Unordered List

25 மார்ச் 2011

வேலைக்குப்பின் கூலி - தேர்தல் ஆணையம் கண்டிப்பு


தமிழகமெங்கும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யும் காட்சிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருகின்றன.



பணம் பட்டுவாடா, பறிமுதல், தடை என பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.




பணமோ அல்லது பொருளோ வாக்காளர்களுக்கு கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே பிரச்சனை இல்லாதபொழுது ஏன் இது தடுக்கப் படுகிறது என்று நம்மிடம் சிலர் சந்தேகம் எழுப்பினர்.



இலவசம் கொடுப்பது ஏன் தேர்த்தல் ஆணையத்தால் தடைசெய்யப் படுகிறது என்று நமக்கும் தெளிவாகத் தெரியவில்லை.



இப்படி புரிந்து கொள்ளலாமா?



வாக்களிப்பதற்காக இலவசம் கொடுத்தால் தவறு என்று இருக்குமோ? ஆனால் இதைவிட விலை உயர்ந்த பொருட்களை தங்களுக்கு வாக்களித்தால் தருவதாக நேரடியாகவே சொல்லப்படுகிறதே. எனவே வாக்களித்தால் இலவசம் என்பது தவறு இல்லை போலத்தான் தெரிகிறது. அப்படியென்றால் எது தவறு?


.
சரி.. இப்படி புரிந்து கொள்ளலாம்.



வாக்களர்களுக்கு பணம் அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பே கொடுத்தால் அது குற்றம். அதையே அவர்கள் வாக்களித்து வேட்பாளர் வென்றபிறகு கொடுத்தால் அது முறையானது.



ஏன் இப்படி இருக்கிறது? அதற்கும் காரணம் இருக்கும்.



ஏனென்றால் பொருளை வாங்கிவிட்டு மக்கள் ஒட்டு போடாமல் இருந்துவிட்டால் பணம் கொடுத்தவர் பாவம் ஏமாந்துவிடுவார் அல்லவா?
அதாவது வேலையை செய்யும் முன் ஊதியம் பெறுவது தவறு என ஆணையம் சொல்கிறது போலும்.



நியாயம் தான்.

21 மார்ச் 2011

ஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்...

அவர் நல்லவர் என்பதனால் தான் ஏமாற்றப்பட்டார் என்பது ஒரு தரப்பு. நல்லவர்கள் ஏமாற்றப்படுவது ஒன்றும் புதிதில்லையே என்பது அவர்கள் வாதம்.


அவர் ஏமாந்தததினால் தான் நல்லவர் ஆனார் என்பது மற்றொரு தரப்பு. ஏமாளியாக இருப்பதே நல்லவராக இருப்பதற்கான தகுதி என்பது இவர்கள் வாதம். பொதுமக்களும் மற்றும் எல்லாக் கட்சியினரும் அவர் மீது காட்டும் திடீர் பாசமே இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம்.


உண்மையில் ஏமாற்றப்பட்டது அவரில்லை. அவர் தான் அவரை நம்பிக்கொண்டிருப்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது இன்னொரு தரப்பு.


ஏமாறவும் இல்லை.. ஏமாற்றவும் இல்லை... அவர் விரும்பியது இதைத்தான். இது தான் அவரது மாஸ்டர் மூவ் என்பது இன்னொரு கருத்து.


எப்போதும் ஏமாறாதவர்கள் பத்திரிக்கைகள் தான் என்பது வல்லுனர்களின் கருத்து.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!!!



........................................


நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஜெயித்திருந்தால் அது ஆஸ்திரேலியாவுடன் விளயாடவேண்டியிருந்திருக்கும. தோற்றதனால் அது பாகிஸ்தானுடன் விளையாடப் போகிறது. எனவே இது அந்த அணிக்கு வருத்தப்படவேண்டிய தோல்வியில்லை.



இதில் தோற்றிருந்தால் சிறிலங்காவுடன் விளையாடியிருக்கவேண்டிய இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடப் போகிறது.



உண்மையில் நேற்றைய போட்டியில் தோற்றது யார் என வரும் வியாழக்கிழமைதான் தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

17 மார்ச் 2011

Dhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..


