Unordered List

27 மே 2021

நமது உரிமை, நமது வாட்ஸாப் ப்ரைவஸி

 வாட்ஸாப் ப்ரைவஸி பற்றி பேசலாம் என்று ஆரம்பித்தாலே நம் மக்கள் அதீர தீவிரத்துடன் பேசுவதை கவனிக்கமுடிகிறது. ஆனால் அது வாட்ஸாப்புக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா என்பதை சில மாத இடைவெளி தான் முடிவு செய்கிறது.


சில மாதங்களுக்கு முன் வாட்ஸாப் இரு ப்ரைவஸி பாலிஸியை அறிமுகப்படுத்தியதில் தொடங்க்கியது ஒரு புரட்சி. அந்த பாலிஸி வாட்சாப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கக்கிடைத்தது என்றாலும் அதை அமெரிக்கைப் பத்திரிகைகள் எதிர்த்தது தான் நம் புரட்சிக்கு காரணமாக அமைந்தது.  உடனடியாக வாட்ஸாப் ஒழிக என்ற குரல்கள் எங்கும் கேட்டன. சரி, அதற்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேட்டபோது டெலிகிராம், சிக்னல் என மேலும் சிலபல ஆப்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்போகிறோம் என்றனர். அதாவது வாட்ஸாப்பை பயன்படுத்திக்கொண்டே.. ரைட்டு என நின்னைத்துக்கொண்ட்டோம்.


வாட்ஸாப் என்ற தகவல் தொடர்பு மென்பொருள் உரிமை வைத்திருக்கும் நிறுவனம் தான் பேஸ்புக் எனும் சமூக ஊடக ப்ளாட்பார்ம் வைத்திருக்கிறது. எனவே அவற்றுக்க்குள் டேட்டா ஷேரிங் இருக்க முடியும் என்பதற்கே பெரும் அதிர்ச்சியடையவேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டதால் பலரும் அதிர்ச்சியடந்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தனர்.


நீங்கள் ஆறாம் வகுப்புப் படித்தபோது பார்த்து பின்னர் முகமே மறந்த சில நண்பர்களை உங்கள் முகநூல் நண்பராக பரித்துரைத்ததைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் படிக்கும் புத்தகம் படித்த ஒருவரை சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி அறிவை வளர்த்திருக்கிறீர்களா? இது எல்லாம் இந்த டேட்டா ஷேரிங்க் வழியாகத்தான் சாத்தியமானது. உங்களுக்குத் தெரிந்த, தினமும் பார்க்கும் நாலு பேரைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சோஷியல் மீடியாவே தேவையில்லை. 


அதுவாவது பரவாயில்லை, இந்த அமெரிக்க வாட்ஸாப் வேண்டாம் என்றால்  அதற்கு பதிலாக நாங்கள் ரஷ்ய அல்லது இந்திய மென்பொருள் பயன்படுத்துவோம் என்றது இன்னும் பெரிய முரணாக இருந்ததை நடுநிலையார்கள் சுட்டிக்காட்டினர். 


காலச் சக்கரம் சுழல்கிறது.. இப்போது தலைகீழாகிறது


இந்தியாவில் செயல்படும் சமூக ஊடங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவங்களுடையவை, அதில் இந்திய அரசின் கட்டுப்பாடு தேவை என்ற நோக்கத்தில் சில கட்டுப்பாடுகள், லகான்களுடன் ஒரு சட்டத்தை இந்தியா கொண்டுவருந்திருக்கிறது. இதற்கு எதிராக வாட்ஸாப் நீதிமன்றம் சென்றிருக்கிறது. ஏற்கனவே இந்திய அரசுக்கும் ட்விட்டர், வாட்ஸாப் போன்ற ஊடகங்களுக்கும் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் இது முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 


முதல் விஷயத்தில் வாட்சாப் ஒழிக என்ற பலரும் இப்போது வாட்ஸாப் வாழ்க என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்க்ள். இதற்காக முன்னர் வாட்ஸாப் எதிர்ப்புக்காக தங்கள் போனில் இன்ஸ்டால் டெலிகிராம், சிக்னல் மற்றும் அரட்டை உள்ளிட்ட ஆப்களை நீக்குவார்கள் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.


அரசுக்கும் பெருநிறுவங்களுக்கும் இடையே பிரச்சனை இருக்க,  மக்கள் கண்ணோட்டத்தில் இது எப்படிப் பார்க்கப்படவேண்டும். நாம் அரசின் பக்கமா அல்லது நிறுவங்களின் பக்கமா?


யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அதுவே அரசு. அந்த அதிகாரம் குவிக்கப்படுகையில் வெளிப்ப்படைத்தன்மை இருக்கிறதோ இல்லையோ நம்பகத்தன்மை தேவைபடுகிறது. தவறுகள் நிவர்த்தி செய்ய ஸிஸ்டம் தேவைப்படுகிறது. ஒருசிலரின் சார்பில் இருப்பதை விட பொதுவான பார்வை கொண்ட அமைப்பாக தேவைப்படுகிறது. இப்போது நடக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் யார் அரசாக செயல்படுவது என்ற போட்டி தான்.


வாட்ஸாப்பின் முதல் பிரச்சனையில் சொன்னது போல இந்திய, ரஷ்ய நாடுகள், இங்குள்ள சமூகம் இந்த வெளிப்படைத்தன்மையில் அமெரிக்காவை விட பல படிகள் பின் தங்கியுள்ளதையும் பார்க்க முடிகிறது.


சமீபத்தில் அமெரிக்க அரசுக்கும் கூகிளுக்கும் நடந்த சில சம்பவங்கள் இவற்றில் யார் அப்படி நம்ப்பகத்தன்மை உடைவர் என்ற விவாதத்தையே உருவாக்கியிருக்கிறது. ஆனால் கூகிளுடன் ஒப்பிடுகையில் பேஸ்புக்,வாட்ஸாப் இந்த விஷயத்தில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கக்கூடியதாக்வே இருக்கிறது.


எனவே இந்திய அரசுக்கும் வாட்ஸாப்புக்கும் நடக்கும் இந்த சண்டை நடுநிலையாளர்களுக்கு மிக சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது.