Unordered List

03 மார்ச் 2023

நாய் ஆர்வலர்கள்

 காக்கா சிட்டுக்குருவி போல நாய் ஒரு இயற்கையான விலங்கு அல்ல, அது ஒரு மனிதனுக்கு கீழே இருக்கும்படி "உருவாக்கப்பட்ட" ஒன்று. எனவே யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ளாத தெரு நாய் என்பது ஆபத்து.


ஆனால் விலங்கு ஆர்வலரகள் இதை தவறாக புரிந்துகொண்டு தெருநாய்களை ஆதரிப்பதன் வழியாக மனிதனுக்கு எதிராக செயலப்டுகிறார்கள். இதன் முக்கிய காரணம் இந்த "இரக்கம்" பேசுபவர்கள் பலர் இந்த சிஸ்டத்துக்கு வெளியே இருந்து கருத்து சொல்பவர்கள். நேற்று வடஇந்தியாவில் இரு பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தூக்கிச்சென்று கொன்றிர்ருக்கின்றன. போனமாதம் ஒரு ஸ்விகி டெலிவரி பையன், சரியாக கட்டுப்படுத்தப்டாத வீட்டு நான் நாய் துரத்தி கீழே விழுந்து இறந்திருக்கிறான். ஆனால் தெருநாய் மீது பரிவு பேசும் யாரும் ஒருநாளும் டெலிவர் பையனாகவோ, அந்த தாய் போன்ற பாதுபாப்பற்ற இடத்தில் தூங்குபவர்களாக்வே இருப்பதில்லை என்பதால், சோபாவில் படுத்துக்கொண்டு இரக்கம் பேசுகிறார்கள். இது நம் நண்பர்கள் உடப்ட எங்கும் இருக்கும் மனநிலை தான்.


நாய்களுக்கு மனிதர்களை பெறுப்பாக்குவது புதிய விஷயம் அல்ல நான் பார்த்தவரை வளர்ந்தநாடுகளில் அப்ப்டித்தான் இருக்கிறது, பார்க்கில் தன் நாயின் கழிவுகளை ஓனர்கள் தான் அப்புறப்படுத்துகிறர்கள்.


நாய் என்பது ஒரு டூல், அது மனிதனுக்கு கட்டுப்பட்டு தான் இருக்கவேண்டும், ஏனென்றால் அது ஒரு இயற்கை விலங்கே அல்ல. நாயின் செய்ல்களுக்கு அந்த ஓனர் பொறுப்பாளாராக இருக்கவேண்டும். அப்படி மனித பொறுப்பேற்கத நாய் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுதுவது அரசின்கடமையாக இருக்கவேண்டும்