Unordered List

15 ஆகஸ்ட் 2023

ஜெயிலர் - எது ரஜினி படம்? இது ரஜினி படமா?

ஜெயிலரில் ஒரு ஸ்டைலான பரபரப்பான சண்டைக்காட்சி, அதில் செம ஸ்டைலாக மெஷின் கன்னுடன் ரஜினி சண்டை செய்கிறார், ஆனால் நாம் ஒரு நெருடலோடு இருக்கிறோம். ரஜினி எப்படி ஒரு யூனிபார்ம் போட்ட காவல்துறை ஆட்களை அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது கொல்லலாம், அது அவர் பேசுவதற்கு எதிரானது இல்லையா என. உண்மையில் ரஜினி படங்களில் ரஜினிக்கு எதிரான காட்சிகள் இருந்ததே இல்லை என்றும் சொல்லமுடியாது. எந்திரன் படத்தில் ஒரு எளிய கோவிலில் லவுடுஸ்பீக்கர் வைத்தார்கள் என்பற்காக அந்த மக்களை கஞ்சா வியாபாரிகள் ரேஞ்சுக்கு அடிச்சு பறக்கவிட்ட காட்சிகளெல்லாம் இதே நெருடலோடு பார்த்தவர்கள் தான் நாம்.

ஆனால் அந்தக் காட்சியின் முடிவில் ஒரு ட்விஸ்ட் நான் எப்படி இவர்களைக் கொல்வேன், நான் இதைச் செய்யமாட்டடேன் என்று சொல்லி காவல் துறையை மியூசுவர் மரியாதையோடு முடிகிறது. நெல்சா நீ தான் ரெம்ப நாள் அப்புறம் ஒரு "ரஜினி படம்" எடுத்திருக்க என இயக்குனருக்கு மனதளவில் கைகுலுக்கினேன்.



சரி எது ரஜினி படம். 

ஓபனிங் சாங் ஒன்று இருந்தால், எஸ்பிபி முதல் பாட்டு பாடினால், சண்டை இருந்தால், சண்டை இல்லாமல் இருந்தால், பஞ்ச் டையலாக் இருந்தால், போன படத்தில் போட்ட சட்டை போட்டால் என ஒரு லிஸ்ட் போடுபவர்கள் பெரும்பாலும் கவனித்தால் ரஜினி மீது உள்ளூர ஏதோ வெறுப்பு கொண்டு ஆனால் அவரின் பிரம்மாண்ட வெற்றி அலையை எதிர்க்கவும் துணியாமல் அவர் இப்படி செய்திருக்கலாமே அப்ப்டி செய்திருக்கலாமெ என்பவர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த பேச்சுகளைக் கடந்து தான் ரஜினியின் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

அப்ப்டியென்றால் ரஜினி படம் என்பது என்ன? தளபதி படத்தில் வில்லன் பேசும் ஒரு காட்சி இருக்கும் "உன்னை ஏன் அவன் கூட வெச்சு இருக்கான் தெரியுமா? உனக்கு பயம் இல்லை" என்று என. இது கிட்டத்தட்ட ரஜினி சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியில் சொன்னது. அண்ணாமலை படத்தில் வரும் பல வசனங்கள் அந்த காலகட்டத்தில் அவர் மேடையிலும் பேசியிருக்ககூடியது. பாட்ஷா, படையப்பா போன்றவை அந்தந்த காலகட்ட ரஜினி மனநிலையை காட்டுபவை ரஜினி படங்கள் என்பவை ரஜினியின் கேரக்டரை ஒரு சினிமா சூழலில் வைப்பவை. அதனால் தான் ரஜினி படங்களில் ஒரு தொடர்ச்சியும் மக்களோடு ஒரு தொடர்பும் இருக்கிறது. 

ஆனால் இந்தப் படங்களின் கலை வெற்றி என்பது, ஒரு சூழலுக்காக அந்தப் படம் எடுக்கபட்டது என்றாலும் அவை சரியான கலையாக மாறியதால் அந்த சூழல் தெரியாதவர்களாலுல் ரசிக்கப்படுகிறது. உதாரணமாக படையப்பா படம் ஜெயலலிதா உடனான அவரது சர்ர்சைகள் போல இருந்தாலும், தமிழக அரசியல் சூழல் தெரியாத ஆந்திரத்தில் படம் வந்தபோதே பெருவெற்றி அடைந்தது. அண்ணாமலை பாட்ஷா ஆகியவை, சூழல் முழுவதும் மாறியபின்னரும் இன்றும் பார்க்கப்படுகின்றன. 

