Unordered List

17 மார்ச் 2011

Dhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..


"Captain Cool" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தகட்ட திட்டம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.





இப்போது இந்தியா வித விதமாக வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு சச்சினையும் நம்மையும் ராக்கிங் செய்துவருவதால் சென்னையில் நடக்கும் போட்டிக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும் என்று ஒரு உளவுத்துறை அறிக்கை சொல்லவதாக சொல்லப்படுகிறது.



இதனால் தோனி அதிரடி முடிவுகள் எடுத்துள்ளதாக செய்திகள் கசிகின்றன..




விளையாடத் தெரிந்தவர்களே விளையாடுவது மிகவும் விளையாட்டுத் தனமானது என டோனி அந்த முடிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த முடிவை தெரிந்து கொள்ளும் முன் கொஞ்சம் அவரின் சமீபத்திய நடவடிக்கைகளை புரிந்துகொள்வது நலம்.

"அஷ்வின் நன்றாக விளையாடுபவர். அவரை மீண்டும் விளையாட வைப்பதில் அர்த்தம் இல்லை. பியுஷ் சாவ்லா தான் சரியாக விளையாடவில்லை எனவே அவருக்குத் தான் விளையாட்டின் மூலம் பயிற்சி தர வேண்டும் என அவர் கூறியது குறிப்பிடத் தக்கது.



இதற்கு ஆதாரமாக பியுஷ் சாவ்லா கேவலமாக விளையாடிய இரண்டு போட்டிகளின் score card -களையும் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

(அதேபோல் கேவலமாக விளையாடும் ஸ்ரீசாந்த்-க்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் முகம் தோனிக்கு பிடிக்கணும் இல்ல.. அதுக்கு மேல சொல்லற பேச்சு கேக்குறதில்லை..)

தோனியின் இந்த வியூகம் எதிர் அணியினரை வெகுவாக குழப்பும் என இந்திய பத்திரிக்கைகளால் பாராட்டப் பட்டது.

இந்த வியூகத்தின் தொடர்ச்சியாகவே அன்று மிக கேவலமாக பந்து வீசிய ஆசிஸ் நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் வாய்ப்பு கொடுக்கப் பட்டது. நன்றாக விளையாடுபவர்களுக்கே வாய்ப்பு என்ற சிந்தனையை டோனி தகர்த்து வருவது அறிவு ஜீவிகளால் பெரிதும் பாராட்டப் படுகிறது.

டோனி அடுத்து என்ன பேட்டி கொடுப்பார் என்று வெகுவாக எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவர் கொடுத்த அடுத்த பேட்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

ஜெயிக்கவேண்டிய போட்டிகளைக் கூட தோற்பதில் கில்லாடியான தென்னப்பிரிகாவிடமே ஒரு அருமையான போட்டியில் தோற்றபின் உடனடியாக பின்வருமாறு பேட்டியளித்தார்.


"வீரர்கள் மக்களுக்காக(கூட்டத்திற்காக) விளையாடக் கூடாது. எல்லோரும் 4 மற்றும் 6 . அடிக்க முயற்சிக்க கூடாது. 40 ஓவர் பின்னாலும் பொறுமையாக மொக்கையை போடவேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களை நோக்கி கோபமாகக் கூறினார்.

"எப்படி விளையாட வேண்டும் என்று எதற்கு நமக்கு சொல்லுகிறார் என தொலைக் காட்சியில் பார்த்த பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக,

"கிரிக்கெட் விளையாடுவது எப்படி" என்று தினமும் காலை டோனி தொலைகாட்சியில் தோன்றி விளக்கம் அளிப்பார் என்றும் செய்திகள் வருகின்றன.



இப்போது புரிகிறதா வியூகம்..

அதாவது முதலில் நன்றாக விளையாடுபர்களுக்கு ஓய்வு. மொக்கையாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு பின்பு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கம்.


ஆம்.. அதே தான்..

"பார்க்கவரும் மக்கள் சிலருக்கு விளையாட வாய்ப்பு!!!!"


இதன் மூலம் எதிர் அணியினரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்துவிடலாம்.. What An IDEA Dhoni Jii...

