ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு சின்ன கேள்வி கேட்டதற்காக என் நண்பன் என்னை கசமுசாவெனத் திட்டிவிட்டான்!
"இன்னிக்கு மேட்ச்ல நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்டா.." என்றான் என் நண்பன்.
அவனின் நம்பிக்கை எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், நான் எதுவும் எனக்குச் சின்ன சந்தேகம். நானா? விளையாடவா? விளையாடி ஜெயிக்கவா? ஹ.. ஹ.. ஹே...
"நாம ரெண்டுபேரும் ஏதாவது விளையாடப்போகிறோமா? எங்கேடா? நாம ஜெயிக்கிற அளவுக்கு யாருடா அந்த டுபாகூர் டீம் " உண்மையிலேயே ஆர்வத்துடன் தான் கேட்டேன்.
உண்மையில் அவன் சொன்னது ஐ பி எல் கிரிக்கெட் பற்றியாம். நாம விளையாடுகிறோம் என்று சொன்னால் அது சென்னை டீம் விளையாடுவது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்
இவர்களை என்ன நாமா தேர்ந்தெடுத்தோம்? உண்மையில் இதில் பாதிக்குமேல் தமிழ்நாட்டு பசங்களே இல்லை. இதை சென்னை டீம் என form பண்ணிவிட்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம்மைத் திட்டுகிறார்கள். என்ன கொடுமை சார்.
"தோனியை எல்லாம் சென்னை கேப்டனாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றேன்.
"அப்படின்னா ஆனால் முதலமைச்சர், பிரதமர் எல்லாம் நீ பிடிச்சா செலக்ட் பண்ணின?" என்றான்.
பிரதமர், முதலமைச்சர், கலெக்டர், போலீஸ் இவர்களெல்லாம் நம்முடைய பிரதிநிகள், நமது வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்று நமக்காக வேலை செய்பவர்கள். இவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ, இவர்கள் நம்ம ஆட்கள் தான்.
நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ நாம் தான் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.
இதையும் விருப்பத்திற்காக பார்க்கும் விளையாட்டையும் ஒப்பிடமுடியாது என்றேன்.
"அப்படியா? அப்படின்னா இந்த கிரிக்கெட்டில் இவ்வளவு பணம் விளையாடுகிறதே? இதெல்லாம் யாரு பணம்" என்றான்.
யோசிக்கவேண்டிய விஷயம் தான்.
கிரிக்கெட் இவ்வளவு பெரிய விஷயமானதற்கும் இந்தியா கிரிகெட்டின் தலைநகரமாக ஆனதற்கும் ஒரு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி.
இந்திய தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையே இப்போது கிரிகெட்டின் பொருளாதாரமாக உள்ளது.
எனவே இந்த சேனல்களுக்கு நாம் செலுத்தும் பணம் மற்றும் அதிலிருக்கும் விளம்பரங்கள் ஆகியவையே கிரிக்கெட் அரசாங்கத்தின் முக்கிய வரி வருமானம்.
அப்படிப்பார்த்தால் இவர்களும் நமது பிரதிநிதிகள் தான். இதுவும் ஒரு ஜனநாயகம் தான்.
விளக்கம் எல்லாம் சரிதான்.
"அப்படியென்றால் எல்லாமே என் விருப்பப்படிதான் நடிக்கிறதா? "
"ஆமா அதுதானே ஜனநாயகம். நீயும் மக்களில் ஒருவன்தானே. "
"எல்லாம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. ஆனால் எதோ தப்பு நடக்குறமாதிரி ஒரு உறுத்தல்
இருந்துகிட்டே இருக்கே?"
இருந்துகிட்டே இருக்கே?"
"ஹா ஹா.. அப்படின்னா கண்டிப்பா இது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் தான்." என்றான் உறுதியாக.
என்ன சொல்றீங்க?