அப்படினா ரஜினி நிஜ வாழ்க்கையில் பறந்து பறந்து அடிப்பரா, துப்பாக்கி எடுத்து சுடுவாரா என கேட்டால் நீங்க வேற கேட்டகரி. நாம் எழுதுவது உங்களுக்கு அல்ல.

தன் ஸ்டைல் எதுவும் குறையாமல் ரஜினியின் வழக்கமான கிம்மிக்ஸ் எதுவும் இல்லாமல் மணிரத்னம் எடுத்தது ஒரு ரஜினி படம். ரஜினியின் ஸ்டைலுக்காக பாட்டு வைத்து எடுத்த எந்திரன் ரஜினி படம் அல்ல. அது நல்ல வெற்றிகரமான ஷங்கர் படமாக இருக்கலாம், அது வேற விஷயம்.

வெகுநாட்களுக்குப் பிறகு நெல்சன் எடுத்த ஜெயிலர், நாம் நெல்சனிடம் ரசித்த அத்தனை விஷயங்களும் குறையாமல் நெல்சனின் ஒரிஜினாலிட்டி குறையாமல் வந்த ரஜினி படம் என சொல்லத்தக்க அத்தனை அம்சங்களும் உடையதாக இருக்கிறது.

"என்னை எல்லோரும் திட்டிட்டே இருக்கீங்க இல்ல, நான் யாருன்னு காட்டுறேன்" என ரஜினி ஓபனிங் டையலாக்க் பேசும்போது தியேட்டர் அதிர்கிறது. அது அப்படி ஒன்னும் "பஞ்ச் டையலாக்" இல்லையே என புரியதவர்கள் பார்க்கிறார்கள். ஒரு ஒரு இடத்தில் க்ளோஸப் ஷாட்டில் "கோவில் சொத்தை திருடாதீங்கடா நாசமாப் போயுடுவீங்க" என்கிறார். 

இந்தப் படத்தில் அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்படும்போது பல மாநிலங்களின் முக்கிய ஆட்களிடம் உதவி கெட்கும்போது அவருக்கு உதவ எந்தக் கேள்வியும் இல்லாமல் ஓட்டோடி வருகிவதும், உண்மையில் அந்த நடிகர்கள் கதையே சொல்லவேண்டாம் ரஜினி படம் என்றால் நடிக்கிறோம் என்று ஓடோடி வந்ததும் எளிதா கனெக்ட் செய்ய முடிகிறது என்றாலும் ரஜினிக்கு அரசியலில் பல மாநில தொடர்பு இருப்பதும். ரஜினி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தமிழகத்தில் வேறு எந்த நடிகர் வீட்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதெல்லம் நினைவுக்கு வருகிறது.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பெரிய தாதா, சரி அவர் என்ன வேலை செய்கிறார் என்ற டீடெயிலிங் இருக்குமா என்றால் இருக்காது, எப்படி கடத்துவது என்ற டெக்னிக் இருக்காது, அந்த இயக்குனருக்கு அது செய்யத்தெரியாதா என்றால் ரஜினி படத்தில் அது செய்யகூடாது என்பதே பதில். தாதாவாக இருப்பதும் ஜெயிலாரக இருப்பதும் ஒரு நிமித்தம் மட்டுமே. அங்கே கடத்தபடவேண்டியது நாயகனின் பெர்சனாலிட்டி மட்டுமே அதை ஜெயிலரும் சரியாக செய்திருக்கிறது. எப்படி கஞ்சா கடத்தனும், எப்படி சிலைகளை கடத்தனும் என்ற டீடெய்லிங் இல்லாமல். அதுவே நெல்சன் மற்றும் ரஜினி படங்களின் அபத்த வன்முறையையும் ஒரு காமிக் சென்சுடன் கொண்டு செல்கிறது. 

