Unordered List

08 டிசம்பர் 2010

பூனை ராஜ்யமா?

ரூபாய் 300-க்கு ஒரு ஹெல்மெட் வாங்கிவிடலாம்.  


ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால், ஓட்டிப் பிடிபட்டால், ருபாய் 100 அபராதம்.

இது என்ன மாதிரியான சட்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஹெல்மெட் என்பது மற்ற சாலை விதிகளைப் போல் மற்றவர்களை பாதிக்கும் விஷயம் இல்லை. மக்கள்  மீது கொண்ட   அக்கறையினால்  கொண்டுவந்த  சட்டம் போல  தோற்றமளிக்கும் இந்த விஷயத்தினால் உண்மையில் பலன் அடைபவர் யார்?

நாம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை கண்டிப்பது இல்லையா? அதுபோல அரசு பொறுப்பாக மக்களை அபராதம் மூலம் கண்டிக்கிறது என நினைக்கலாமா? இச்சட்டத்தை  கொண்டு வரக்கோரி ஒரு பொதுநல வழக்கு கூட நடந்தது அல்லவா? எனவே இது ஒரு பொறுப்பான சட்டம் தானா?

எனக்கு சின்ன வயதில் படித்த பூனை ஆப்பத்தை பங்குவைக்கும் கதைதான் ஞாபகம் வருகிறது. (இந்த கதை தெரியாதவர்கள் இருந்தால் சொல்லுங்கள் :) )

நாம் கொடுக்கும் அபராத பணம் உண்மையில் எங்கு தான் போகிறது?

நாம் கொடுக்கும் பணம் எங்கு போகிறது என்று அறிவது நமது உரிமையாக இருக்க வேண்டும். அதை அபராதமாக கொடுத்தாலும்.. 

இப்படி யோசிக்கலாம்.. உண்மையில் அக்கறை என்றால்,   ஹெல்மெட் போடுவதை  ஊக்குவிக்க என்ன விஷயங்கள் நடந்தது?

மானிய விலையில் ஹெல்மெட்?

ஏழை மக்களுக்கு இலவச ஹெல்மெட்? .எனக்குத் தெரிந்து TV விலையை விட இந்த விலை குறைவு தான்.. 

எதாவது சலுகை? மக்கள் என்ன சினிமா முதலாளிகளா, வரிச் சலுகைகளை எதிர்ப்பார்பதற்கு.. :)

சரி.. இலவசமாக கொடுக்க வேண்டாம். அரசே சரியான விலையில் தரமான ஹெல்மெட் விற்கலாமே

முக்கியமாக மூன்று முறை ஒருவர் அபராதம் கட்டினால் அவருக்கு ஒரு ஹெல்மெட் இலவசமா தரலாமே. அதாவது ஒருவர் ஹெல்மெட்டின் விலையை அபராதமாகவே கட்டியபிறகு. 

இந்தமுறையில் யாருக்கும் நஷ்டம் இல்லை. நோக்கமும் நிறைவேறிவிடும். 

இது எப்படி இருக்கு?