Unordered List

14 மார்ச் 2011

சச்சின் - தோணி - குற்றம் எவருடையது?

"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல "

"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெயிக்க முடியல. மற்ற பிளேயர்ஸ் எல்லாம் வேஸ்ட். தோணி சரி இல்ல!! "

........................................................

இந்த இரண்டும் கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விவாதம். நானெல்லாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


உண்மையில் சச்சின் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறாரா?


அல்லது அணி திறமை இல்லாமல் இருக்கிறதா?



சச்சின் அடிக்கும் பெரும்பாலான போட்டிகள் ஏன் தோல்வியில் முடிகின்றன? அவர் நன்றாக விளையாடும் போட்டிகளில் ஏன் மற்றவர்கள் சாதாரணமாகக் கூட விளையாடுவதில்லை? தோணி ஏன் இப்படி முடிவுகளை எடுக்கிறார்?



சச்சின் இல்லாமலே பல போட்டிகளை வெல்லும் திறமையுள்ள இந்த அணி ஏன் சில போட்டிகளில் இப்படி சொதப்புகிறது?




யார் மீது குற்றம்?




சச்சின் இந்திய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். உண்மையில் கிரிக்கெட் தெரியாதவர்களுக்குக் கூட சச்சினைத் தெரியும் என்பது தான் அவரது புகழின் உச்சம். பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கோல்ப் தெரியாதவர்களுக்குக் கூட Michael Schumacher மற்றும் Tiger Woods தெரிவது போல.



சச்சின் நன்றாக விளையாடத் தொடங்கியதுமே, நமது அணி அவருக்கு எதிராக மனதளவில் விளையாடத் தொடங்கிவிடுகிறது.


இந்தியக் கேப்டனின் ஒரு முக்கியமான குறிக்கோள் சச்சின் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவது தான்.



சச்சின் கிளிக் ஆகும் போட்டிகளை விட அவர் சரியாக விளையாடாத போட்டிகளை ஜெயிக்கவைக்க கேப்டன் நினைப்பதை அவர்கள் உடல்மொழியை சற்று நோக்கினால் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஜெயித்தபின்னர் வழக்கமான ஒரு பேட்டி கொடுக்கப் படும்
"இந்திய அணி எந்த தனிமனிதரையும் நம்பி இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.. ".



இந்தப் போக்கு யார் கேப்டனாக வந்தாலும் மாறுவதில்லை. மாறப் போவதும் இல்லை. இது ஒரு பொது விதி.



தன்ராஜ் பிள்ளை புகழின் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ஹாக்கி அணி அவர்க்கு எதிராக விளையாடியதும் உண்டு.



விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான்.



எனவே சச்சினும் இந்தியக் அணியின் போக்கும் மாறப்போவதில்லை.




இது இயல்பான ஒன்று . எல்லாம் யார்மீதும் குற்றம் இல்லை.

சரி .....ரசிகர்களான நாம் என்ன இதுபோன்ற நிலையில் செய்யவது.

இருக்கவே இருக்கிறது முதலில் சொன்ன இரண்டு கட்சிகள். இதை எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு விவாதம் செய்ய வேண்டியது தான்.



இந்திய ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களாக இதைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.