Unordered List

15 ஆகஸ்ட் 2023

ஜெயிலர் - எது ரஜினி படம்? இது ரஜினி படமா?

ஜெயிலரில் ஒரு ஸ்டைலான பரபரப்பான சண்டைக்காட்சி, அதில் செம ஸ்டைலாக மெஷின் கன்னுடன் ரஜினி சண்டை செய்கிறார், ஆனால் நாம் ஒரு நெருடலோடு இருக்கிறோம். ரஜினி எப்படி ஒரு யூனிபார்ம் போட்ட காவல்துறை ஆட்களை அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது கொல்லலாம், அது அவர் பேசுவதற்கு எதிரானது இல்லையா என. உண்மையில் ரஜினி படங்களில் ரஜினிக்கு எதிரான காட்சிகள் இருந்ததே இல்லை என்றும் சொல்லமுடியாது. எந்திரன் படத்தில் ஒரு எளிய கோவிலில் லவுடுஸ்பீக்கர் வைத்தார்கள் என்பற்காக அந்த மக்களை கஞ்சா வியாபாரிகள் ரேஞ்சுக்கு அடிச்சு பறக்கவிட்ட காட்சிகளெல்லாம் இதே நெருடலோடு பார்த்தவர்கள் தான் நாம்.

ஆனால் அந்தக் காட்சியின் முடிவில் ஒரு ட்விஸ்ட் நான் எப்படி இவர்களைக் கொல்வேன், நான் இதைச் செய்யமாட்டடேன் என்று சொல்லி காவல் துறையை மியூசுவர் மரியாதையோடு முடிகிறது. நெல்சா நீ தான் ரெம்ப நாள் அப்புறம் ஒரு "ரஜினி படம்" எடுத்திருக்க என இயக்குனருக்கு மனதளவில் கைகுலுக்கினேன்.



சரி எது ரஜினி படம். 

ஓபனிங் சாங் ஒன்று இருந்தால், எஸ்பிபி முதல் பாட்டு பாடினால், சண்டை இருந்தால், சண்டை இல்லாமல் இருந்தால், பஞ்ச் டையலாக் இருந்தால், போன படத்தில் போட்ட சட்டை போட்டால் என ஒரு லிஸ்ட் போடுபவர்கள் பெரும்பாலும் கவனித்தால் ரஜினி மீது உள்ளூர ஏதோ வெறுப்பு கொண்டு ஆனால் அவரின் பிரம்மாண்ட வெற்றி அலையை எதிர்க்கவும் துணியாமல் அவர் இப்படி செய்திருக்கலாமே அப்ப்டி செய்திருக்கலாமெ என்பவர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பேச்சுகளைக் கடந்து தான் ரஜினியின் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

அப்ப்டியென்றால் ரஜினி படம் என்பது என்ன? தளபதி படத்தில் வில்லன் பேசும் ஒரு காட்சி இருக்கும் "உன்னை ஏன் அவன் கூட வெச்சு இருக்கான் தெரியுமா? உனக்கு பயம் இல்லை" என்று என. இது கிட்டத்தட்ட ரஜினி சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியில் சொன்னது. அண்ணாமலை படத்தில் வரும் பல வசனங்கள் அந்த காலகட்டத்தில் அவர் மேடையிலும் பேசியிருக்ககூடியது. பாட்ஷா, படையப்பா போன்றவை அந்தந்த காலகட்ட ரஜினி மனநிலையை காட்டுபவை ரஜினி படங்கள் என்பவை ரஜினியின் கேரக்டரை ஒரு சினிமா சூழலில் வைப்பவை. அதனால் தான் ரஜினி படங்களில் ஒரு தொடர்ச்சியும் மக்களோடு ஒரு தொடர்பும் இருக்கிறது. 

ஆனால் இந்தப் படங்களின் கலை வெற்றி என்பது, ஒரு சூழலுக்காக அந்தப் படம் எடுக்கபட்டது என்றாலும் அவை சரியான கலையாக மாறியதால் அந்த சூழல் தெரியாதவர்களாலுல் ரசிக்கப்படுகிறது. உதாரணமாக படையப்பா படம் ஜெயலலிதா உடனான அவரது சர்ர்சைகள் போல இருந்தாலும், தமிழக அரசியல் சூழல் தெரியாத ஆந்திரத்தில் படம் வந்தபோதே பெருவெற்றி அடைந்தது. அண்ணாமலை பாட்ஷா ஆகியவை, சூழல் முழுவதும் மாறியபின்னரும் இன்றும் பார்க்கப்படுகின்றன. 

அப்படினா ரஜினி நிஜ வாழ்க்கையில் பறந்து பறந்து அடிப்பரா, துப்பாக்கி எடுத்து சுடுவாரா என கேட்டால் நீங்க வேற கேட்டகரி. நாம் எழுதுவது உங்களுக்கு அல்ல.

