Unordered List

05 ஏப்ரல் 2021

மெஷின் கன்னும் கொடிபறக்கும் காரும்

நீங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்ப்போது மெஷின்கன்னுடன் ஒருவர் வழியை மறித்து நிறுத்தச்சொன்னால் எப்படி இருக்கும், நின்றவுடன் இன்னும் நாலுபேர் நம் காரை நோக்கி வந்தால்? நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று தெரியவிலை ஆனால் சென்ற வாரத்தில் மட்டும் மூன்று முறைக்குமேல் இந்த சூழ்நிலையை எளிதாகக் கையாண்டேன் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

மெஷின்கன்னுடன் இருபவர் பொதுவாக தமிழ்தெரியாத துணைராணுவ வீரர் என நினைகிறேன். உடனே ஒரு போலீஸ், ஒருவர் கேமராவுடன் என காரை சோதனை செய்கிறார்கள். தேர்தலுக்கான ஏற்பாடு அது. எத்தனையோ அரசியல்வாதிகள் பெரிய பெரிய கார்களில் செல்வார்கள், இதில் நம்மைப் போய் சோதனை செய்கிறார்களே என கொஞ்சம் யோசித்தேன், அப்போது தான் ஒன்றை கவனிக்கமுடிந்தது. சாலையில் செல்லும் கார்களில், பிரச்சார வாகனங்கள் தவிர எதிலுமே கட்சிக்கொடிகள் இல்லை. 


இந்த தேர்தல் சமயத்தில் பொதுமக்களான நம்மை விட  கட்சியினர் தீவிர தான் பயணங்களில் இருப்பார்கள் கொடிகளோ, கொடிகள் கட்டக்கூடாது என ஏதாவது விதி இருந்தாலும் கட்சி அடையாளாத்தை வெளியில் காட்டிக்கொள்ளும் எந்த விஷயமும் இல்லாமல் பயணம் செய்வதால் வித்தியாசம் தெரியவில்லை.

இது தேர்தல் சமயம் என்பதால் என் நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் எம் எல் ஏ தேர்தல் சமயத்தில் தான் தென்படுவார்,  பிறகு அடுத்த தேர்தல் சமயத்தில் தான் பார்க்கமுடியும் என என் நண்பர் ஒருவர் சொன்னார், அப்படியா மிக நல்லவராக இருக்கிராரே என்றேன், பிறகுதான் தெரிந்தது நண்பர் அதை ஒரு விமர்சனமாக சொல்லி இருக்கிறார் என்பது. ஆனால் அப்படி ஒரு வேட்பாளர்,அதாவது ஜெயித்தபிறகு தான் இருப்பதையே காட்டிக்கொள்ள மாட்டேன், என வாக்குறுதி கொடுத்தால் அவருக்கே ஓட்டுப்போட பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள் என்பதே உண்மை.

பொதுமக்களான நமது எதிர்பார்ப்பு என்ன? நமக்குத் தேவையான அனைத்தும் அந்தந்த அரசு அலுவகக்ஙள் வழியாக இயல்பாக நடக்கவேண்டும் என்பது தானே. ஒரு மாநகராட்சி அலுவகத்துக்கோ, தாலுகா ஆபீஸுக்கோ அல்லது ஏதோ ஒரு எதிர்பாரத காரணங்கத்துக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கோ நீங்கள் செல்லும்போது அங்கு எந்த தலையீடும் இன்றி உங்களுக்கான சேவை கிடைப்பது தானே நீங்கள் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். 

எம் எல் ஏ உட்பட அரசியல் கட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் சேவையை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கு அடையாளம் அவர்கள் தொகுதியில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் நாம் அரசு அலுவலங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கையைத் தருவது தான். அதாவது அவர்கள் ஜெயித்தபின்னரும் தீவிர்மாக அரசியல் பயணம் செய்யவ்வேண்டும், ஆனால் கொடிகட்டிக்கொள்ளாமல்.

தேர்தல் சமயத்தில் எல்லாக் கட்சிகளும் மிக தீவிரமாக செயல்படுறார்கள். நம்மை விட அவர்கள் கார்கள் தான் சாலைகளில் பயணம் செய்கிறது ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் என்று காட்டிக்கொள்ளாமல் பயணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தபின்னரும் மக்கள் பிரதிநிதிகள் கொடியில்லாத கார்கள் போல சிறப்பாக பயணித்து அரசை சிறப்பாக்கி மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு