Unordered List

14 ஏப்ரல் 2011

தேர்தலில் முதல் வெற்றி..

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், தமிழக தேர்தலில் முதல் வெற்றியாளர் யாரென்று தெரியவந்துள்ளது.

அந்த வெற்றியாளர் யார். வேறு யார்? அது தேர்தல் ஆணையம் தான்.

தேர்தல் நேர்மையாகத்தான் நடக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்கள் ஜனநாயத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தும். அந்த நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்படுவதாகத் தெரிகிறது.



சில குறைபாடுகள் இருந்தாலும், இன்னும் சில தேர்தல்களில் இன்னும் பல முன்னேற்றங்கள் வரலாம் என்றும் நம்பிக்கை வருகிறது.

கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் சொந்தஊருக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.


ஆனால் சொந்த ஊருக்குச் சென்றால் தான் வாக்கு என்ற நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்குமா?

வாக்குப் பதிவு எந்திரம், வெப் காம் கண்காணிப்பு, SMS tracking என தொழில்நுட்பத்தில் விளையாடும் ஆணையத்திற்கு இதுஒன்றும் பெரிய வேலை இல்லை.

பாஸ்போர்ட், வருமான வரி என்று பல விஷயங்களை நாம் இருக்கும் இடத்திலேயே செய்யமுடியும்போது ஒட்டு மட்டும் ஏன் முடியாது?

இதன்மூலம் வாக்கு சதவீதமும் அதிகமாகும், போக்குவரத்து செலவுகளும் குறையும்.

இதுபோன்ற பல முன்னேற்றங்கள் நமது தேர்தல் முறையில் வந்து நமது பங்களிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு நாம்.