Unordered List

14 டிசம்பர் 2014

மீண்டும் ரஜினி - டிக்கெட் எடு! கொண்டாடு!!

ராஜா லிங்கேஸ்வரன் எங்கே எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பவர் திரும்பினால் அதுதான் அவர். அடிப்பில் பொறிவதென்னவோ அப்பளம் தான். ஆனால் நொறுங்குவது மக்களின் மனது.  அந்த நெகிழ்ச்சியான காட்சிக்குப்பிறகு ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும், வாழ்க்கையையின் சவால்களை சந்திக்க மக்களுக்கு அவர் கொடுக்கும் உற்சாக டானிக். ராஜா லிங்கேஸ்வரனின் ரயில் சண்டை தீவிரமான அதிரடி என்றால், இளைய லிங்காவின் கடைசி பாலூன் சண்டை நம்மை குழந்தைகளாக்குகிறது....

19 அக்டோபர் 2014

நூல் வேட்டை

ஒரு ஃபெவிகால் டுயூப் கேட்டேன். நியூஸ் பேப்பர், குச்சியெல்லாம் வீட்டிலேயே கிடைக்கும் எனவே அது தேவையில்லை, அப்புறம் ஒரு நூல். கடைக்காரத் தாத்தா எடுத்துக்கொடுத்தது ஒரு தையல்மெசின் நூல், அது இதற்கு வேலைக்காகாது எனத் தெரிந்தது, ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இந்த வயதில் இதைக் கேட்கிறானே என்று நினைத்துவிடுவாரோ என்று கொஞ்சம் தயக்கம். ”இன்னும் கொஞ்சம் பெரிசா, கட்டுற மாதிரி” என்றேன். ”சரி இது வேணுமா, அஞ்சு ரூபாய்” என்றார். அது பூ கட்டும் நூல். அது சரி. “வேற இருக்கா” என்று கேட்டேன். வேறு கடைகள் இருக்குமா இந்தப் பகுதியில் என்று மனம் யோசிக்க...

18 அக்டோபர் 2014

மழை கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று

சென்ற வியாழக்கிழமை இரவு, துணிகளை துவைத்துக் காயப்போட்டிருந்தேன், இரவில் துவைத்ததால் கொஞ்சம் அவசரமாகத்தான். இந்த மழை என்ன செய்திருந்தது தெரியுமா, நான் சரியாகத்துவைத்திருக்க மாட்டேன் என நினைத்துக்கொண்டு மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த துணிகளை மீண்டும் துவைத்திருந்தது. நல்ல வேளையாக காலையில் அடித்த வெயிலில் ஒன்பது மணிக்கெல்லம் காய்ந்து விட்டது, எனவே எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லாமல் போனது. இருந்தாலும் மழைக்கு ஏனிந்த தேவையில்லாத வேலை. அப்படிதான் ஒருநாள், முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனால் குளிக்க...

07 அக்டோபர் 2014

நீ: தடயங்களைத் தெளிப்பவன்

எதிர்பாராமலோ அல்லது மிக மிக எதிர்பார்த்து திட்டமிட்டோ எப்படியோ நாம் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவரின் தனியறைக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, அதுவும் அவரில்லாத நேரத்தில். என்ன செய்வோம்? நமக்கும் இருக்கும் துப்பறியும் சாம்பு வெளிவரும் நேரம் அதுவாகத்தான் இருக்கும். அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடுவோம் அல்லவா? உண்மையில் நாம் அங்கு பார்ப்பது அங்கே பரவியியிருக்கும் பொருட்களையல்ல, நாம் பார்ப்பது நமது உள்மனம் அங்கே அந்த பொருட்கள் தரும் தடயங்களை வைத்து அவரைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருக்கும் பிம்பத்தைத்தான். என்னைப்பத்து...

01 அக்டோபர் 2014

நீ : எப்படிக் கண்டுபிடிப்பது?

