Unordered List

19 நவம்பர் 2019

Ford vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை

நடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்குகிறார். ஊரே வேடிக்கைப் பார்க்க சாலையோரத்தில் நடக்கிறது இந்தச் சண்டை.

கோபக்கார கென் மைல்ஸ் அப்படி அடிப்பது எதிர்பார்க்கக் கூடியது தான். ஆனால் புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனரும் கார் டிசைனருமான ஷெல்பி இப்படி கட்டி சண்டைபோடுவது ஆச்சர்யம்.
ஒரு சிறிய பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திக்க வரும்  ஷெல்பி மற்றும் திறமையான ரேஸ் ஓட்டுனரான கென் மைல்ஸ் சந்திப்பு இப்படி நடக்கிறது. அவர்களிருவரும் சேர்ந்து உருவாக்கும் ரேஸ் காரின் மேஜிக் இந்த நட்பினால் தான் சாத்தியமாகிறது.

இந்தச் சண்டையை வீட்டின் முன் சேர் போட்டு ரசிக்கும் கென் மைல்ஸ் மனைவி இந்த நட்பைப் புரிந்துகொள்கிறார். வெண்முரசு வாசகர்கள் துரியோதனனன் தன் வலிமையான நண்பர்களுடம் தோள் சேர்க்கும் ஒரு மல்யுத்த தருணத்தைக் கண்டுகொள்கின்றனர்.

கார் என்ற கான்செப்டையே மக்களுக்கு  பிரபலப்படுத்திய போர்ட் நிறுவனம், ரேஸ் உலகில் வெற்றியாளராக இருக்கும் பெராரியை வாங்க முயற்சிக்கும்போது அவமானத்தைச் சந்திக்கிறது. சரியாகச் சொன்னால் அதன் உரிமையாளரான ஹென்றி பொர்ட் 2, தனிப்பட்ட அவமானத்தை உணர்கிறார். அதன் விளைவாக உருவாகிறது பெராரியை வெல்லும் ஒரு ரேஸ் கார் தயாரிக்கும் ப்ராக்ஜெக்ட்.

புகழ்பெற்ற ரேஸ் ஓட்டுனராக இருந்த ஷெல்பியிடம் இந்த திட்டம் கொடுக்கப்படுகிறது. அவர் தனது கார் வடிமைப்பிற்கும் , அந்தக் காரை ரேஸில் ஓட்டுவதற்கும் நம்புவது கெல் மைல்ஸ். 

இந்த வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் போர்ட் நிறுவனம், அந்த நிறுவனத்தில் யாருக்குமே பிடிக்காத கோபக்கார கென் மைல்ஸ்,  அவரைப் புரிந்துகொண்டு சாதனைக்கு துணை நிற்கும் நண்பன் ஷெல்பி. தன் நண்பன் ஷெல்பிக்காக தன்னலம் துறக்கும் கென் மைல்ஸ், இவர்களை சுற்றி நடக்க்கின்றன படத்தின் உச்சகட்ட தருணங்கள். 

துரியோதனனையும் கர்ணனையும் நினைவுபடுத்தத் தக்க இந்தப் பாத்திரங்க்களில் நடித்திருக்கும் மாட் டெமான் மற்றும் க்ரிஸ்டியன் பேல். பல மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ படங்களைத் தனியாகவே தாங்கும் மார்க்கெட்  இருக்கும் இவர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் தாங்கள் ஏன் உலகின் சிறந்த நடிகர்கள் என்பதை சற்றும் மிகையில்லாத நடிப்பால் நிறுபித்திருக்கிறார்கள்.



உலகின் மிக பிரபல நிறுவங்கள் மற்றும் பிரபல மனிதர்களைச் சுற்றி நடக்கும் இந்தக் கதை ஒவ்வொருவரின் முக்கியத்துவதை குறைக்காமல் காட்டியியிருக்கிறது. ஒவ்வொருவரும் செய்யும் ஒவ்வொரு செயல்களும் உணர்ச்சிகளும் எப்படி இந்த சாதனை நோக்கி செல்வதில் பங்களிக்கிறது என்பது சுவாரஸ்யம். தமிழ் சினிமாக்களில் காட்டப்படுவது போல கார்பரேட் நிறுவங்கள் சதி செய்வதில்லை, ஆனால் அவற்றில் அரசியலும் சதிகளும் இல்லாமலும் இல்லை. அவை இல்லாமல் பெரிய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் இல்லை என்று அந்த முரணியக்கத்தை சிறப்பாகக் காட்டுகிறது இந்தப் படம்.

