Unordered List

21 பிப்ரவரி 2021

ஒரு அதிசயம், ஜெயிச்சமேட்ச் ரிவியூ

இரண்டாவது டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சே, அதுக்கு எங்கே ரிவியூ என மக்கள் கேட்டுக்கொண்டதால், அந்த மேட்ச் பற்றி நம்ம வியூ இங்கே

பொதுவா விளையாட்டுகளே ஹீரோக்களால் ஆனது தான். இந்த மேட்ச்ல ஹீரோக்கள் பலபேர் இருந்தாலும் ஒருத்தரோட முகம் மட்டும் முதன்மையா நிற்கிறது. முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு மேலே எடுத்து ஒரு சாலிட் ஸ்கோர்  உருவாக்கிய ரோஹித் சர்மா சூப்பர் தான், ஆனால்  செகண்ட் இன்னிங்சில் அவ்வளவு கஷ்டமான பிட்ச் கண்டிஷன்ல விராட் கோலி இன்னிங்ஸ் அதை விட ஸ்டைலா இருந்தது, அவர் அப்படினா 5 விக்கெட்டும் எடுத்துட்டு அதே செகண்ட் இன்னிங்சில் சென்சுரி போட்ட அஸ்வின்  என்ன சாதாரணமா, இவங்க எல்லாரும் இந்த மேட்ச் விட ஹீரோக்கள்தான் இருந்தாலும்  அந்த மேட்ச்ல் மனதில் நிற்கும் முகம் என்றால் அது முகமத் சிராஜ்.


அஸ்வின் சென்சுரி அடித்தபோது அஸ்வினுக்கு சமமாகவே, சொல்லப்போனால் அதைவிட அதிகம் கொண்டாடியது முமகது சிராஜ், அது கொஞ்சம் வேடிக்கையாகக்கூட தோன்றியது, ஆனால் அந்த செஞ்சுரி அவனுடையதும் தான்.


மகிழ்ச்சி... முகமது சிராஜ்



கொஞ்சம் ரன் எடுத்து நானூறுக்குப் பக்கத்தில் கொண்டுவந்துவிட்டால் இந்தியாவின் வெற்றி உறுதி என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்திய அணி. நமது பேட்ஸ்மேன்கள் இந்த பிட்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தது அவுட் ஆக, விராத் கோலி தான் ஏன் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன் என தனது நிதானமான மற்றும் ஸ்டைலான ஆட்டத்தால் காட்டினார், சரிந்துகொண்டிருந்த மறுமுனையை அஸ்வின் நிலை நிறுத்தினார். 


ஃபிப்டி அடித்து விராட் அவுட் ஆகும்போதே அது ஒரு ஜெயிக்கக்கூடிய ஸ்கோர் தான். அப்படியே டிக்ளேர் செய்திருந்தால் இந்தியா ஜெயிப்பதோடு தானும் டாப் ஸ்கோரில் இருந்திருக்கலாம். ராகுல் ட்ராவிட் போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் டிக்ளேர் செய்திருப்பாரோ என்னவோ ஆனால் கோலி டிக்ளேர் செய்யாததற்குக் காரணம் அஸ்வினுக்கு இருந்த செஞ்சுரி வாய்ப்பு.


நல்லவேளையா ட்ராவிட் கேப்டன் இல்லை :)


எட்டாவது விக்கெட்டில் இருந்த இஸாந்த் சர்மா ஃபோர், சிக்ஸர் என தேவையில்லாமல் சுற்றி அவுட் ஆனார், கடைசி பேட்ஸ்மேனாக வந்த சிராஜ் செய்தது ஆச்சர்யம்.


மிக தன்னம்பிக்கையுடன் விளையாடிய அவர் எந்த ரிஸ்கும் எடுக்கவில்லை, இங்கிலாந்தின் மிகச்சிறந்த பந்துவீச்சை மிக எச்சரிக்கையாக கையாண்டார். ஒவ்வொரு பந்தையும் அவர் டெபென்ஸ் விளையாடியபோது சென்னை கூட்டம் ஆராவாரித்து மகிழ்ந்தது. அவர் செய்வதின் அருமையை உணர்ந்த கூட்டம் அது.


நிலைமையை உணர்ந்த அஸ்வினும் தனது வாய்ப்பில் வேகமாக சிக்ஸர் ஃபோர் என மிக விரைவாகவே செஞ்சிரி அடித்தார். அந்த வெற்றி அஸ்வினுக்கு உரியது என்றாலும் முகமது சிராஜுக்கும் ஒரு மகிழ்ச்சியான பங்கு இருக்கிறது.


இந்த செஞ்சுரியில் சிராஜ் பங்குபோலவே, அஸ்வினின் சமீபத்திய வெற்றிகளில் அவரது யுடியூப் சேனலுக்கும் பெரிய பங்கு இருக்கிறத. அது அஸ்வினுக்கு ஒரு 'நல்ல' பேட்டிங் பார்ட்னர் கொடுக்கும் நம்பிக்கையை கொடுக்கிறது என்றே தோன்றுகிறது


ஐபியல் போன்ற ஒரு பரபரப்பான டோர்னமன்ட் நடக்கும் சமயத்தில் அஸ்வின் யுடியூபில் கருத்து பேசிக்கொண்டிருப்பது பெரிய ரிஸ்க்காக பார்க்கப்பட்டது. கடும் விமர்சனங்கள் கூட வந்தன.


கருத்து மாஸ்டர் அஸ்வின்



ஆனால் அதன் பின்னர் அவரது தன்னம்பிக்கை இன்னும் வளர்ந்ததை கவனிக்க முடிகிறது.பைனல் வரை வந்த  மிகச்சிறப்பான ஐபில், ஆஸ்திரேலியாவில் அதிரடி என்ற வளர்ந்து இப்போது சென்னையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அணியினரின் நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்.


இதனால் உலகம் அறியும் நீதி என்னவென்றால், கருத்து என்று ஒன்றிருந்தால் அதை சொல்பவனே ரியல் மாஸ்டர்.






கோலி காலியா? - சென்னை டெஸ்ட் ரிவியூ