”வர வர நல்லவங்கள எப்படி கண்டுபிடிக்கிறதுனே தெரியல” என்று அலுத்துக்கொள்பவர்களா நீங்கள், நானும் அப்படித்தான் இருந்தேன், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் வரை. சரி, கெட்டவர்களைக் கண்டிபிடிப்பது? அதுவும் அதே தான். மிக எளிதான முறைதான். ஒருவரை பார்க்க்கும்போது நல்லவர் போலத் தெரிகிறதா? அவர் நடவடிக்கைகள் நல்லவர்போலத் தெரிகிறதா? அப்படியென்றால் அவர் நல்லவராக இருக்க வாய்ப்பு அதிகம். திறமையானவர்போலத் தெரித்தால், திறமையானவராக இருக்க வாய்ப்பு அதிகம். என்ன நான் சொல்வது மிகச் சாதாரணமாத் தெரிகிறதா, இருக்கலாம் ஆனால் இது தான் நடைமுறை. நானெல்லாம் பெரிய திறமைசாலி,...

28 செப்டம்பர் 2014

தீர்ப்பும் அதற்கு பின்னரும்

நேற்று காலை நூலகம் சென்று திரும்பும்போதுகூட ஏதும் வித்தியாசமாகத் தெரிய்வில்லை, கிண்டி ரயில்நிலையம் அருகில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்த காவல் துறையினரைத்தவிர. மதியம் தொலைக்காட்சியைப் பார்த்தபோது தான் பரபரப்பு தெரிந்தது. பல செய்திச் சானல்கள் சென்னையில் கலவரம் வரும் என்று அடித்துச் சொல்லியபடியிருந்தன. தமிழில் பார்த்த தந்தி டிவி சற்று பரவாயில்லை, ஆங்கில செய்திச்சானல்களைப் பார்த்தபோது சற்று கலக்கமாகவேயிருந்தது. சென்னையே கலவரத்தில் மூழ்கிவிடும் என்று தோன்றியது.  சனிக்கிழமை மதிய உறக்கத்தைக் கலைத்தது மதுரையிலிருந்த நண்பரிடமிருந்து வந்த தொலைபேசி...

01 செப்டம்பர் 2014

உலகெலாம் புகழ் நம்ம ஏரியா VIP

நம்ம வீட்டுக்கு பக்கத்துல யாராவது வீ.ஐ.பி வீடு இருந்தால் இரு பெருமை தானே. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருப்பது சேக்கிழாருடையது, பெரியபுராணம் எழுதியவர். பெரியவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்காமல் இருக்கலாமா? சென்ற வாரயிறுதியில் கிளம்பிவிட்டேன். குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்வழியில் வலதுபுறம் செல்லும் ஒரு சிறிய சாலையில் சென்றால் இருக்கிறது அவரது வீடு, சரி கோவில். சிறிய கோவில்தான், ஆனால் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. அதிக கூட்டமில்லை....

31 ஆகஸ்ட் 2014

பிள்ளையாருக்கு எந்த ஊரு?

பரவசமாகத் தான் இருக்கிறது, இவ்வளவு வரலாற்றாய்வாளர்களை ஒருசேரப்பார்பதற்கு. எங்கு இருந்தார்களோ தெரியவில்லை வரவேண்டிய நேரத்துக்கு, அது தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சரியாக ஆஜராகிவிட்டனர். இந்த விநானகர் எங்கே இருந்து வந்தார் என்பதே கேள்வி. இவர்களெல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வேறு எங்கிருந்து வந்த நம்பிக்கைகளையும் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் போல.  வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு? இருக்கட்டும், நமக்கு வேண்டாம் இந்தப் பிரச்சனை. நமக்கு தெரிந்தவரை...

09 ஜூன் 2014

திடுமென வந்த மழை

திடுமென இடியிடிக்க விழித்துப் பார்த்தேன். அங்கே பார்க்க ஏதுமிருக்கவில்லை. இருந்தது இருட்டுதான். உண்மையான இருட்டு. முழுமையான இருட்டைப் பார்ப்பதென்றால் அது மின்சாரம் இல்லாமலிருந்தால் தான் முடியும், இல்லையெனில் எங்கிருந்தாவது ஒளி கசிந்துவந்து  இருட்டைக் கெடுத்துவிடும். அதேபோல் முழுமையான இருட்டை அனுபவிக்கவேண்டுமெனில் அது மழைபெய்யும்போது தான் முடியும். கோடையில் உடல் தகிக்கும்  வெப்பமும் இருட்டின் அனுபவதைக் கெடுத்துவிடும். ஆர்வத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல பாய்ந்துவந்து...