அவர் நல்லவர் என்பதனால் தான் ஏமாற்றப்பட்டார் என்பது ஒரு தரப்பு. நல்லவர்கள் ஏமாற்றப்படுவது ஒன்றும் புதிதில்லையே என்பது அவர்கள் வாதம்.
அவர் ஏமாந்தததினால் தான் நல்லவர் ஆனார் என்பது மற்றொரு தரப்பு. ஏமாளியாக இருப்பதே நல்லவராக இருப்பதற்கான தகுதி என்பது இவர்கள் வாதம். பொதுமக்களும் மற்றும் எல்லாக் கட்சியினரும் அவர் மீது காட்டும் திடீர் பாசமே இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம்.
உண்மையில் ஏமாற்றப்பட்டது அவரில்லை. அவர் தான் அவரை நம்பிக்கொண்டிருப்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது இன்னொரு தரப்பு.
ஏமாறவும் இல்லை.. ஏமாற்றவும் இல்லை... அவர் விரும்பியது இதைத்தான். இது தான் அவரது மாஸ்டர் மூவ் என்பது இன்னொரு கருத்து.
எப்போதும் ஏமாறாதவர்கள் பத்திரிக்கைகள் தான் என்பது வல்லுனர்களின் கருத்து.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!!!
........................................
நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஜெயித்திருந்தால் அது ஆஸ்திரேலியாவுடன் விளயாடவேண்டியிருந்திருக்கும. தோற்றதனால் அது பாகிஸ்தானுடன் விளையாடப் போகிறது. எனவே இது அந்த அணிக்கு வருத்தப்படவேண்டிய தோல்வியில்லை.
இதில் தோற்றிருந்தால் சிறிலங்காவுடன் விளையாடியிருக்கவேண்டிய இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடப் போகிறது.
உண்மையில் நேற்றைய போட்டியில் தோற்றது யார் என வரும் வியாழக்கிழமைதான் தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.