Unordered List

17 டிசம்பர் 2010

தமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்

முன்பெல்லாம் ஒரு படம் வந்தவுடன்,  அந்தப் அந்தப்படத்தின் திருட்டு பிரதி  (pirated DVD) பரபரப்பாக தயாராகும்.  ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் ஒரிஜினல் DVD தான் வாங்குகிறார்கள்.

ஒரிஜினல் என்றால், உண்மையான ஒரிஜினல்.  ஆங்கிலம், ஜப்பான், கொரியா மற்றும் பல படங்கள்.

இதில் பெரிய வேடிக்கை விமர்சகர்கள் தான்.

எல்லா  படங்களும் விமர்சகர்களால் காப்பி என நிறுவப்படுகிறது. எல்லா விமர்சகர்களும் காப்பி என நிறுவுகிறார்கள்.

ஆனால், எல்லா படங்களும் எல்லா விமர்சகர்களாலும் காப்பி என  நிறுவப்படுவதில்லை.

உதாரணமாக எந்திரனை காப்பி என்று சொல்பவர்கள் நந்தலாலாவை ஒரிஜினல் என்று கொண்டாடுவார்கள். நந்தலாலாவை காப்பி என்பவர்கள் எந்திரன் ஒரு புத்தம் புதிய சிந்தனை என்று மனமார நம்புவார்கள்.


கமலஹாசன் ஆதரவு/எதிர்ப்பு, ஷங்கர் ஆதரவு/எதிர்ப்பு, 'யதார்த்த படம்' ஆதரவு/எதிர்ப்பு என்ன பல வகையான விமர்சகர்கள். இவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது படம் வரும் முன்னாலேயே நமக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு குஷி.


ஏன் இங்கே புது சிந்தனைக்கே வழியில்லாமல் ஆகிவிட்டது. ஏன் எல்லோரும் DVD மாயையில் உழல்கிறார்கள்?


கவுண்டமணி ஸ்டைலில் கேட்பதென்றால்,
"எவனை பார்த்தாலும் கதை அமெரிக்கால இருந்து வருது, ஜப்பான்ல இருந்து வருது, கொரியால இருந்து வருதுன்னு சொல்றானுக.. அப்போ இந்தியால இந்தியால கதையே இல்லையா.. இருந்த கதையெல்லாம் எங்கேடா போச்சு?"

அப்படிஎன்றால் நாம் உலகப்படம் பார்க்க கூடாதா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். அங்கிருந்து வரவேண்டிய தொழில்நுட்பம் இன்னும் நிறைய இருக்கிறது.

James Cameron -னின் இந்த பேட்டியைப் பார்க்கும் போது இது தான் தோன்றுகிறது. அவர் நமது மகாபாரத ராமாயண கதைகளை படமாக்க மிகவும் விருப்பம் கொண்டுள்ளார்.  
முக்கயம்மாக இந்திய இயக்குனர்களுக்கு தேவைப்பட்டால் "அவதார்" உருவாகப் பயன்பட்ட 3D தொழில்நுட்பத்தை தரவும் தயாராக உள்ளார்.


உள்ளூர் சரக்கு, வெளிநாட்டுக்கு இணையான தொழில்நுட்பம் என்பது அருமையாக இருக்கும்.  தெலுங்கில் வந்த "மகாதீரா", என்னை  பொருந்தவரை அப்படி ஒருபடம் தான்.  

நான் ஒரு ரஜினி ரசிகன் தான் என்றாலும் எந்திரன் படத்தில் ஒன்றமுடியாமல் போனதற்கு காரணம், அந்த படமே எங்கோ லண்டனில் நடப்பது போலிருக்கிறது. சென்னை தெருக்கள், மின்சார ரயில் என்று காட்டினாலும் சுத்தமாக நேடிவிடி மிஸ்ஸிங்.


மக்களே, தொழில்நுட்பத்தை உலகிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். சிந்தனை இந்தியாவிலேயே இருக்கிறது. கொஞ்சம் சுற்றிப்பாருங்கள்.