேகால் மணிக்கு நான் சென்றபோது கிட்டத்தட்ட ஏழு பேர் ஓட்டளிக்க வரிசையில் நின்றார்கள், நானும் இணைந்துகொண்டேன், அங்கு ஒரு சின்ன சச்சரவு.

வரிசை நகரவே இல்லை, இன்னும் யாரும் ஓட்டுபோட்டு வெளியே வரவில்லை, என்னானு பாருங்க என முன்னால் நின்றவர் அங்கு நின்ற  போலீஸிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். அதானே என்ன லேட்டு என நானும் உரையாடலில் கலந்துகொண்டேன். நாங்கள் நிற்கும்போதே கிட்டத்தட்ட இருபேர் அளவு பெரிதாகியது அந்தக் க்யூ. என்ன சார் இப்படி பண்றாங்களே என க்யூ போலவே கலந்துரையாடலும் பெரிதாகியது.

பின்னர் தான் தெரிந்தது முதலில் சென்ற ஒரு பாட்டியிடம் அடையாள அட்டை இல்லை என விவாதம் உள்ளே நடந்துகொண்டிருந்தது தான் அங்கு இன்னும் வாக்குப்பதிவு ஆரம்பிக்காததற்குக்காரணம் என. பாட்டிக்கும் சட்டத்துக்கும் நடந்த விவாதத்தில் சட்டம் வென்று அடையாள அட்டை வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டார்கள்.

வெளியே வந்த பாட்டியைப் பார்த்தபோது சட்டம் இந்த வயதோரிடம் இவ்வளவு கடுமைகாட்டவேண்டியதில்லை எனத்தோன்றியது. வாக்களர் அட்டைக்கு போட்டோ எடுக்கும் அரசு, அதைவைத்தே வருபவர்களை அடையாளம் காணலாம். ஒட்டளிக்க வருபவர்களிடம் இவ்வளவு கடுமை தேவையில்லை.

நல்லவேளையாக அங்கு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி இருக்க அங்கு அந்த பாட்டி கம்பீரமாக அமர, அவரை அழைத்துவந்தவர் ஐடி கார்டு எடுக்க வீட்டுக்குச் செல்ல அங்கு ஒரு சமரச நிலை உருவானது.  வீட்டுக்கு சென்றவரிடம் மறுபடி போன் செய்து பீரோவில் இருக்கும் ப்ளூ கலர் பர்சில் இருக்கிறது என கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த விவாதத்திலும் இந்த அட்வென்சரிலும் பாட்டிக்கு ஒரு பெருமிதம் இருப்பதாகவே தோன்றியது. சும்மா வந்து ஓட்டுப்போட்டு செல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது, அதில் மற்றவர்களுக்கு சொல்ல என்ன கதை தான் இருக்கிறது.

நமக்கும் போனதற்கு கொஞ்சம் நேரம் க்யூ நகராதது பற்றி கொஞ்சம் உரையாடல், பாட்டியின் அட்வென்சர் வேடிக்கை பார்த்தது என சின்னச் சின்னச் சுவாரஸ்யங்கள்.

வேறன்ன வேண்டும், அரசியல்வாதிகளின் திருவிழாவான  தேர்தலில் குரலற்ற பொதுமக்களுக்கு கிடைப்பது இதுபோன்ற சின்னச் சின்னத் தருணங்கள் தானே