போட்டியில் தோற்றது முயல் தான்.
இந்த முடிவு யாருக்கு ஆச்சர்யமாக இருந்ததோ தெரியாது. ஆனால் முயலுக்கு சிறிதளவும் ஆச்சர்யம் இருக்கவில்லை.
இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே முடிவு முயலுக்குத் தெரிந்திருந்தது. முயல் போட்டியிட்டு தோற்கவில்லை. போட்டியால் தோற்றது.
ஆமையுடன் போட்டி என்பதே முயலுக்குத் தோல்விதான்.