பாட்ஷா வந்தபோது அந்தப் படம் அதிக வன்முறை இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலிதா அறிக்கை விட்டார், இப்போது சிலர் பாட்ஷா பிரச்சனை இல்லை, ஆனால் ரஜினி படத்தில் வன்முறை இருக்கலாம என என்கின்றனர். சினிமாக்களில் வன்முறை என்பது தனி விவாதம் அது ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு சென்சார் எதிர்பார்ப்பது தவறு, ஒப்பிட மற்ற படங்களை விட ரஜினி நெல்சன் இருவருமே ரியலிட்டிக்கு வெளியே உள்ளவை எனவே வன்முறையின் தாக்கம் ஒப்பிட குறைவு. ரஜினி படத்தை ரஜினி படமாக்குவது சண்டை இருப்பதோ இல்லாமல் இருப்பதோ அல்ல.

கடைசியா ஒரு கேள்வி, நமக்குப் பிடித்த நடிகர், இயக்குனர் என்றால் ரெம்ப ஓவரா சப்போர்ட் செய்கிறோமா என.  ரிலீஸ் அன்று படம் பார்த்து கொண்டாடுபவர்கள், கஷப்பட்டு முதல்நாள் படம் பார்த்து வன்மத்தை வெளிப்படுத்துப்வர்களை விட நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என தானே சொல்லனும். நண்பர்களோடு சேர்ந்து சில நேரங்களில் சின்ன மகிழ்ச்சிக்கு கொண்டாடி சிரிப்போம், அது பெட்டர் தான் இல்லையா.

வெகுநாட்களுக்குப் பின் ஒரு ரஜினி படம்,  இதில் இருப்பது கடந்தகாலம் அல்ல இது இன்றைய சூழல். இந்தப் படம் நாம் கொண்டாட மகிழ மற்றும் நமக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள.

03 மார்ச் 2023

நாய் ஆர்வலர்கள்

 காக்கா சிட்டுக்குருவி போல நாய் ஒரு இயற்கையான விலங்கு அல்ல, அது ஒரு மனிதனுக்கு கீழே இருக்கும்படி "உருவாக்கப்பட்ட" ஒன்று. எனவே யாரும் பொறுப்பெடுத்துக்கொள்ளாத தெரு நாய் என்பது ஆபத்து.


ஆனால் விலங்கு ஆர்வலரகள் இதை தவறாக புரிந்துகொண்டு தெருநாய்களை ஆதரிப்பதன் வழியாக மனிதனுக்கு எதிராக செயலப்டுகிறார்கள். இதன் முக்கிய காரணம் இந்த "இரக்கம்" பேசுபவர்கள் பலர் இந்த சிஸ்டத்துக்கு வெளியே இருந்து கருத்து சொல்பவர்கள். நேற்று வடஇந்தியாவில் இரு பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தூக்கிச்சென்று கொன்றிர்ருக்கின்றன. போனமாதம் ஒரு ஸ்விகி டெலிவரி பையன், சரியாக கட்டுப்படுத்தப்டாத வீட்டு நான் நாய் துரத்தி கீழே விழுந்து இறந்திருக்கிறான். ஆனால் தெருநாய் மீது பரிவு பேசும் யாரும் ஒருநாளும் டெலிவர் பையனாகவோ, அந்த தாய் போன்ற பாதுபாப்பற்ற இடத்தில் தூங்குபவர்களாக்வே இருப்பதில்லை என்பதால், சோபாவில் படுத்துக்கொண்டு இரக்கம் பேசுகிறார்கள். இது நம் நண்பர்கள் உடப்ட எங்கும் இருக்கும் மனநிலை தான்.


நாய்களுக்கு மனிதர்களை பெறுப்பாக்குவது புதிய விஷயம் அல்ல நான் பார்த்தவரை வளர்ந்தநாடுகளில் அப்ப்டித்தான் இருக்கிறது, பார்க்கில் தன் நாயின் கழிவுகளை ஓனர்கள் தான் அப்புறப்படுத்துகிறர்கள்.


நாய் என்பது ஒரு டூல், அது மனிதனுக்கு கட்டுப்பட்டு தான் இருக்கவேண்டும், ஏனென்றால் அது ஒரு இயற்கை விலங்கே அல்ல. நாயின் செய்ல்களுக்கு அந்த ஓனர் பொறுப்பாளாராக இருக்கவேண்டும். அப்படி மனித பொறுப்பேற்கத நாய் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுதுவது அரசின்கடமையாக இருக்கவேண்டும்

18 செப்டம்பர் 2022

ஜெயமோகன் 60

 எனக்கு ஒரு புதிய பயண அனுபவம் கிடைக்கும் போது, ஒரு அபுனைவு புத்தகம் என்னைக் கவரும்போது, ஒரு புதிய டெகானலிஜில் வேலை செய்து அதன் சாத்தியங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தும்போது, ஒரு வரலாற்று அவதானிப்பை கண்டடையும்போது, அல்லது சென்னையில் ஒரு பெரு வெள்ளம் வரும்போது என நான் எழுத்தாளார் ஜெயமோகனோடு கடிதம், கட்டுரை அல்லது நேர் பேச்சில் தொடர்புகொண்ட சில தருணங்கள் நினைவில் இருக்கின்றன.


தமிழ் இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளரான அவரிடம்  சம்பந்தம்   சம்பந்தம் இல்லாத இந்த விஷயங்களை ஏன் உரையாடுகிறோம். ஏனென்றால் இவை அனைத்திலும் அவரால் உரையாட முடியும், பெரும்பாலன சமயங்களில் அதற்கு மேல் நுட்பத்தை ஒரு தொடர்பை அவரால் நமக்கு காட்ட முடியும்.

விஞ்ஞானிகள் என்ற பட்டத்தோடு உலகில் நிறையபேர் இருந்தாலும் நோபல் பரிசு பெருபவர்கள் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் அவர்களின் இந்த பல் துறை அறிமுகத்தை, ஒருதுறையில் அறிவு சாதனையை இன்னொரு துறையில் பொருத்திப்பார்க்கும் திறனைத்தான் சொல்கிறார்கள்.

ஜெயமோகனின் இந்த பன்முகத்தன்மையை, அவரது படைப்புகளை மட்டும் வாசிப்பவர்களும் அடையலாம். உதாரணமாக வெண்முரசு நாவல்களிலேயே இன்று வரை நடந்துள்ள அறிவியல் வரலாற்று சாதன்னைகளையும் காணலாம், உதாரணமாக, பீமனும் துரியனும் சண்டையிடும் இடத்தில் மெஷின் லேர்னின் கான்செட்ப் ஒத்து வருவது பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.

எழுத்தாளார் ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன என்று ஒன்றைக் கேட்டால் பலதுறை நுட்பமும் அதை தொகுத்து ஒரு ஸினர்ஜி உருவாக்கும் தன்மையும் என்று சொல்லலாம்

24 டிசம்பர் 2021

தொடரும் தொன்மங்கள் - எழுத்தாளர் சுஷில்குமாரின் சிறுகதைகள் பற்றி சில எண்ணங்கள்

சமீபத்தில் வந்த ஸ்பைடர் மேன் படம் Spider-Man: No Way Home, இந்தப் படத்தின் முக்கிய ஆரம்பக்காட்சியைப் பார்க்கும்போது  சுஷில் குமாரின் ஒரு கதை நினைவுக்கு வந்தது.  சுஷில்குமாருக்கும் ஸ்பைடர்மேனுகும் என்ன சம்பந்தம் என பார்ப்பதற்குமுன், எழுத்தாளர் சுஷில்குமார் இந்த வருட விஷ்ணுபுரம் விழாவின் ஒரு விருந்தினராகவும் இருப்பதால் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "மூங்கில்" மற்றும் சில கதைகள் வாசித்தவரை எனது தற்போதைய எண்ணங்களை தொகுத்துக்கொள்கிறேன்.

ஒரு கதையில் கல்யாண வீடுகளில் எச்சில் இலை எடுப்பது வரை பிழைப்புக்காக பல வேலைகள் செய்து பிழைக்கும் ஒருவன் அதில் ஒரு வேலையாக ஒருமுறை செண்டை மேளம் அடிக்கும்போது அவனைப்பார்த்து பார்த்து காதல்வயப்பட்டு திருமணமும் செய்துகொள்கிறாள் ஒருத்தி. அவன் பிழைப்புக்காக பல தொழில்கள் செய்தாலும், அவள் அவனை மிகவும் விரும்புவது என்றால் அவன் நேருக்கு நேர் நின்று பன்றி வேட்டையாடும்போது தான், அதைச் செய்யவே அவனை அவள் ஊக்குவிக்கிறாள். பன்றியென்றால் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பன்றியல்ல ஒரு காட்டெருமை அளவுக்கு பெரிய மற்றும் பன்றிக்கேயான கடும் மூர்க்கம் என ஆக்ரோஷமான மிருகம் அது என்று இந்தக் கதையில் காட்டப்படுகிறது. அந்த வேட்டையில் தான் அவன் முழுவதுமான வெளிப்படுகிறான், இதில் என்ன சோகம் என்றால் அவன் ஆளுமை வீழ்வதும், அவனை நினைத்து அவள் பயப்படவும் வெறுக்கவும் ஆரம்பிப்பதும் அதே பன்றி வேட்டையில் தான்.