"Captain Cool" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தகட்ட திட்டம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.





இப்போது இந்தியா வித விதமாக வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு சச்சினையும் நம்மையும் ராக்கிங் செய்துவருவதால் சென்னையில் நடக்கும் போட்டிக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும் என்று ஒரு உளவுத்துறை அறிக்கை சொல்லவதாக சொல்லப்படுகிறது.



இதனால் தோனி அதிரடி முடிவுகள் எடுத்துள்ளதாக செய்திகள் கசிகின்றன..




விளையாடத் தெரிந்தவர்களே விளையாடுவது மிகவும் விளையாட்டுத் தனமானது என டோனி அந்த முடிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த முடிவை தெரிந்து கொள்ளும் முன் கொஞ்சம் அவரின் சமீபத்திய நடவடிக்கைகளை புரிந்துகொள்வது நலம்.

"அஷ்வின் நன்றாக விளையாடுபவர். அவரை மீண்டும் விளையாட வைப்பதில் அர்த்தம் இல்லை. பியுஷ் சாவ்லா தான் சரியாக விளையாடவில்லை எனவே அவருக்குத் தான் விளையாட்டின் மூலம் பயிற்சி தர வேண்டும் என அவர் கூறியது குறிப்பிடத் தக்கது.



இதற்கு ஆதாரமாக பியுஷ் சாவ்லா கேவலமாக விளையாடிய இரண்டு போட்டிகளின் score card -களையும் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

(அதேபோல் கேவலமாக விளையாடும் ஸ்ரீசாந்த்-க்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் முகம் தோனிக்கு பிடிக்கணும் இல்ல.. அதுக்கு மேல சொல்லற பேச்சு கேக்குறதில்லை..)

தோனியின் இந்த வியூகம் எதிர் அணியினரை வெகுவாக குழப்பும் என இந்திய பத்திரிக்கைகளால் பாராட்டப் பட்டது.

இந்த வியூகத்தின் தொடர்ச்சியாகவே அன்று மிக கேவலமாக பந்து வீசிய ஆசிஸ் நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் வாய்ப்பு கொடுக்கப் பட்டது. நன்றாக விளையாடுபவர்களுக்கே வாய்ப்பு என்ற சிந்தனையை டோனி தகர்த்து வருவது அறிவு ஜீவிகளால் பெரிதும் பாராட்டப் படுகிறது.

டோனி அடுத்து என்ன பேட்டி கொடுப்பார் என்று வெகுவாக எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவர் கொடுத்த அடுத்த பேட்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

ஜெயிக்கவேண்டிய போட்டிகளைக் கூட தோற்பதில் கில்லாடியான தென்னப்பிரிகாவிடமே ஒரு அருமையான போட்டியில் தோற்றபின் உடனடியாக பின்வருமாறு பேட்டியளித்தார்.


"வீரர்கள் மக்களுக்காக(கூட்டத்திற்காக) விளையாடக் கூடாது. எல்லோரும் 4 மற்றும் 6 . அடிக்க முயற்சிக்க கூடாது. 40 ஓவர் பின்னாலும் பொறுமையாக மொக்கையை போடவேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களை நோக்கி கோபமாகக் கூறினார்.

"எப்படி விளையாட வேண்டும் என்று எதற்கு நமக்கு சொல்லுகிறார் என தொலைக் காட்சியில் பார்த்த பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக,

"கிரிக்கெட் விளையாடுவது எப்படி" என்று தினமும் காலை டோனி தொலைகாட்சியில் தோன்றி விளக்கம் அளிப்பார் என்றும் செய்திகள் வருகின்றன.



இப்போது புரிகிறதா வியூகம்..

அதாவது முதலில் நன்றாக விளையாடுபர்களுக்கு ஓய்வு. மொக்கையாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு பின்பு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கம்.


ஆம்.. அதே தான்..

"பார்க்கவரும் மக்கள் சிலருக்கு விளையாட வாய்ப்பு!!!!"


இதன் மூலம் எதிர் அணியினரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்துவிடலாம்.. What An IDEA Dhoni Jii...

