கோவை encounter-க்கு அதரவகம் எதிர்ப்பாகவும் பல குரல்கள்.
மக்கள் எப்படி ஊடகங்களினால் ஆட்டுவிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்ககூடிய இன்னொரு வாய்ப்பு.
நமக்கும் உணர்சிகள் இருக்கிறது என்பதை காட்ட இது போன்ற சில விஷயங்கள் நடக்கிறது.
Encounter-இ ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆக்ரோஷ கருத்துக்கள். ஆனால் உண்மையில் இதில் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதாவது இருக்கிறதா?
செய்தி 1 : இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
நமது கருத்து: குற்றம். நாமெல்லாம் இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டியதை உணர்த்தும் செய்தி.
செய்தி 2 : இருவர் கொலை தொடர்பாக கைது செய்யபட்டனர்.
நமது கருத்து: கடமை. பாராட்டலாம்.
செய்தி 3: ஒருவர் போலீஸ் உடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
நமது கருத்து: விபத்து. இதில் பாராட்டவோ அல்லது கண்டிக்கவோ எதுவும் இல்லை.
இந்த encounter-ஐ ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருக்கும் சில கேள்விகள்.
எதிர்பவர்களுக்கு,
உங்கள் கருத்துப்படி குற்றம் நிருபிக்கபடும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை. எனவே நீங்கள் போலீஸ் செய்ததையும் எதுவும் சொல்ல முடியாது. அந்த என்சௌண்டேர் ஒரு திட்டமிட்ட கொலை என்று எதாவது ஒரு நீதிமன்றத்தில் நிருபிக்கபடும் வரை. (மற்றும் எல்லாம் மேல் முறையீடுகளும் முடியும் வரை)
ஆதரிபவர்களுக்கு,
நீங்கள் police செய்தது திட்டமிட்ட கொலை என்று நம்புகிறீர்கள். இதன் உங்களிம் நமது சட்டத்தை பற்றியும் நீதி முறையை பற்றியும் உள்ள அவ நம்பிக்கை தெரிகிறது.
இது ஆதரிக்க வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல. மிக மிக மிக வருத்ததோடு யோசிக்க வேண்டிய விஷயம்... :(
விவாதமெல்லாம் சரி,
கொஞ்சம் உணர்ச்சியோடு யோசித்தால், நடந்தது மிகப்பெரிய மனதை உலுக்கும் குற்றம். இது போன்ற குற்றங்கள் தடுக்கபடவேண்டியவை.
நாம் நமது வேகத்தை இந்த திசையில் செலுத்தினால், நன்மை விளையலாம். முடித்த விஷயத்துக்கு கோஷம் போட்டு அல்ல.