வேட்டை என்பது ஒரு கொலைத்தொழிலாக இருந்தாலும் அங்கு வேட்டையாடுபனும் வேட்டையாடப்படுவதும் சமமாக இருந்து விளையாடும் வரை அது ஒரு விளையாட்டாக இருக்கிறது. மனிதன் மிருகங்களை கொல்லவே கூடாது என்பது மிக மேலோட்டமான பார்வை, மனிதனும் ஒரு உயிரிதான் என்ற முறையில் தன் உணவுக்காக பிழைப்புக்காக அந்த வேட்டையாடும் மிருகத்தின் சமநிலையும் குறையாத அளவுக்கு செய்யும் வரை அதுவும் இயற்கை தான். மீன்களை அவற்றின் இனப்பெருக்கக்காலத்தில் பிடிக்ககூடாது என்பது  போல குட்டிகளுடன் இருக்கும் தாய் மிருகங்களைக் கொல்வதும் சமநிலையைக் குலைத்து அந்த இன அழிவுக்கு வழிகோலும் என்பதால் தவிற்கப்படவேண்டும் என்பதெல்லாம் தர்க்கத்தின் வழியாக வரும் கருத்துக்கள்.

ஆனால் அவன் பலநாட்களாக வேட்டை எதுவும் கிடைக்காத ஒரு விரக்தி நேரத்தில், குட்டிகளோடு இருக்கும் தாய்ப்பன்றியை கொன்றது மிகப்பெரிய தவறென அவள் உணர்வது எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்பட்டல்ல. அது அவள் வளர்ந்த நிலம் அவளுக்குக் அவளறிந்த தொன்மங்கள் வழியாகக் கையளித்திருக்கும் அறம் வழியாக. இந்தக் கதையின் முடிவில் அதுவே அவர்களது மகனை இந்த விஷச்சூழலில் இருந்து மீட்கிறது. அன்றாட பலன்கள் சுயநலம் தாண்டி அவளை இயக்குவது இவையே.

எழுத்தாளர் சுஷில் குமாரின் மூங்கில் தொகுப்பில் பல கதைகளின் மையச்சரடாக இந்தத் தொன்மங்கள் மனித மனத்தில் கொண்டுள்ள ஆளுகையின் விளைவான விளையாட்டுகளை நான் காண்கிறோம். பல கதைகள் இந்த விளையாட்டின் எல்லையைச் சோதிக்கின்றன.

பட்டுப்பாவாடை என்ற கதை கோரானா நேரத்தில் கிட்டத்தட்ட தங்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கும்போது, தான் அம்மனுக்கு செய்யவேண்டிய கடமையை தன் உயிருக்கும் மேலாகக் கருதும் அதற்காக கொள்ளையில் கூட இறங்கும் அதற்கும் மேலாக, தன் உயிரையே விடத் துணியும் மனநிலையைக் காட்டுகின்றது. இப்படி உயிரையே தியாகம் செய்து அவர்கள் கடத்துவது எதை என்ற கேள்வியை வாசகனுக்குக் கடத்துகின்றது.

பல கதைகளில் நாஞ்சில் நாட்டு தொன்மங்கள் இருக்கும்போது அதே நிலத்தில் நடக்கும் புத்துயுர்ப்பு கதையில் கிட்டத்தட்ட இதற்கு இணையாக பைபிள் சொல்லப்படுவதையும் கவனிக்கமுடிகிறது.


நாஞ்சில் நிலத்தைத் தவிர இந்தக் கதைகளில் ஆரல்வாய்மொழி ஒட்டிய வறண்ட நிலத்தின் கதைகள், வெளிநாட்டில் நடக்கும் கதைகள் ஆகிய்வையும் உள்ளன. இந்த நிலங்கள், அந்தச் சூழல் மற்றும் காலநிலைகூட மனிதர்களின் மனநிலைகளில் உருவாக்கும் மாற்றத்தையும் காட்டுகின்றன.

