Unordered List

07 நவம்பர் 2011

குருவிக் கதை

சென்னை மெட்ரோ ரயில் வேலைக்காக மிச்சமிருந்த அந்த மரமும் வெட்டப் பட்டபோது தான் அந்தக் குருவி யோசிக்க ஆரம்பித்தது.

அந்தக் குருவி மட்டும் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க? அந்தக் குருவிக்கு மட்டும் மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது.

குருவி புது இடத்துக்கு குடிபோக முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் பேசுவதை கவனித்தது. அவனுக்கு குருவிஎன்றால் மிக இஷ்டமாம். அப்போது முடிவுசெய்தது போனால் அவன் வீட்டுக்குத் தான் குடிபோவது என்று. அடுத்தநாள் மாலை அவன்வீட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது.

குருவிக்குத் தெரியவில்லை. அவன் குருவிஎன்றால் தனக்கு இஷ்டம் என்று சொன்னதின் உண்மையான அர்த்தம்.


கதையின் நீதி:

யாருக்கு எது எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு தெரிஞ்சாப் போதும். அதுக்கு மேல தெரிஞ்சா டண்டணக்கா தான்.



இன்னொரு கதை:
முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?