கார் ரேஸ் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை தொழில்நுட்பத்திலும் நம்மை அசத்துகிறது. நாமே அந்தக் காரில் இருப்பதுபோல துல்லியமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு செலவு செய்து கட்டப்படும் தியேட்டர்களின் பயன்மதிப்பு இது போன்ற சில படங்க்ளைத் திரையிடுவதுதான். இவற்றை தவறாமல் மிக அருமையான தியேட்டரில் தான் பார்க்கவேண்டும்.

நட்பு,  நகைச்சுவை , தியாகம், கார்பரேட் உலகின் சாதனைகள் மற்றும் சதிகள் எல்லாம் நம்முன் நிகழ்த்தி ஒரு இலக்கியப் படைப்பை வாசித்த திருப்தியையும் அதே நேரத்தில் உச்சகட்ட துடிப்புடன் நடக்கும் கார் ரேஸின் பரபரப்பையும் ஒருங்கே நம்க்குக் கடத்துகிறது இந்த Ford vs Ferrari

15 நவம்பர் 2019

Mastodon - பிளவுபட்ட உலகத்தில் இன்னொரு பிளவு

பொதுவாக மக்களுக்கு விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுவதிலோ அல்லது வரிசையில் நிற்பதிலோ பெரிய பிரச்சனை இருப்பதில்லை, ஆனால் சில சமயங்க்களில் நமது பிரலங்கள் வெளிநாடுகளில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டால் இந்த மக்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள். தங்களபிமான பிரபலத்தைச் சோதித்து அவமானப்படுத்திய நாட்டின் மீது போர் தொடுத்துவிடுவார்கள், நல்ல வேளையாக அந்தப் போர் நடப்பது சோஷியல் மீடியாவில் மட்டும் தான் என்பதால் பிரச்சனை எதுவும் இருப்பதில்லை.

இதுபோன்ற ஒரு பிரச்சனை சென்றவாரம் நடந்ததுவிட்டது, அதுவும் சோஷியல் மீடியாவிலேயே. ஒரு பிரபலத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் ஒரே வாரத்தில் இருமுறை முடக்கப்பட்டது. வேறெங்கும் பிரச்சனை என்றால் ட்விட்டரில் பொங்கலாம், ட்விட்டர் மீதே கோபம் என்றதால் புது சோஷியல் மீடியா தளமான மாஸ்டர்டான் நோக்கி  இந்திய ட்விட்டர் மக்கள் சாரை சாரையாக படை எடுத்தனர். இதை உருவாக்கிய ஜெர்மனையைச் சேர்ந்த Eugen Rochko இந்தக் கூட்டத்தை மிக ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மக்களின் நோக்கம் சின்னப்புள்ளத் தனமாக இருந்தாலும் மாஸ்டர்டான் ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட் தான். கார்பரேட் ஆக்ரமிப்புகள், டேட்டா காலனியிசம், ப்ரிவசஸி போன்றவை நம்மைச் சுற்றியடிக்கும் இந்த நேரத்தில் மய்யம் தவிப்பது நல்லது தான் என்பதால் இந்த தளத்தை நாம் பரிசீலிக்கலாம்.



இதன் முக்கிய அம்சமாக இந்த மூன்று விஷயங்க்களைச் சொல்லலாம்

1. சமூகங்க்களின் கட்டுப்பாட்டில் சர்வர்கள்
2. சோஷியல் மீடியாக்க்களுக்கான இணைப்பு - பெட்வெர்ஸ்
3. ப்ரிவைஸி,

ட்விட்டர் போன்றவை ஒரு கார்பரேட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. எனவே அவர்களின் வழிமுறைக்கு ஒவ்வாத ட்வீட்கள் முடக்கப்படும், அதையே தொடர்ந்தால் அந்த பயனுருமே அதில் முடக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மட்டுருத்தல் செய்யும் உரிமை அந்த நிறுவனத்திடமே இருக்கிறது. அந்தப் பிரச்சனை இதில் இல்லை என்கிறார்கள். எப்படி என நாம் கேட்கிறோம்.

மட்டுறுத்தல் இருக்காதா என்றால், கண்டிப்பாக இருக்கும். அதே போல உங்கள் கருத்தகள் தடுக்கப்படலாம். பயனர் நீக்கப்படலாம். இதற்குத் தீர்வாக, அந்த சமயத்தில் உங்களுக்காக நீங்களே ஒரு சர்வர் தொடங்க்கிக்க்கொள்ளலாம், அல்லது அப்படி ஒரு சர்வரைக் கண்டுபிடித்து இணைந்து கொள்ளலாம் என்கிறார்கள். என்ன விளையாடுகிறார்களா?

