Unordered List

08 ஜூலை 2020

அல்காரிதத்தில் அர்ஜுனன்

கலைகளில் கணினி பயன்பாடு என்பது கணிப்பொறி அறிமுகமாதில் இருந்து வரும் விவாதம் என்றாலும் அதன் பயன்பாடு தொகுத்துக்கொள்ள உதவுகிறது என்ற அளவில் தான் இருக்கின்றது. பல புத்தகத்த் தொகைக்குப் பதிலாக கூகிளில் தேடுவதும் பேப்பருக்கு பதிலாக கணினியில் எழுதுவதும் கணினியின் உதவிதான். இருந்தாலும் அது புதிய சிந்தனைகளைத் தரமுடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றது.

செயற்கை அறிவு சார்ந்த முன்னேற்றத்தில்,  துறை சார்ந்த செயற்கை அறிவில் குறிப்பிட்டதக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இவற்றுக்கு மனிதருக்கு இருக்கும் பிரஞ்ஞை இல்லை. அவற்றுக்கு பிரஞ்ஞை உருவாக்குவது சாத்தியமா, அப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது இப்போது பிரபலமான விவாதமாக இருக்கின்றது. சமீபத்தில் பார்த்த வேஸ்ட் வேர்ல்ட் தொடர் இந்தப் பிரச்சனையை அழகாகக் கையாண்டுள்ளது.




இன்று படித்த ஒரு சிறுகதை இன்னும் முக்கியமானது கனடாவைச் சேர்ந்த நாவலாசிரியரான Stephen Marche, இந்தக் கருவில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆனால் அந்தக் கதையை எழுத உதவியது ஒரு செயற்கை அறிவு மென்பொருள். 

இந்தக் கதை, அறிவியல் கட்டுரைகளை வெளியுடும் மிக முக்கியமான தளமான MIT Technology Review என்ற தளத்தில் வந்துள்ளது. அதனால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.



 

எழுத்தாளரின் படைப்பு என்பது அவரது அனுபவம் மற்றும் வாசிப்பில் இருந்து வருவதென்றால் ஒரு செயற்கை அறிவு நிரலுக்கு இதுவரை வெளிவந்துள்ள மீபுனைவு கதைகளின் தொகுதிகளைக் கொடுத்து அதனிடம் புதிய சிந்தனையை பெரும் முயற்சி இது. அந்தக் கதையின் தலைப்பு கிருஷ்னனும் அர்ஜுனனும்.

இவை வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் அர்ஜுன் என்பது கிருண்னன் எழுதிய ஒரு மென்பொருள் நிரல் என்று இந்தக் கதையில் வருகிறது. கிருண்னனின் சிந்தனையின் விளைவு அர்ஜுனன் என்பது சுவாரஸ்யமான கருவாக இருக்கின்றது. 

எழுத்தாளர் ஜெயமோகனுடன் இந்தவாரம்  வெண்முரசு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த சந்திப்பின்போது ஒரு கேள்விக்கு பதிலில் மகாபாரத சிந்தனை அரசுகள் நிலையில் இல்லாமலிருந்தாலும் gross root level ல் இந்தியாவில் பல்லாண்டுகாலமாக இருப்பதை குறிப்பிட்டிருந்தார். அது இந்தியாவையும் தாண்டி அறிவுலக சிந்தனையில் இருப்பதையே இது காட்டுகிறது. 

இந்திய அறிவுலகத் தொகுப்பாக இருக்கும் வெண்முரசு கொண்டாட்ட சமயத்தில் உலகத்தின் அத்தனை மீபுனைவு சிந்தனைகளின் இருந்து உருவான ஒரு கதைக்கு கிருண்னனும் அர்ஜுனனனும் என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.








03 ஜூலை 2020

சீனாவின் உலகப்போர்

சமீபத்திய இந்திய சீன எல்லைப் பதற்றம் உருவாவதற்கு முன்னரே அமெரிக்க சீன வியாபாரப் பதற்றம் நடந்துகொண்டிருந்தது . அந்தப் பிரச்சனை கொரானாவிலும் தொடர்ந்தது, அமெரிக்க அதிபர் "சைனா வைரஸ்" என்று சொன்னது பெரிய சர்ச்சையானது. அதற்கான எதிர்ப்பு இந்தியவில் கூட உருவானது.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. கொரானா சீனாவில் இருந்தவரை அது வெறும் தகவலாக இருந்தது. ஆனால் அமெரிகாவிலும் இத்தாலியும் இறப்புகள் நடக்க ஆரம்பித்ததும் தான் இந்திய மக்கள் உண்மையில் பயப்பட ஆரம்பித்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மரணங்கள் நடந்தபோது இந்தியாவிலுல் பாதிப்பு வரத்தொடங்கிவிட்டது என்பது ஒரு காரணம் என்றாலும், இன்னும் முக்கியகாரணமாக நான் நினைப்பது நாம் சீனாவில் இருந்து வரும் செய்திகளை அப்படியே நம்புவதில்லை என்பதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிந்து வரும் செய்திகளை நமது மனம் நம்புகிறது என்பதும் தான். இந்த மனநிலை ஏன் இருக்கிறது என்பதை  இந்த நாடுகளைத் தொடர்ச்சியாக இவற்றை கவனித்து வருபவர்கள் உணர முடியும்.

இப்போது சீனா இந்திய எல்லைப் பதற்றம் உருவாயுள்ளதான் கொரானாவால் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நமக்கு இன்னொரு அடியாக இருக்கிறது.  உலகமே கொரானோவோடு போராடிக்கொண்டிருக்கும்போது இந்தியா மட்டும் தான் கொரானாவோடு போராடுவதோடு அதை உருவாக்கிய (உருவான) நாட்டோடும் போரடவேண்டிருக்கிறது என்பது இன்றைய நிலையாக இருக்கிறது.

இந்த சமயத்தில் நமக்கு வரும் செய்திகளுக்கும் பல மாறுபட்ட கோணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு தரப்பு செய்திகளும் மோடியின் கருத்தும் பலத்த விமர்சங்களை சந்தித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையானது தான். ஆனால் இவற்றில் எதை நாம் நம்புகிறோம் என்பது முக்கியமானது. நண்பர்கள் பலரும் இன்றைய நிலையில் சீனாவில் க்ளோபல் டைம்ஸ் பத்திரிகை படித்து கருத்து உருவாக்கிக்கொள்வது கவனிக்க முடிகிறது.



போர் நேரங்களிம் முழு ஒளிவுமறைவற்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்த மோதலில் இந்திய தரப்பில் உயிர்நீத்த ராணுவவீரர்களின் விபரங்கள் புகைப்படங்களுடம் வெளிவந்துவிட்டன. ஆனால் சீன தரப்பில் என்ன ஆனது என்று சீனா சொல்லப்போவதில்லை என்பது ஆச்சர்யம்ல்ல, நாமும் எதிர்பார்க்கப்போவதில்லை என்பது தான் ஆச்சர்யம்.

ஆம் சீனா அப்படித்தான் இருக்கும், கோரோனா கூட சீனாவில் இருந்தவரை அது எப்படிப்பரவுகிறது என்று கூட வெளியேசொல்லாமல் சீனா மறைத்ததையும் அதனால் அது பல நாடுகளுக்கு பரவியதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நாம் அதை நோக்கி அமெரிக்கா "சீன வைரஸ்" என விமர்சனம் வைத்ததும் அதை கடுமையாக எதிர்தோம் என்பதும் இதே நோக்கில் தான்.

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு மதிப்பீடுகள் கொண்டவை அவை அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் சரியாக இருக்கும். ஆனால் போர் என்பது இன்னொரு நாட்டோடு நடப்பது அங்கும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வருவது சரியல்ல. போர்த்தளவாடங்கள் வாங்குவது நமக்குப் பிடித்தது என்பதை விட எதிரியைப்பொருத்தது என்பதை நாம் அறிவோம் இல்லையா.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்ந்நிலையில், உள்ளூர் விவகாரங்களுக்கும் வெளிநாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைகிறது. ஆனால் இவற்றில் தெளிவாக இருக்கவேண்டியது மிக முக்கியம். உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ளூர் வழியில் செல்வது நல்லது என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடம் உருவாகியுள்ளது நல்ல விஷயம் அதே சமயம், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உலகலாவியவை இவற்றுக்கு உலகலாவிய தீர்வு மட்டுமே சாத்தியம்.  நமக்கு நல்ல காற்று வேண்டுமானால் நமது கார் மட்டும் புகையில்லாமல் இருந்தால் முடியாது நமது ஊரில் அனைத்துக் கார்ககளுக்கும் மாசுக்கட்டுப்பாடு வைக்கிறோமே அதுபோல.

தகவல் தொழில்நுட்பம், நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள், வேலைவாய்ப்பு எல்லாம் இப்படிப்பட்ட உலகலாவிய பிரச்சனைகள் தான் அதை இப்போது வந்துள்ள கொரானா இன்னும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சமீபகாலமாக பலம் அதிகரித்து வருவது வெளிப்படை என்றாலும் அதன் சர்வாதிகார முகத்தை நாடுகள் இப்போது வெளிப்படையாக பார்க்க ஆரம்பிததிருக்கின்றன.

கொரானா வைரஸ் உலகத்தையே முடக்கியிருந்தாலும் அதில் ஜனநாயக நாடுகள் அதிகம் பாதிப்படைந்ததையும் பார்துகொண்டிருக்கிறோம். சீனாவின் பாதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. இது மட்டுமல்லாமல் அமெரிக்காவிடம் வெளிப்படையான வியாபார போர், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகப் போர் என இருக்கும் சீனாவுடன் இந்தியா நேரடியான எல்லைப் போரில் ஈடுபடுகிறது.

ஐரோப்பா மீது நமது வலராற்றில் பல குற்றச்சாட்டுகள் உண்டு, ட்ரம்ப் நடவடிக்கைகள் மீது நமக்கு விமர்சனங்கள் இருக்காலாம், நம் நாட்டு மோடியின் அரசியில் மீது ஒவ்வாமை இருக்கலாம்.  அதை நாம் மிக காத்திரமாக முன்வைக்கலாம். ஆனால் ஒவ்வாத கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிந்ததற்காக மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நாடுகளுக்கும், தனது மக்களுக்குக்கே உண்மையைச் சொல்லாத சீனா போன்ற நாடுகளையும் புறங்கையால் தள்ளுபவற்களுக்கே அந்தத் தார்மீகம் இருக்கமுடியும். அவற்றின் இந்த நடவடிக்கைகளை ஒரு சொல் ஆதரித்தாலும் ஜனநானக நாடுகளை விமர்சிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.

இங்கு ஜன்நாயக நாடுகளை மட்டும் விமர்சிப்போம் மற்ற நாடுகளை அவை சொல்லும் செய்தியை நம்பி அமைதியாக இருப்போம் என்பது பொருந்தாது ஏனெனில் இவை உள்ளூர் விவகாரங்கள் அல்ல உலகலாவிய பிரச்சனை

இன்று சீனா இப்போது ஜனநாயக நாடுகளுக்கு இந்த உலகாவிய பிரச்சனைகளில் முதலாவதாக இருக்கிறது.