Unordered List

25 மார்ச் 2011

வேலைக்குப்பின் கூலி - தேர்தல் ஆணையம் கண்டிப்பு


தமிழகமெங்கும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யும் காட்சிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருகின்றன.



பணம் பட்டுவாடா, பறிமுதல், தடை என பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை.




பணமோ அல்லது பொருளோ வாக்காளர்களுக்கு கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே பிரச்சனை இல்லாதபொழுது ஏன் இது தடுக்கப் படுகிறது என்று நம்மிடம் சிலர் சந்தேகம் எழுப்பினர்.



இலவசம் கொடுப்பது ஏன் தேர்த்தல் ஆணையத்தால் தடைசெய்யப் படுகிறது என்று நமக்கும் தெளிவாகத் தெரியவில்லை.



இப்படி புரிந்து கொள்ளலாமா?



வாக்களிப்பதற்காக இலவசம் கொடுத்தால் தவறு என்று இருக்குமோ? ஆனால் இதைவிட விலை உயர்ந்த பொருட்களை தங்களுக்கு வாக்களித்தால் தருவதாக நேரடியாகவே சொல்லப்படுகிறதே. எனவே வாக்களித்தால் இலவசம் என்பது தவறு இல்லை போலத்தான் தெரிகிறது. அப்படியென்றால் எது தவறு?


.
சரி.. இப்படி புரிந்து கொள்ளலாம்.



வாக்களர்களுக்கு பணம் அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பே கொடுத்தால் அது குற்றம். அதையே அவர்கள் வாக்களித்து வேட்பாளர் வென்றபிறகு கொடுத்தால் அது முறையானது.



ஏன் இப்படி இருக்கிறது? அதற்கும் காரணம் இருக்கும்.



ஏனென்றால் பொருளை வாங்கிவிட்டு மக்கள் ஒட்டு போடாமல் இருந்துவிட்டால் பணம் கொடுத்தவர் பாவம் ஏமாந்துவிடுவார் அல்லவா?
அதாவது வேலையை செய்யும் முன் ஊதியம் பெறுவது தவறு என ஆணையம் சொல்கிறது போலும்.



நியாயம் தான்.