இன்னொரு பார்வையில் வறண்ட நிலத்தில் நடக்கும் "சுருக்குக்கம்பி", பாம்பே வாழ்கையைக் காட்டும் "இருகோடுகள்", நாஞ்சில் நிலத்தின் "விதை" ஆகிய கதைகளில் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் என்ற நிலையில் இருந்து மரணத்தின் விளிம்பைத் தொட்டபின் மீழும் புது நம்பிக்கை எந்த நிலத்துக்கும் பொதுவாக இருக்கின்றது.



இந்தக் கதைகளைப் தொகுத்துப்பார்க்கும்போது  இவற்றுக்கு நேரடி சம்பந்தம் இல்லையென்றாலும் என் நினைவுக்கு வருவது டிஜிடல் சர்வைலன்ஸ் அல்லது இப்போதைய தொழில்நுட்ப கண்காணிப்பு.

டிஜிடல் சர்வைலன்ஸ்  என்பது இன்றைய உலகத்தின் மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதை முன்பே இங்கு விவாதித்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக, "ரகசியமாக" வளர்ந்துகொண்டிருந்த இந்தப் போக்கு, கோரோனா சமயத்தில் அதற்கான "தேவை" இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்து மிக வேகமாகவும் வெளிப்படையாகவும் அரசுகளாலும், பெருநிறுவனங்களாலும் செயல்படுத்தப்படுவதை கவனிக்கிறோம். இனிமேல் பின்னால் செல்லவே முடியாத அளவுக்கு நம்மைச் சுற்றி இவை இருக்கின்றன.

இந்த டிஜிடல் சர்வைலன்ஸ் உலகில் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் சிலரின் உரிமைக்குரலாக The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை எழுப்பப்பட்டது. ஒருவர் இணையத்தில் சில விஷயங்கள் செய்திருக்கலாம், பின்னர் அவர் நினைத்தால் அதை நீக்கும் உரிமை அவருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகப் கோரப்படுகிறது. ஏனென்றால் கடந்தகாலத்தின் சுமைகளில் இருந்து விடுபட்டு மனிதர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்வதற்கான உரிமை தேவை. இது டிஜிடல் உலகில் மிக நியாயமான கோரிக்கை தான்.


ஆனால் மனிதமனம் அவ்வளவு எளிதான கருப்புவெள்ளையானது அல்ல, அது குற்றத்தைப் பதிவு செய்யும், தண்டனையளிக்கும் முறை வேறானது. இங்கு The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை மிக எளிதல்ல.  பல கதைகளின் மையச்சரடாக இருக்கும் குற்றவுணர்வு,  சாபம் அல்லது கடந்தகாலத்தின் தண்டனையில் இருந்து மீள்தல் என்பதாக இருக்கின்றது. உண்மையில் நாம் நம் செயல்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்களா அல்லது இந்தச் சுமை நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறதா என்ற கேள்வியை பச்சைப்பட்டு என்ற கதை எழுப்புக்கிறது.  இதன் பல பரிணாமங்களை பல கதைகளில் காணமுடிகிறது. இதில் சாபம் கதை மட்டும் இதன் எதிர் எல்லையை கொஞ்சம் நகைச்சுவையுடன் கையாள்கிறது.


திறமையான, பிறருக்கு உதவி செய்யும், ஆனால் தன் மேட்டிமைத்தனத்தை சுமக்கும் கௌரவம்,  அக்னி போன்ற கதைகள் மனித உணர்வுகளின் நுட்பங்களைக் காட்டுகின்றன.


பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு பண்பாடும் மாயங்களும் பல கதைகள் இருந்தாலும் அதிலேயே சமூகத்தின் பலநிலைகளில் இருக்கும் மனிதர்களை துல்லியமாக சித்தரிப்பது எழுத்தாளர் சுஷில் குமாரின் தனித்தன்மையாக சொல்லலாம். நாஞ்சில் பகுதிக்கு வெளியில் ஐடி, கல்வித்துறை, வெளிநாடுகள் என பல களங்களில் இருக்கும் கதைகளும் எழுத்தாளரின் பன்முக கலாச்சர அறிமுகத்தைக் காட்டுகின்றன.


