Unordered List

15 ஜனவரி 2012

புத்தகமும் பேச்சும் - புத்தகத் திருவிழா 2011

தான் சென்றுவந்த எல்லா நாடுகளையும் பட்டியலிட்டுக் கொண்டிந்தார் லேனா தமிழ்வாணன். இந்தியாவில் மட்டும் தான் மக்கள் நேரத்தை மதிப்பதில்லை என நிருபிப்பது தான் நோக்கம் போல. உடனடியாக நான் நேரத்தை கொஞ்சமும் வீணாக்காமல் புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் நுழைந்தேன்.



அரங்கதில் சுற்றிக்கொண்டிருக்கும்பொழுது சற்றே வெளியில் பர்த்தேன். அவர் இன்னும் ஒரு நாட்டைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அரங்குக்குள் கூட்டம் அதிகரித்தது. இப்படி திரும்பத் திரும்பச் சொல்லி நேரத்தை வீணாக்கும் பழக்கம் அவர் சென்று வந்த நாடுகளிலெல்லாம் இருக்கிறதா என்ற கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சும்மா வேடிக்கை பார்த்து விட்டு வெளியிலெயே சுற்றிவிட்டுப் போகலாம் என்று வந்த கூட்டத்தையெல்லாம் அரங்குக்குள் செலுத்த இது போன்ற கூட்டத்தைக் கலைக்கும் பேச்சுக்கள் கண்டிப்பாகத் தேவை தான் போல.

----------------------------

வெள்ளிக்கிழமையெ வந்த நான் மறுபடி சனிக்கிழமையும் வந்ததற்கு காரணம் வெளிக்கிழமை பேசிய பேராசிரியர் ஞானசம்பந்தம். அலுவலகம் முடிந்து கண்காட்சிக்கு வர கிட்டத் தட்ட எட்டு மணி ஆகியிருந்தது. உள்ளே செல்வதற்குமுன் ஞானசம்பந்தம் குரலும் மக்களின் சிரிபோலியும் கவர கொஞ்சம் நேரம் கேட்டுவிட்டுத் தான் போகலாமே என்று கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பட்டிமன்றத்தின் தீர்ப்பு கட்டத்தில் இருந்தது. "படைப்பாளியா அல்லது வாசகனா என்ற பட்டிமன்றம்.

அவருக்கே உரித்தான மதுரை மொழி, நல்ல தமிழ் பாடல்கள், குட்டிக் கதைகள் மற்றும் தகவல்கள் மற்றும் நகைச்சுவைகள் என கூட்டத்தைத் தன் பேச்சால் கவர்ந்து வைத்திருந்தார். அங்கெங்கே சில புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் தந்தபடி இருந்தார்.



பட்டிமன்றம் என்றாலே வெறும் பொழுதுபோக்கு பார்முலா நகைச்சுவைதான் என்ற ஒருபோக்கு இருக்க, இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களையும் கலகலப்பாகத் தரமுடியும் என்பதே மிக மகிழ்ச்சியான விஷயம் தான்.

வாசகன் தான் படித்த அனுபவத்தை இன்னொரு வாசகனுக்கு அறிமிகப் படுத்ததை ஆற்றுப்படுத்துதல் பாடல்களுடன் மிக அழகாக ஒப்பிட்டார். பொது மக்களுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்க இவர்போன்ற பேச்சாளர்கள் கண்டிப்பாகத் தேவைதான்.

அவரது பேச்சு முடியும்வரை முழு அரங்கும் நிறைந்திருந்தது. என்ன ஒரு பிரச்சனை என்றால் இந்த சுவாரஸ்யத்தில் நான் புத்தக அரங்கிற்குள்ளேயே போகவில்லை. இதற்காகவே அடுத்தநாளான சனிக்கிழைமையும் செல்ல வேண்டியதாக ஆகிவிட்டது.

ஆனால் இதுபோன்ற கவர்ந்திழுக்கும் பேச்சுக்களில் கூட்டம் தங்குவதை புத்தக விற்பனையாளர்கள் எப்படிப் பார்கிறார்கள் எனத் தெரியவில்லை.

புத்தகக் கண்காட்சிகளில் இதுபோன்ற பேச்சுக்கள் அவசியம்தானா. இதனால் புத்தகங்களை பார்க்கும் மக்களின் கூட்டம் குறைகிறதா? அப்படியே பேசினாலும் கூட்டத்தைக் கலைக்கும் பேச்சாளர்களே போதுமா?

ஆனால் பொதுவாக மக்கள் வாங்கும் முறையைப் பார்த்தேலே அவர்களெல்லாம் தங்களுக்கு முன்பே அறிமுகமான சில புத்தகங்களை வாங்கவே விரும்புகிறார்கள். ஆனால் ஒரு கண்காட்சியின் நோக்கம் மக்களுக்கு சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதாகவே இருக்கவேண்டும. அதை பேராசியர் ஞானசம்பந்தம் மிக அருமையாகச் செய்தார்.


நான் கவனித்த சிறிது நேரத்திலேயே சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், ராமாயணம், மொழிபெயர்ப்பு இலக்கியம் என தற்போதைய ஜெயமோகனின் உலோகம் வரை பல அறிமுகங்கள்.

எனவே இதுபோன்ற பேச்சுக்கள் உண்மையில் புத்தக விற்பனையை அதிகரிக்கும் தகுதியான பேச்சாளர்கள் பேசினால்.