அந்தக் காலத்தில் சில ஜாதிகளை கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் அவர்களே கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று சொன்னார்களே அது போல. அதுவே சரியான தீர்வல்ல. ஆனால் இது அதை விட அபத்தம் ஏனென்றால், சிந்திக்கத்தெரிந்த எந்த ஒரு மனிதரும் எப்போதும் ஒரே தரப்பில் இருப்பதில்லை. அரசியல், சினிமா, வாசிப்பு, மொழி, நாடு என்ற ஒன்றையொன்று ஊடறுத்து செல்லும் பல சிந்தனை கொண்டவர் எந்தனை சர்வர்களில் எந்தனை ஐடி உருவாக்குவது. 

இப்படி தனிப்பட்ட சர்வர்களில் இணைவதன் மூலம் அவர் மீள முடியாத பிரிவுக்குள் தள்ளப்படுகிறார்.

மேலும் சமரசத்தை உருவாக்குவதற்குப் பதிலாக தனித் தனித் தீவுகளாகப் பிரிப்பதையே இந்த ஐடியா முன்னெடுக்கிறது. எற்கனவே பிளந்துபட்டுக்  கிடக்கும் இந்த உலகத்துக்கு இது செய்வது நன்மையா என்ன?

2. சோஷியல் மீடியா இணைப்பு.

ட்விட்டர், பேஸ்புக், யுடியூப் எல்லாம் ஒரே அக்கவுண்டில் இருந்தால் எப்படி இருக்கும் என கேட்கிறார்கள். மோசமாக இருக்கும் என்கிறோம்.

ஒரு வீட்டில் பைக்கும் காரும் மேலும் ஒரு சைக்கிளும் இருக்கின்றன என்றால் அது வெவ்வேறு காரணங்க்களுக்காக என்பது புரியும் தானே. அதுபோல யுடூபில் நாம் பார்க்கும் எல்லாம் பேஸ்புக்கில் வரத்தேவை இல்லை. எல்லாம் ஒன்று என்ற ஐடியா டெக்னிகலாக நன்றாக இருந்தாலும் நமக்கு பெரிய பலனில்லை.

3. ப்ரைவஸி.

நமது தகவல்களை கூகிள், பேஸ்புக் போன்றவை மிக அதிகமாக வைத்திருக்கிறன என்பது உண்மை தான்.  அதனால் பல சர்ச்சைகள் வந்தன என்பது சரி தான்.ஆனால் மாஸ்டர்டானில் ஒவ்வொரு சர்வரின் உரிமையாளரும் எல்லா பயனிரின் தனிப்பட்ட செய்திகள் உட்பட அனைத்தயும் பார்க்க  முடியும்.

நமது தனிப்பட்ட தகவல்களை ட்விட்டர் போன்ற கார்பரெட்ட்டுகள் கையாள்வதை விட நம்ம ஊர் சர்வர் ஓனர்கள் பார்த்தால் உங்க்களுக்கு பரவாயில்லை என்றால் இதை ப்ரைவஸி என்று ஒப்புக்கொள்ள்லாம். 

ஆனால் கார்பரேட்களில் சில வழிமுறைகள் கையாளப்படும் என்பதும், நம்ம தனிப்பட்ட வண்டவாளங்க்கள் நம்ம ஊர்க்காரங்க்களுக்குத் தெரிவதை விட ஏதோ வெளி நாட்டுக்கரனுக்குத் தெரிவது பிரச்சனை குறைவு என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது.


அப்படியென்றால் இதில் நன்மை எதும் இல்லையா, இதை பயன்படுத்தக் கூடாதா என்றால், நான் ஏற்கனவே ஒரு கணக்கு உருவாக்கிவிட்டேன். ஆனால்  அவர்கள் சொல்லும் காரணங்க்கள் எதற்கும் அல்ல.

எந்த ஸிஸ்டம் என்றாலும் காலம் செல்லச் செல்ல காம்ப்ளெஸிட்டியும் சைஸும் அதிகமாகி புதியவர்களுக்கு சின்னச் சோர்வை உருவாக்கும். எத்தனை விமர்சனங்க்கள் இருந்தாலும் புதிய ஸிஸ்டத்தில் இருக்கும் ஆரம்ப உற்சாகத்துக்காக ஒரு ட்ரையல் ரன் நல்லது.