ஸைபைடர்மேன் படத்தில் தன்னைச் சார்ந்தவர்கள் படும் துயரத்தை தாங்கமுடியாமல் காலத்தையே மாற்றியெழுதும் காட்சியை எழுத்தாளர் சுஷில் மூரையும் பொன்னும் கதையில் நாஞ்சில் தொன்மங்கள் வழியாகத் தொட்டிருக்கிறார். அவர் கையில் இருக்கும் இந்த வளமான தொன்மங்களும், அவரது கதைசொல்லல் பாணியும், பன்முக காலாச்சார அறிமுகமும் அவர் வரும்காலத்தின் முக்கிய படைப்பாளியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

16 டிசம்பர் 2021

கோலி எனும் இலக்கில்லாத துப்பாக்கி

2015 வருடம் அப்போது இந்திய க்ரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு சின்ன சோதனைக் காலம், அதைப்பற்றி அப்போது பவுலராக இருந்த் அஸ்வினிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஒரு போரில் தலைவன் பின் தான் வீரர்கள் நிற்கவேண்டும், என் தலைவர் சொன்னால், நான் களத்தில் உயிரைக்கொடுக்கத்தயார் என்றார்"

அப்போது சில அதிர்வலைகளை உருவாக்கிய பேட்டி அது. நன்றாக கவனித்தால் தோனி எந்த அளவு ஜூனியர் வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்பதை இது காட்டுகிறது. 

இது இப்படியென்றால சிஎஸ்கே அணி அமைக்கப்பட்டபோது அப்போது ஜூனியராக இருந்த ரவீந்திர ஜடேஜா  பெரும் விலைக்கு வாங்க்கப்பட்டது பல புருவங்களை உயர்த்தச் செய்தது. அப்போது அவர் "சர் ஜடேஜா" என அன்பு கடந்த கிண்டலுடன் அழைப்பட்ட காலம். ஒரு கிசுகிசுவாக இருந்த அந்தப் பட்டப் பெயரை அப்போது கேப்டனாக இருந்த தோனி பேட்டிகளிலும் டிவிட்டரிலும் பேசி ஜடேஜாவை நம்ம வீட்டுப்பையன் என்று நினைக்க வைத்தார்.

இதை விட முத்தாய்ப்பாக தனக்கு அடுத்த கேப்டனையும் உருவாக்கினார் தோனி, ஒரு மேட்சில் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தால் ஜெயிக்கும் நிலைக்கு வர, அந்த ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி நினைத்திருந்தால் வின்னிங் ஷாட் அடித்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைத்து கோலிக்கு வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது சும்மா இல்லை, கோலிக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நினைத்துதான் கொடுத்தார். 



அப்படி தோனியால் கைகாட்டப்பட்ட கோலி எங்கே ஒரு கேப்டனாக வெற்றி பெறமுடியவில்லை? முன் சொன்ன சம்பவங்களை மறுபடி யோசியுங்கள் கோலி கேப்டனான பின் எத்தனை ஜூனியர் வீரர்கள் கோலிக்காக "உயிரைக்கொடுக்க" தயாராக இருக்கிறார்கள்.

அப்படியென்றால் தோனியால் கைகாட்டப்பட்ட கோலி தகுதி இல்லாதவரா? இந்தக் கேள்விக்கு பதில் தேடும்முன் இந்திய க்ரிக்கெட் போர்டில் மாநிலங்களின் ஆதிக்கத்தை மனதில் வைக்கவேண்டும். இந்திய க்ரிக்கெட் போர்டில் மூன்று மாநிலங்கள் தான் பெரிய அளவில் சக்தியானவை மும்பை, கர்நாடகா அடுத்து சென்னை. விளையாடும் 11 பேரில் சில காலகட்டங்களில் இந்த மாநில வீரர்கள் நான்கு,ஐந்துபேர் என இடம் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய காலங்கள் உண்டு. 

இந்த மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வந்து கேப்டனாக ஜெயிக்க பெரும் வல்லமையும் கரிஷ்மாவும் வேண்டும். கபில்தேவ்,கங்குலியில் இருந்து தோனி வரை அப்படிப்பட்ட போர் வீரர்கள் தான். அந்த வழியில் கோலி கேப்டனானதும் தனது அந்த அசாத்திய திறமை மற்றும் போர்குணத்தால் தான். தோனி தனது தொடர்ச்சியாக கோலியை நினைத்ததும் இந்தக் காரணத்தால் தான்.

ஆனால் கோலியின் போர்க்குணம் எங்கே குறி தவறியது என்பது தான் பிரச்சனையாக ஆகிறது. கபில்தேவ் சச்சின் போன்றவர்கள் சின்ன டீம்களுடம் விளையாடும் போது மிக நட்பாக இருப்பதை கவனிக்கமுடியும். ஆனால் பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்துபோன்ற சவால்களின்போது மிக கடுமையாக போராடுவதை கவனிக்கமுடியும். கேப்டன் கூல் எனப்படும் தோனி கூட பாகிஸ்தான்/ஆஸ்திரேலியா போட்டிகளில் அதிக ஆக்ரோஷம் காட்டுவதை கவனிக்கமுடியும். 

ஆனால் ஐபில் போன்ற போட்டிகளில் கூட பொங்கும் கோலி சமீப பாகிஸ்தான் போட்டியின் தோற்றதையும் அதை மிக ஜாலியாக எடுத்துக்கொண்டதும் மக்களால் ரசிக்கப்படாது என்பதை அவர் உணரவில்லை என்று படுகிறது. நீ அவ்வளவு நல்லவன்(கூல்) இல்லையே என கிண்டலடிக்கப்ப்ட்டது. தற்போது மீடியாவில் இருக்கும் அரசியல் சரிநிலைக்காக தன் க்ரிக்கெட் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுத்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டார். முக்கிய போட்டிகளில் சச்சின் கபில் போன்றவர்கள் தோற்றால் அவர்கள் சோக முகமே நமக்கு ஆறுதலாக அமையும் என்பதையும் கவனிக்கமுடியும்

தன் எதிரிகளை கையாள்வதிலும் இதே குறி தவறிய நிலை தான் கோலி எடுத்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் சரியாக விளையாடாத ரோஹித்துக்குப் பதில் ஏன் பார்மில் இருக்கும் இஷாத் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என கேள்வி கேட்கப்ப்பட்டபோது "அய்யோ ரோஹித்தை தொடுவதா என பதறினார்". சரியாக விளையாடாத ரஹானே, புஜாரா ஆகியோரை தொட பயப்படும் அவர், ஜூனியர் வீரர்களுக்கு தோனி செய்ததுபோன்ற அந்த நம்பிக்கையை அளிக்கவில்லை. அதுவே அவருக்கு பிரச்சனையானது.

கோலியின் வெற்றி சதவீதம் பழைய கேப்டன்களை விட நன்றாக இருக்கிறதே என்று சொல்பவர்கள் கடந்த பத்து வருடமாக இந்திய க்ரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் என்று சொல்லலாம். 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி மிக பரிதாபமான தோல்வியைடந்தது. கிட்டத்தட்ட க்ரிக்கெட் மீதே இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில் தான்  கபில் ஆரம்பித்த ஐ,சி,ல் தொடர்ச்சியாக வந்த் ஐ,பி.ல் அந்த நிலையை மாற்றியது, இப்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. அந்த நிலையில் கேப்டனாக தோனியும் அப்போது வீழ்ந்திருந்த கேப்டன் என்பதன் பெருமையை மீட்டெடுக்க உதவினார்.

இப்போது இந்தியாவில் இருக்கும் திறமையான வீர்களைன் காரணமாக, சரியான அணி தேர்வு செய்தாலே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை தான் இருக்கின்றது. எனவே இயல்பாக வெற்றி சதவீதம் அதிகம் இருக்கும். ஆனால் அதிக கேப்டன்ஸி தேவைப்படும் ஐ.சி.சி தொடர்க்களை ஜெயிப்பதே இப்போது சவால். அதில் கோலி தொடர்து தோற்க முன்சொன்ன இரணடு காரணங்கள் தான் காரணமாக அமைகின்றன.

எனவே கோலி சாதாரண ஆள் இல்லை, தோனி கைகாட்டிய பவர்புல் துப்பாக்கி, ஆனால் ஒரு கேப்டனாக அது இலக்கின்றி எதிராளிகளை விட்டுவிட்டு எளியவர்களையும் தன்னை நம்பியிருப்போரையும் சுட்டு இலக்கில்லாத துப்பாக்கியானது தான் சோகம்.