தன் ஸ்டைல் எதுவும் குறையாமல் ரஜினியின் வழக்கமான கிம்மிக்ஸ் எதுவும் இல்லாமல் மணிரத்னம் எடுத்தது ஒரு ரஜினி படம். ரஜினியின் ஸ்டைலுக்காக பாட்டு வைத்து எடுத்த எந்திரன் ரஜினி படம் அல்ல. அது நல்ல வெற்றிகரமான ஷங்கர் படமாக இருக்கலாம், அது வேற விஷயம்.

வெகுநாட்களுக்குப் பிறகு நெல்சன் எடுத்த ஜெயிலர், நாம் நெல்சனிடம் ரசித்த அத்தனை விஷயங்களும் குறையாமல் நெல்சனின் ஒரிஜினாலிட்டி குறையாமல் வந்த ரஜினி படம் என சொல்லத்தக்க அத்தனை அம்சங்களும் உடையதாக இருக்கிறது.

"என்னை எல்லோரும் திட்டிட்டே இருக்கீங்க இல்ல, நான் யாருன்னு காட்டுறேன்" என ரஜினி ஓபனிங் டையலாக்க் பேசும்போது தியேட்டர் அதிர்கிறது. அது அப்படி ஒன்னும் "பஞ்ச் டையலாக்" இல்லையே என புரியதவர்கள் பார்க்கிறார்கள். ஒரு ஒரு இடத்தில் க்ளோஸப் ஷாட்டில் "கோவில் சொத்தை திருடாதீங்கடா நாசமாப் போயுடுவீங்க" என்கிறார். 

இந்தப் படத்தில் அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்படும்போது பல மாநிலங்களின் முக்கிய ஆட்களிடம் உதவி கெட்கும்போது அவருக்கு உதவ எந்தக் கேள்வியும் இல்லாமல் ஓட்டோடி வருகிவதும், உண்மையில் அந்த நடிகர்கள் கதையே சொல்லவேண்டாம் ரஜினி படம் என்றால் நடிக்கிறோம் என்று ஓடோடி வந்ததும் எளிதா கனெக்ட் செய்ய முடிகிறது என்றாலும் ரஜினிக்கு அரசியலில் பல மாநில தொடர்பு இருப்பதும். ரஜினி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தமிழகத்தில் வேறு எந்த நடிகர் வீட்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதெல்லம் நினைவுக்கு வருகிறது.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பெரிய தாதா, சரி அவர் என்ன வேலை செய்கிறார் என்ற டீடெயிலிங் இருக்குமா என்றால் இருக்காது, எப்படி கடத்துவது என்ற டெக்னிக் இருக்காது, அந்த இயக்குனருக்கு அது செய்யத்தெரியாதா என்றால் ரஜினி படத்தில் அது செய்யகூடாது என்பதே பதில். தாதாவாக இருப்பதும் ஜெயிலாரக இருப்பதும் ஒரு நிமித்தம் மட்டுமே. அங்கே கடத்தபடவேண்டியது நாயகனின் பெர்சனாலிட்டி மட்டுமே அதை ஜெயிலரும் சரியாக செய்திருக்கிறது. எப்படி கஞ்சா கடத்தனும், எப்படி சிலைகளை கடத்தனும் என்ற டீடெய்லிங் இல்லாமல். அதுவே நெல்சன் மற்றும் ரஜினி படங்களின் அபத்த வன்முறையையும் ஒரு காமிக் சென்சுடன் கொண்டு செல்கிறது. 

பாட்ஷா வந்தபோது அந்தப் படம் அதிக வன்முறை இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலிதா அறிக்கை விட்டார், இப்போது சிலர் பாட்ஷா பிரச்சனை இல்லை, ஆனால் ரஜினி படத்தில் வன்முறை இருக்கலாம என என்கின்றனர். சினிமாக்களில் வன்முறை என்பது தனி விவாதம் அது ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு சென்சார் எதிர்பார்ப்பது தவறு, ஒப்பிட மற்ற படங்களை விட ரஜினி நெல்சன் இருவருமே ரியலிட்டிக்கு வெளியே உள்ளவை எனவே வன்முறையின் தாக்கம் ஒப்பிட குறைவு. ரஜினி படத்தை ரஜினி படமாக்குவது சண்டை இருப்பதோ இல்லாமல் இருப்பதோ அல்ல.

கடைசியா ஒரு கேள்வி, நமக்குப் பிடித்த நடிகர், இயக்குனர் என்றால் ரெம்ப ஓவரா சப்போர்ட் செய்கிறோமா என.  ரிலீஸ் அன்று படம் பார்த்து கொண்டாடுபவர்கள், கஷப்பட்டு முதல்நாள் படம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்துப்வர்களை விட நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என தானே சொல்லனும். நண்பர்களோடு சேர்ந்து சில நேரங்களில் சின்ன மகிழ்ச்சிக்கு கொண்டாடி சிரிப்போம், அது பெட்டர் தான் இல்லையா.

வெகுநாட்களுக்குப் பின் ஒரு ரஜினி படம்,  இதில் இருப்பது கடந்தகாலம் அல்ல இது இன்றைய சூழல். இந்தப் படம் நாம் கொண்டாட மகிழ மற்றும் நமக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள.