Unordered List

11 ஜனவரி 2015

சென்னையில் ஜெயமோகன் விழா

தமிழிலக்கிய உலகின் கவனம் இன்று குவிந்திருக்கும் இடம் சென்னை. இன்று மாலை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நடத்தும் விழா நடக்கவிருப்பது தி நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில்.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளார் பூமணிக்கு பாராட்டு விழா. அஞ்ஞாடி நாவலுக்காக விருது பெற்றபின் பூமணி கலந்து கொள்ளும் விழா. எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் விழா. எனவே செறிவான இலக்கிய அனுபவத்துக்கு உத்திரவாதம்.

விஷ்ணுபுரம் விருது என்று ஒன்று உருவானபோதே தமிழிலக்கிய உலகில் அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. விருதுகள் பற்றிய அவநம்பிக்கையும் விமர்சனங்ளும் மட்டுமே விரவியிருந்த சூழலில் அதற்க்குத் ஒரு தீர்வாக ஒரு நம்பகமான விருதை அளிப்பதாக விஷ்ணுபுரம் அமைப்பு அறிவித்தபோது பல அதிர்வலைகளை உருவாக்கியது, கூடவே பெரும் நம்பிக்கையையும்.இந்த வருடம் சாகித்ய அடாடமி பெரும் எழுத்தாளார் பூமணி 2011 ஆண்டே விஷ்ணுபுரம் விருது பெற்றிருகிறார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

இன்று மாலையில் செறிவான ஒரு இலக்கிய கொண்டாட்டம். சென்னை வாழ் வாசகர்கள் தவற விடக்கூடாத நிகழ்வு.

http://www.jeyamohan.in/69258

நாள் 11- 1-2015 ஞாயிறு
இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்
ஜி என் செட்டி சாலை, தி நகர்
, சென்னை
நேரம் மாலை ஐந்துமணி