Unordered List

20 நவம்பர் 2010

வா.... டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு

விஜய் ஆண்டனி-இன் லேட்டஸ்ட் அதிரடி இந்த "டக்குன்னு டக்குன்னு" பாடல். (உத்தமபுத்திரன் படம்). இன்று டிவி-இல் பாடலை பார்க்கும்போது மிகச் சாதாரணமாக தெரிகிறது... பாடலில் இருந்த அந்த துள்ளல், காட்சியில் இல்லையே..

இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் ஒரு பாடலாவது வெளிநாட்டு தெருவில் பாடுகிறார்கள். அகலமான அழகான தெருக்கள். நம்ம சென்னை ரோட்ல எடுத்தா romance ஏதாவது வருமா என்ன?

முன்பெல்லாம் நம்ம ஊரில் ambassador கார் மட்டுமே இருந்தபோது சினிமாவில் வெளிநாடுபோய் விதவிதமான கார்களை காட்டுவார்கள். அந்த கார்கள் எல்லாம் இப்போ நம்ம ஊருக்கே வந்துவிட்டது.

அதுபோல வெளிநாடு போன்ற தெருக்களும் நம்ம ஊருக்கு சீக்கிரம் வந்துவிடும் என்று நம்பலாமா? (ஒபாமாவே இந்திய ஒரு வளர்ந்த நாடுன்னு Certificate கொடுத்துட்டுபோனாறு இல்ல?)

எனக்கென்னவோ சென்னை ரோடெல்லாம் இப்போ இருக்கிற நிலைமையைப் பார்த்தால், இதெல்லாம் அதற்கான ஏற்பாடு தானோ என்று தோன்றுகிறது.

எதாவது கட்டிட வேலை நடக்கும் கட்டடத்திற்குள் போனால், எந்த நேரத்தில் எது தலையில் விழுமோ என ஒரு பதட்டத்தோடு போவோம் இல்லையா? அப்படித்தான் இருக்கு நம்ம சென்னை ரோடு இப்போ.


இதையெல்லாம் சகித்துக்கொண்டு ஏன் சென்னை மக்கள் இருக்கோம்? வேற எதுக்கு? NO PAIN.. NO GAIN. இந்த ரோடு வேலையெல்லாம் முடிச்சபிறகு நம்ம ரோடும் வெளிநாடு ரோடு போல மாறிவிடும்.

அப்புறம் நாம போகலாம், டக்குன்னு டக்குன்னு

நடக்குமா? :)


19 நவம்பர் 2010

நீங்க எந்தப் பக்கம்?


"அப்படின்னா உனக்கு Airtel-இன் புது ரிங் டோன் பிடிக்கணுமே ?" என்று அருகிலுருந்த நண்பன் வேகமாக கேட்டான்.

"நான் இன்னும் கேக்கலையே.. எப்படி கருத்து சொல்வது? என்னடா இவன் " என்று யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் அடுத்த கொக்கியைப் போட்டான்.

"உனக்கு அது பிடிக்கும்னா, அதுவும் பிடிக்கணும். ஏன்னா  அது ரஹ்மான் மியூசிக்!!!"
....
"எனக்கு AR Rahman music ரெம்பப் பிடிக்கும்.." டிவி-இல் வந்த ஒரு பாடலைப் பார்த்தபடியே ஒரு கமெண்ட் அடித்திருந்தேன். அதற்குத் தான் மேற்கண்ட கொக்கி கேள்வி.

அவன் இன்னும் விடுவதாக இல்லை. ரஹ்மானின் சில பாடல்களை சொல்லி, "இது பிடிக்குமா.. அது பிடிக்குமா.." என்று ஆரம்பித்து விட்டான். அதில் எனக்கு பிடிக்காத பல பாடல்களும் இருந்தன.

"அதெப்படி சொல்ல முடியும். எனக்கு அவர் இசை பிடிக்கும். ஆனால் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்று சத்தியமெல்லாம் செய்ய முடியாது.."

"அப்படின்னா நீ சொன்ன statement தப்பு!"  

"சரி டா.. எனக்கு இதுவரை நான் கேட்ட ரஹ்மான் பாடல்களில் பெரும்பாலனவை பிடித்தது"  என்று சொல்ல தப்பி வந்தேன் :)


அவன் பேசியது ரெம்பவே ஓவர் தான் என்றாலும் நாம்  அபிமானத்தினால் கொஞ்சம் கருத்து சொல்லும் உரிமையை விட்டுக்கொடுத்து விடுகிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 
இப்படி ஆரம்பிகிறது விஷயம்.. 

நமக்குப் பிடித்த விஷயங்களால் (ரசனை/இசை/திறமை) சிலரை நமக்கு பிடிகிறது.
பிறகு அதை பெருமையாக வெளியே சொல்ல ஆரம்பிக்கிறோம். நமக்கு பிடித்த பிரபலத்தை விளம்பரம் செய்வதுகூட நல்லது தான். நல்ல விஷயங்களை பரப்புவதும் நல்ல பணியே.

ஆனால் இங்கு கொஞ்சம் பின்விளைவுகள் இருக்கிறது. அந்த பிரபலத்தின் எந்த பிரச்சனைக்கும் நம்மிடம் நண்பர்கள் கருத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். நாமும் அவர்கள் எதிபார்ப்புப்படியே, நமது பிரபலத்தை ஆதரித்தே பேச ஆரம்பிக்கிறோம். என்ன இருந்தாலும் நம்ம மானம் முக்கியம் இல்லையா?

ஆக,  வேறு வழியின்றி, பிடித்தோ பிடிக்காமலோ, வலையில் விழுந்துவிடுகிறோம்.  இனி அந்த பிரபலம் என்ன செய்தாலும் அதை ஆதரித்தே தீர வேண்டும். என்ன கொடுமை இது?
எந்தவொரு நண்பர் வட்டாரத்திலும், இதுபோல தன் உயிரை விட்டு(பேச்சில் மட்டும் தான்) , தனது தலைவனை காக்கும் விவாதங்களைப் பாக்கலாம். 

எனினும்.  சினிமா மற்றும் இலக்கியத்தில் இது கொஞ்சம் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது.
"எனக்கு ரஜினி பிடிக்கும்.. ஆனால் எந்திரன் பிடிக்கவில்லை.." என்று எளிதாக சொல்ல முடிகிறது. அல்லது நமக்கு பிடித்த எழுத்தாளருடைய மொக்கை படைப்புகளையும் எளிதாக விமர்சித்து போகமுடிகிறது.
அரசியல் சார்பாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசம். ஒவ்வொரு ஊழல்கள் வெளிவரும்போதும் இவர்கள் படும் கஷ்டம். அட ஆண்டவா..
கொடுக்காத காசுக்கு இவர்கள் கூவுவது இருக்கே, அது ரெம்ம்ம்ப ஓவரா இருக்கும்.
ஆனால், சார்புநிலை எடுக்காவிட்டாலும் விவாதங்களில் சுவை கம்மி தான். சபையில் நமக்கு ஒரு இடம் கிடைக்காது. ஆனால் இப்போதுள்ள எந்த கட்சியைப் பார்த்தாலும் எதாவது ஒரு ஊழலை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.
அதனால் தான் எதாவது ஒரு புதிய கட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சரி.. ரஜினி எப்போ கட்சி ஆரம்பிக்கிறாரு?

10 நவம்பர் 2010

ENCOUNTER - நேர்மையான சிந்தனை...

கோவை encounter-க்கு அதரவகம் எதிர்ப்பாகவும் பல குரல்கள்.
மக்கள் எப்படி ஊடகங்களினால் ஆட்டுவிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்ககூடிய இன்னொரு வாய்ப்பு.

நமக்கும் உணர்சிகள் இருக்கிறது என்பதை காட்ட இது போன்ற சில விஷயங்கள் நடக்கிறது.

Encounter-இ ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆக்ரோஷ கருத்துக்கள். ஆனால் உண்மையில் இதில் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதாவது இருக்கிறதா?

செய்தி 1 : இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
நமது கருத்து: குற்றம். நாமெல்லாம் இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டியதை உணர்த்தும் செய்தி.

செய்தி 2 : இருவர் கொலை தொடர்பாக கைது செய்யபட்டனர்.
நமது கருத்து: கடமை. பாராட்டலாம்.

செய்தி 3: ஒருவர் போலீஸ் உடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
நமது கருத்து: விபத்து. இதில் பாராட்டவோ அல்லது கண்டிக்கவோ எதுவும் இல்லை.

இந்த encounter-ஐ ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருக்கும் சில கேள்விகள்.

எதிர்பவர்களுக்கு,
உங்கள் கருத்துப்படி குற்றம் நிருபிக்கபடும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை. எனவே நீங்கள் போலீஸ் செய்ததையும் எதுவும் சொல்ல முடியாது. அந்த என்சௌண்டேர் ஒரு திட்டமிட்ட கொலை என்று எதாவது ஒரு நீதிமன்றத்தில் நிருபிக்கபடும் வரை. (மற்றும் எல்லாம் மேல் முறையீடுகளும் முடியும் வரை)


ஆதரிபவர்களுக்கு,
நீங்கள் police செய்தது திட்டமிட்ட கொலை என்று நம்புகிறீர்கள். இதன் உங்களிம் நமது சட்டத்தை பற்றியும் நீதி முறையை பற்றியும் உள்ள அவ நம்பிக்கை தெரிகிறது.
இது ஆதரிக்க வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல. மிக மிக மிக வருத்ததோடு யோசிக்க வேண்டிய விஷயம்... :(



விவாதமெல்லாம் சரி,
கொஞ்சம் உணர்ச்சியோடு யோசித்தால், நடந்தது மிகப்பெரிய மனதை உலுக்கும் குற்றம். இது போன்ற குற்றங்கள் தடுக்கபடவேண்டியவை.
நாம் நமது வேகத்தை இந்த திசையில் செலுத்தினால், நன்மை விளையலாம். முடித்த விஷயத்துக்கு கோஷம் போட்டு அல்ல.