Unordered List

10 மே 2011

தண்டனையா அல்லது தண்ட செலவா.. ஒரு பார்வை

உலகளாவிக கொண்டாட்டங்கள். பல அரசாங்ககளின் நிம்மதிப் பெருமூச்சுக்கள், மகிழ்ச்சி அறிக்கைகள், மற்றும் எண்ணிலடங்கா சர்ச்சைகள்.

ஒரு 54 வயது மனிதர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இந்தத் தண்டனை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இது அமெரிக்கா பாதுகாப்புத் துறைகளின் மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டப் படுகிறது.



ஒசாமா மிக கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக பல வருடங்கள் முன்பே செய்திகள் வந்திருந்தன. அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகத் தெரிகிறது. உடலின் பல பகுதிகளில் பல கடுமையான காயங்கள் இருந்துள்ளன.

அந்தச் செய்திகளை உண்மையென எடுத்துக் கொண்டால் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் அவரது மரணம் சமீபத்தில் தான் இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கொல்ல ஏன் அமெரிக்க இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்? ஏன் இவ்வளவு செலவளித்திருக்க வேண்டும்?

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் உடல் நிலையோடுதான் அவர் இருந்தாரா என்பதும் ஒரு பதிலறியமுடியாத ஒரு கேள்வி. அவர் அப்படி அறியமுடியாத மன/உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தத் தண்டனை என்பதே கேள்விகுறியதாய் ஆகிவிடாதா?

இணையம் மற்றும் தொடர்பு கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து அவர் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தாரா என்பதும் நம்முன் இருக்கும் அடுத்த கேள்வி.

அப்படியென்றால், இதில் ஒரு சிலரின் மரணம் என்பதைவிட பெரிய விஷயம் ஒன்றும் இல்லையென்று முடிவுசெய்துவிடலாமா?

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு தேவையில்லாத நடவடிக்கை எனலாமா?


அப்படி செய்யமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏன்.

இதற்கு கிடைத்துள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டையும் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. இருவரும் அவரை ஒரு தனி மனிதராகப் பார்க்கவில்லை.

அவர் ஒரு உணர்ச்சியின், ஒரு இயக்கத்தின் குறியீடு. அவரே ஒரு இயக்கம். அவர் தனிமனிதன் என்ற நிலையை எப்போதோ கடந்துவிட்டார்.

மனிதர்கள் சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். சித்தாந்தங்களுக்கு சீடர்கள் உருவாகிறார்கள். உருவாக்கியவர் ஒரு அமைப்பாக/ குறியீடாக ஆகிறார். அந்தக் குறியீடு உருவாக்கியவரைவிட பெரிதாக ஆகிறது.

இனிமேல் அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் பெயரே போதும் எல்லா செயல்களும் செய்ய. உண்மையில் அவரே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்த அமைப்பின் மீதுதான்.

இந்த அளவில் அமெரிக்க தண்டனை கொடுத்தது அமெரிக்காவுக்கு வெற்றிஎனவே கொள்ளவேண்டும், தண்டனை பெற்றவர் அதை முழுவதும் அறியும் நிலையில் இல்லாமல் இருந்திருந்திருந்தாலும்.