Unordered List

28 டிசம்பர் 2010

தீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய?

நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததில் இருந்து ஒரே யோசனையாக இருக்கிறது..

செய்தி இது தான்... "பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும்.. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. ".

இந்த எச்சரிக்கையை வைத்துக் கொண்டது நான் என்ன செய்வது என்று ஒரே யோசனை.
மழை வரும் என்று எச்சரிக்கை செய்தால் குடை கொண்டுபோகலாம்.. (எச்சரிக்கை செய்தபின் மழை வருவதில்லை என்பது வரலாறு...இருந்தாலும் ஒக்கே)

எதாவது சாலையில் அரசியல் கூட்டம் என்று எச்சரிக்கை செய்தால் வேறு வழியாக போகலாம்..

சுனாமி என்று எச்சரிக்கை செய்தால் கடற்கரையை தவிக்கலாம்..

புயல் என்று எச்சரிக்கை செய்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம்..

இந்த தீவிரவாதி எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நாம் என்ன  செய்வது?

...........................
நம்மை என்ன செய்ய சொல்கிறார்கள்? துப்பாக்கி எடுத்துக்கொண்டு தீவிரவாதியோடு சண்டை செய்ய சொல்கிறார்களா?

இது நம்மை ஆயத்தப் படுத்துவதற்க்காகவா இல்லை பயப்பட செய்வதற்கா?

ஆயத்தப்படுத்த என்றால், எதுமாதிரியான ஆயத்தம்?

பயம் கொள்ள செய்ய என்றால், அது தானே தீவிரவாதிகளும் ஆசைப் படுகிறார்கள்?

......................


எனக்குத் தெரிந்தவரை தீவிரவாதிகள் செய்யும் எல்லா கொடுமைகளின் நோக்கம், மக்களிடம் ஒரு பயத்தை உருவாக்குவது தான்.மக்களிடம் ஒரு பதட்டத்தை உருவாக்கி அமைதியில்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் அவர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்கள்.


இப்போது நமது அரசே அவர்களின் வேலையை பாதி எடுத்துக்கொண்டதாக தோன்றுகிறது. 

ஒரு வேலை இது நமது அரசின் ஒரு புதிய வழியோ? தீவிரவாதிகள் உருவாக்குவதை விட அரசே அதிகமான பீதியை உருவாக்கிவிட்டால், ஒருவேளை அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தீவிரவாதத்தை விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ?


எவ்வளவு விளம்பரம் அவர்களுக்கு பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும்.


தீவிரவாதிகளுக்கு சிறந்த விளம்பரம் கொடுப்பதற்கு ஒரு விருது கொடுத்தால் அது நமது அரசுக்கும் பத்திரிக்கைகளுக்கும் தான் கொடுக்க வேண்டும்..

உண்மையில் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும்  எதாவது ஒரு செய்தி வந்தால் அரசும் அதற்கென உள்ள அமைப்புகளும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அரசு இந்த எச்சரிக்கையை ராணுவத்திருக்கும், காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் கொடுக்க வேண்டும்.. மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அல்ல

நம் நாட்டின் காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு முழு தகுதி உடையவை என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அவர்களே தீவிரவாதிகளை சமாளித்தால் நல்லது.. இல்லாவிட்டால் இந்த எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய?