Unordered List

11 ஜனவரி 2015

சென்னையில் ஜெயமோகன் விழா

தமிழிலக்கிய உலகின் கவனம் இன்று குவிந்திருக்கும் இடம் சென்னை. இன்று மாலை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நடத்தும் விழா நடக்கவிருப்பது தி நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில்.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளார் பூமணிக்கு பாராட்டு விழா. அஞ்ஞாடி நாவலுக்காக விருது பெற்றபின் பூமணி கலந்து கொள்ளும் விழா. எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் விழா. எனவே செறிவான இலக்கிய அனுபவத்துக்கு உத்திரவாதம்.

விஷ்ணுபுரம் விருது என்று ஒன்று உருவானபோதே தமிழிலக்கிய உலகில் அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. விருதுகள் பற்றிய அவநம்பிக்கையும் விமர்சனங்ளும் மட்டுமே விரவியிருந்த சூழலில் அதற்க்குத் ஒரு தீர்வாக ஒரு நம்பகமான விருதை அளிப்பதாக விஷ்ணுபுரம் அமைப்பு அறிவித்தபோது பல அதிர்வலைகளை உருவாக்கியது, கூடவே பெரும் நம்பிக்கையையும்.இந்த வருடம் சாகித்ய அடாடமி பெரும் எழுத்தாளார் பூமணி 2011 ஆண்டே விஷ்ணுபுரம் விருது பெற்றிருகிறார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

இன்று மாலையில் செறிவான ஒரு இலக்கிய கொண்டாட்டம். சென்னை வாழ் வாசகர்கள் தவற விடக்கூடாத நிகழ்வு.

http://www.jeyamohan.in/69258

நாள் 11- 1-2015 ஞாயிறு
இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்
ஜி என் செட்டி சாலை, தி நகர்
, சென்னை
நேரம் மாலை ஐந்துமணி

09 ஜனவரி 2015

அஞ்சலக அட்வென்சர்

எதிர்பார்த்ததை விட பரபரப்பாகவே இருந்தது தபால் அலுவலகம். அத்தனைக் கவுண்ட்டர்களிலும் வாடிக்கையாளர்கள். ஒரு அரசுத்துறை அலுவலகத்தில் பரபரப்பாக வேலை நடப்பதை பார்பதும் ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் அது மட்டும் போதாதே, நான் வந்த வேலையும் நடக்க வேண்டும் அல்லவா.

நான் ஒவ்வொரு கவுண்டராக பார்த்துக்கொண்டே சென்றேன், எங்கு நான் கேட்கவேண்டுமென பார்த்துக்கொண்டே. எதிலுமே நான் வந்த வேலை முடியாது என்று தெரிந்தது. சரி நான் எதற்கு அந்த தபால் அலுவகத்துக்கு வந்தேன். ஒரு அஞ்சல் உறை வாங்கத்தான். 

ஆனால் அந்த அலுவலகத்தில் அஞ்சல் சம்பத்தமான பணிகளைத்தவிர மற்றவற்றில் அனைவரும் மூழ்கியிருந்தனர். சற்று நேரத்துக்குப்பிறகு ஒரு ஊழியரிம் கேட்டு அஞ்சல் சம்பந்தமான விஷயங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் கூண்டு மாதிரி இருக்கும் ஒதுக்குப்புறமான ஒரு அறையக்காட்டினார். 

என்னடா இது அஞ்சல் அலுவலத்தில், அஞ்சல் துறைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டு அந்தக் கூண்டுக்குள் எட்டிப்பார்த்தால் யாரும் இல்லை. 

என்ன செய்வதனத் தெரியாமல் சற்று நேரம் சுற்றியபிறகு ஒருவரைக் கண்டுபிடித்தேன். ஒரு உயரதிகாரி தோற்றத்தைக்கொண்டிருந்தார். நான் அஞ்சல் உறையக்கேட்டதும் சற்று யோசித்துவிட்டு அதே கூண்டைக்காட்டி அதில் யாரும் இல்லையென்றும் தெரிந்துகொண்டார். 

இங்கு வந்து ஏன் இவன் இதைக்கேட்கிறான் என அவரது முக பாவனை சொன்னலும் அவரே வந்து எடுத்துக்கொடுக்க தவறவில்லை. உயரதிகாரிக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு கிளம்பினேன். வேலை இனிதே நிறைவடைந்தது.

நான் போனது மதிய உணவு நேரமாக இருந்ததால் அங்கிருந்தவர் சாப்பிடப்போயிருக்கலாம், சென்னை அண்ணா சாலையில், அவ்வளவு முக்கியமாக இடத்தில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திலியே, சேமிப்புத் துறைக்கு இடையே  இருக்கும் அஞ்சல் துறையக் கண்டு பிடித்தது ஒரு நிஜமான சாகசம் தான்.