Unordered List

05 டிசம்பர் 2015

சென்னை - வரலாறு காணாத மழையில் நான் கண்டவை - 1

சென்னை, போரூர் சிக்னல். 3 டிசம்பர் 2015 "டேய் **.. என்னடா வண்டிய ஓட்டுற” என்று அவன் சொன்னதுதான் தாமதம் “யேய்..” என்று ஒரு இருபது குரல்கள் அவனை அடக்கின. இதை எதிர்பார்க்காத அந்த குடிமகன் இடம் விட்டு அகன்றான். ஓட்டுனர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதுபோன்ற அர்ச்சனைகளை ரோட்டோர குடிமகன்களிடமிருந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பெறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால்  ஓட்டுனருக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பது புதிது. போரூருக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனது ஹன்க் பைக்கில் பயணத்தைத் தொடங்கினேன். எனக்குப் பிடிக்காத ஆற்காடு சாலை தவிர்த்து...

16 ஜூன் 2015

அவருக்கு என்ன பிரச்சனை?

"அவரா, நல்ல மனுஷன். பாவம். ச்சு" என்றார்.எனக்கே ஏன் அவரைப்பற்றி கேட்டோம் என்று ஆகிவிட்டது. "அவருக்கு என்ன பிரச்சனை?" என்றேன்."பிரச்னையல்லாம் ஏதும் இல்லை. ரெம்ப நல்ல மனுஷன்" என்றார். இந்தமுறை அவர் முகபாவம் இன்னும் பரிவோடும் சோகமாகவும் இருந்தது.  சரி பேச்சை மாற்றலாம் என்று நினைத்து"அவர் தம்பியும் அந்த ஊர்ல தான் இருக்கார், அவர தெரியுமா " என்றேன்"அட அவரா, நல்ல தெரியுமே. சின்னவரு தான், ஆனா ஆளு செம திருடன். ஹா ஹா " என்றார்....

31 மார்ச் 2015

நேர்மையின் விளக்கம் - உதவி கேப்டன் கோலி

[சும்மா காமெடிக்கு] என்னடா திடீர்னு புது போன் என்று கேட்டேன். ஆறு மாதம் முன் தான் அவன் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருந்தான். "இது டிஸ்ப்ளே பார் அஞ்சு இஞ்ச்சு" என்றான். "அப்போ பழைய போன்?" "அதுவும் 5 இன்ச் தான். ஆனா இது நெட் கனெக்ட் பண்ணலாம்" "பழசுல?" "அதுலையும் பண்ணலாம் டா.. ஆனா இது ஆண்ட்ராய்ட்"  "அப்படியா.. அப்போ ஏற்கனவே இருக்கிற போன் ஆண்ட்ராய்ட் இல்லையா.." என்றேன். "அதுவும்  ஆண்ட்ராய்ட் " தான் என்றான். "டேய்.....!!!" கோலியிடம் பேசிய டோனி மாதிரி ஆகிப்போச்சு என் நிலைமை. ஆஸ்திரேலியவுக்கு எதிரான காலிறுதிக்கு...

30 மார்ச் 2015

நம்புவது போல ஒரு கொடூர விபத்து

தரையிலிருந்து மேலேறி பறக்கும்வரை கேப்டனின் பொறுப்பில் தான்  இருந்திருக்கிறது. சீராக சீறிப் பய்ந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கையில்  கட்டுப்பாடு உதவி கேப்டனின் கைக்குச் சென்று விட்டது.இந்த சமயத்தில் தான் அந்த உதவி கேப்டன் வேலையைக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள்.ஏற்கனவே பல மன சம்பந்தமான பிரச்சனைகளை கொண்ட அந்த உதவி கேப்டன் தானும் சேர்ந்துதான் வீழப் போகிறோம் என்று தெரிந்தும்...

11 ஜனவரி 2015

சென்னையில் ஜெயமோகன் விழா

தமிழிலக்கிய உலகின் கவனம் இன்று குவிந்திருக்கும் இடம் சென்னை. இன்று மாலை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நடத்தும் விழா நடக்கவிருப்பது தி நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில். இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளார் பூமணிக்கு பாராட்டு விழா. அஞ்ஞாடி நாவலுக்காக விருது பெற்றபின் பூமணி கலந்து கொள்ளும் விழா. எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் விழா. எனவே செறிவான இலக்கிய அனுபவத்துக்கு உத்திரவாதம். விஷ்ணுபுரம் விருது என்று ஒன்று உருவானபோதே தமிழிலக்கிய உலகில் அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. விருதுகள் பற்றிய அவநம்பிக்கையும் விமர்சனங்ளும் மட்டுமே...

09 ஜனவரி 2015

அஞ்சலக அட்வென்சர்

எதிர்பார்த்ததை விட பரபரப்பாகவே இருந்தது தபால் அலுவலகம். அத்தனைக் கவுண்ட்டர்களிலும் வாடிக்கையாளர்கள். ஒரு அரசுத்துறை அலுவலகத்தில் பரபரப்பாக வேலை நடப்பதை பார்பதும் ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் அது மட்டும் போதாதே, நான் வந்த வேலையும் நடக்க வேண்டும் அல்லவா. நான் ஒவ்வொரு கவுண்டராக பார்த்துக்கொண்டே சென்றேன், எங்கு நான் கேட்கவேண்டுமென பார்த்துக்கொண்டே. எதிலுமே நான் வந்த வேலை முடியாது என்று தெரிந்தது. சரி நான் எதற்கு அந்த தபால் அலுவகத்துக்கு வந்தேன். ஒரு அஞ்சல் உறை வாங்கத்தான்.  ஆனால் அந்த அலுவலகத்தில் அஞ்சல் சம்பத்தமான பணிகளைத்தவிர மற்றவற்றில்...