Unordered List

28 செப்டம்பர் 2014

தீர்ப்பும் அதற்கு பின்னரும்

நேற்று காலை நூலகம் சென்று திரும்பும்போதுகூட ஏதும் வித்தியாசமாகத் தெரிய்வில்லை, கிண்டி ரயில்நிலையம் அருகில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்த காவல் துறையினரைத்தவிர.

மதியம் தொலைக்காட்சியைப் பார்த்தபோது தான் பரபரப்பு தெரிந்தது. பல செய்திச் சானல்கள் சென்னையில் கலவரம் வரும் என்று அடித்துச் சொல்லியபடியிருந்தன. தமிழில் பார்த்த தந்தி டிவி சற்று பரவாயில்லை, ஆங்கில செய்திச்சானல்களைப் பார்த்தபோது சற்று கலக்கமாகவேயிருந்தது. சென்னையே கலவரத்தில் மூழ்கிவிடும் என்று தோன்றியது. 

சனிக்கிழமை மதிய உறக்கத்தைக் கலைத்தது மதுரையிலிருந்த நண்பரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. மதுரையில் கேபிள், மின்சாரம் இல்லாததால் செய்தியைக் கேட்க என்னை அழைத்திருக்கிறார். உடனடியாக லேப்டாப்பை உயிர்ப்பித்தால் கிட்டத்தட்ட செய்தி உறுதியாகிவிட்டிருந்தது. தொலைகாட்சி சானல்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. தமிழ்நாட்டின் தலைமை மாற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

மாலை ஏழுமணியளவில் எனது நகர் வலத்தைத் தொடங்கினேன். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆர்க்காடு ரோடு முழுவதிலுமே கட்சித்தலைகலோ அல்லது காவல்துறை தலைகளோ தென்படவில்லை. ஆங்காகே கொஞ்சம் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். வளசரவாக்கதில் இருந்த சரவணபவன் மட்டும் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யம். ஆனால் பிரச்சனை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. 

மாலையில் சில நண்பர்களிடம் தொலைபேசினேன். பல பகுதிகளில் இந்த நிலைதான் இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருந்தது, ஆனால் கலவரம் பெரிதாக இல்லை.

பேஸ்புக் சென்று பார்த்ததில் சில நண்பர்கள் ஜெ.-க்கு ஆதரவான நிலைத்தகவல்களை வெளியிட்டுந்தனர். உண்மையில் இப்போது நான் மகிழ்சியடைவதா அல்லது துக்கமா?

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த வருடம் 1996, ஜெ. எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நிலைமை. ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியென நாங்கலெல்லாம் உற்ச்சாகத்தில் திழைத்த நாட்கள். சோ சொல்வதெல்லாம் வேத வாக்கு என்ன நம்பியிருந்த நாட்கள்.  எங்கு பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் அந்த பரப்பரப்பு நம்மைத் தொற்றுக்கொண்டிருந்த நாட்கள். 

ஆனால் அந்தப்பரபரப்பு அப்படியே சென்று விட்டது, சிலபல அரசியல் விளையாடுகளுக்குப்பிறகு திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நாங்கலெள்லாம் எதிர்பார்த்த ரஜினியில் பங்களிப்பு திமுகவுக்கான தொலைக்காட்சி பிர்ச்சாரமாக இனிதே நிறைவடைந்தது.

நிற்க,

இப்போது பல வருடங்கள் கழித்து இன்னொரு வரலாற்றுத் தருணம். இப்போது நான் யார் பக்கம். சட்ட நுணுக்கள் பற்றி பேசுவற்கான தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால், இப்போத நிலைமையில் ஜெ, தான் தழிழ்நாட்டிக்கான தகுதியான முதல்வர் என்பது எனது எண்ணம். மிக உறுதியான, சட்டம் ஒழுங்கு பற்றி மிக அக்கறை கொண்ட, தான் நினைப்பதை நிறைவேற்றும் திறமைகொண்ட, மக்களின் நம்மிக்கையை முழுவதுமாகப் பெற்ற முதல்வர் ஜெ. இதை கட்சி சார்பின்றியே சொல்ல முடியும்.

இந்த நிலைமை எப்படி அவருக்கு பின்னடைவோ, அதேபோல் தமிழ்நாட்க்கும் ஒரு பின்னடைவுதான். ஆனால் இது முடிவு இல்லை.

இதை ஜெ. மற்றும் தமிழகம் எப்படி எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள். ஒரு வெற்றிடம் உருவாகையில் ஒரு தலைமையும் உருவாகிவிடும் என்ற வரலாற்று விதியின்படி ஒரு புதிய சக்தி உருவாகுமா அதை வெற்றிடம் உருவாவதி ஜெ. தடுக்க முடியுமா என்பது கவனிக்கவேண்டிய கேள்வி.