அடுத்த போட்டி சென்னையில் எனபதால் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதை தவறவிட விரும்பாதவர்கள் சேப்பாக்கம் நோக்கி திரண்டு வருமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்

தகுதி என்னவென்றா கேட்கிறீர்கள்? சற்று ரிஸ்க் எடுத்து பியுஷ் சாவ்லா மற்றும் ஆசிஷ் நெஹ்ரா முகத்தை சற்று உற்றுப் பார்க்கவும். உங்கள் முகம் அதுபோல அப்பாவியாக இருந்தால் வாய்ப்பு அதிகம்.

தப்பித் தவறி ஸ்ரீசாந்த் போல இருந்தால்... சாரி..

திரண்டு வருவீர்... அணியில் இணைவீர்..



LINKS:

Chawla playing as he needs more practice: Dhoni



Play for the team, not the spectators: Dhoni to batsmen

14 மார்ச் 2011

சச்சின் - தோணி - குற்றம் எவருடையது?

"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல "

"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெயிக்க முடியல. மற்ற பிளேயர்ஸ் எல்லாம் வேஸ்ட். தோணி சரி இல்ல!! "

........................................................

இந்த இரண்டும் கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விவாதம். நானெல்லாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


உண்மையில் சச்சின் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறாரா?


அல்லது அணி திறமை இல்லாமல் இருக்கிறதா?



சச்சின் அடிக்கும் பெரும்பாலான போட்டிகள் ஏன் தோல்வியில் முடிகின்றன? அவர் நன்றாக விளையாடும் போட்டிகளில் ஏன் மற்றவர்கள் சாதாரணமாகக் கூட விளையாடுவதில்லை? தோணி ஏன் இப்படி முடிவுகளை எடுக்கிறார்?



சச்சின் இல்லாமலே பல போட்டிகளை வெல்லும் திறமையுள்ள இந்த அணி ஏன் சில போட்டிகளில் இப்படி சொதப்புகிறது?




யார் மீது குற்றம்?




சச்சின் இந்திய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். உண்மையில் கிரிக்கெட் தெரியாதவர்களுக்குக் கூட சச்சினைத் தெரியும் என்பது தான் அவரது புகழின் உச்சம். பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கோல்ப் தெரியாதவர்களுக்குக் கூட Michael Schumacher மற்றும் Tiger Woods தெரிவது போல.



சச்சின் நன்றாக விளையாடத் தொடங்கியதுமே, நமது அணி அவருக்கு எதிராக மனதளவில் விளையாடத் தொடங்கிவிடுகிறது.


இந்தியக் கேப்டனின் ஒரு முக்கியமான குறிக்கோள் சச்சின் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவது தான்.



சச்சின் கிளிக் ஆகும் போட்டிகளை விட அவர் சரியாக விளையாடாத போட்டிகளை ஜெயிக்கவைக்க கேப்டன் நினைப்பதை அவர்கள் உடல்மொழியை சற்று நோக்கினால் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஜெயித்தபின்னர் வழக்கமான ஒரு பேட்டி கொடுக்கப் படும்
"இந்திய அணி எந்த தனிமனிதரையும் நம்பி இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.. ".



இந்தப் போக்கு யார் கேப்டனாக வந்தாலும் மாறுவதில்லை. மாறப் போவதும் இல்லை. இது ஒரு பொது விதி.



தன்ராஜ் பிள்ளை புகழின் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ஹாக்கி அணி அவர்க்கு எதிராக விளையாடியதும் உண்டு.



விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான்.



எனவே சச்சினும் இந்தியக் அணியின் போக்கும் மாறப்போவதில்லை.




இது இயல்பான ஒன்று . எல்லாம் யார்மீதும் குற்றம் இல்லை.

சரி .....ரசிகர்களான நாம் என்ன இதுபோன்ற நிலையில் செய்யவது.

இருக்கவே இருக்கிறது முதலில் சொன்ன இரண்டு கட்சிகள். இதை எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு விவாதம் செய்ய வேண்டியது தான்.



இந்திய ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களாக இதைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.