அடுத்த போட்டி சென்னையில் எனபதால் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதை தவறவிட விரும்பாதவர்கள் சேப்பாக்கம் நோக்கி திரண்டு வருமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்

தகுதி என்னவென்றா கேட்கிறீர்கள்? சற்று ரிஸ்க் எடுத்து பியுஷ் சாவ்லா மற்றும் ஆசிஷ் நெஹ்ரா முகத்தை சற்று உற்றுப் பார்க்கவும். உங்கள் முகம் அதுபோல அப்பாவியாக இருந்தால் வாய்ப்பு அதிகம்.

தப்பித் தவறி ஸ்ரீசாந்த் போல இருந்தால்... சாரி..

திரண்டு வருவீர்... அணியில் இணைவீர்..



LINKS:

Chawla playing as he needs more practice: Dhoni



Play for the team, not the spectators: Dhoni to batsmen

14 மார்ச் 2011

சச்சின் - தோணி - குற்றம் எவருடையது?

"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல "

"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெயிக்க முடியல. மற்ற பிளேயர்ஸ் எல்லாம் வேஸ்ட். தோணி சரி இல்ல!! "

........................................................

இந்த இரண்டும் கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விவாதம். நானெல்லாம் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


உண்மையில் சச்சின் இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறாரா?


அல்லது அணி திறமை இல்லாமல் இருக்கிறதா?



சச்சின் அடிக்கும் பெரும்பாலான போட்டிகள் ஏன் தோல்வியில் முடிகின்றன? அவர் நன்றாக விளையாடும் போட்டிகளில் ஏன் மற்றவர்கள் சாதாரணமாகக் கூட விளையாடுவதில்லை? தோணி ஏன் இப்படி முடிவுகளை எடுக்கிறார்?



சச்சின் இல்லாமலே பல போட்டிகளை வெல்லும் திறமையுள்ள இந்த அணி ஏன் சில போட்டிகளில் இப்படி சொதப்புகிறது?




யார் மீது குற்றம்?




சச்சின் இந்திய கிரிக்கெட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். உண்மையில் கிரிக்கெட் தெரியாதவர்களுக்குக் கூட சச்சினைத் தெரியும் என்பது தான் அவரது புகழின் உச்சம். பார்முலா ஒன் ரேஸ் மற்றும் கோல்ப் தெரியாதவர்களுக்குக் கூட Michael Schumacher மற்றும் Tiger Woods தெரிவது போல.



சச்சின் நன்றாக விளையாடத் தொடங்கியதுமே, நமது அணி அவருக்கு எதிராக மனதளவில் விளையாடத் தொடங்கிவிடுகிறது.


இந்தியக் கேப்டனின் ஒரு முக்கியமான குறிக்கோள் சச்சின் இல்லாமல் ஜெயித்துக் காட்டுவது தான்.



சச்சின் கிளிக் ஆகும் போட்டிகளை விட அவர் சரியாக விளையாடாத போட்டிகளை ஜெயிக்கவைக்க கேப்டன் நினைப்பதை அவர்கள் உடல்மொழியை சற்று நோக்கினால் தெரிந்துகொள்ளலாம். அப்படி ஜெயித்தபின்னர் வழக்கமான ஒரு பேட்டி கொடுக்கப் படும்
"இந்திய அணி எந்த தனிமனிதரையும் நம்பி இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி.. ".



இந்தப் போக்கு யார் கேப்டனாக வந்தாலும் மாறுவதில்லை. மாறப் போவதும் இல்லை. இது ஒரு பொது விதி.



தன்ராஜ் பிள்ளை புகழின் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ஹாக்கி அணி அவர்க்கு எதிராக விளையாடியதும் உண்டு.



விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான்.



எனவே சச்சினும் இந்தியக் அணியின் போக்கும் மாறப்போவதில்லை.




இது இயல்பான ஒன்று . எல்லாம் யார்மீதும் குற்றம் இல்லை.

சரி .....ரசிகர்களான நாம் என்ன இதுபோன்ற நிலையில் செய்யவது.

இருக்கவே இருக்கிறது முதலில் சொன்ன இரண்டு கட்சிகள். இதை எதையாவது ஒன்றை எடுத்துக் கொண்டு விவாதம் செய்ய வேண்டியது தான்.



இந்திய ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களாக இதைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

08 பிப்ரவரி 2011

முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

போட்டியில் தோற்றது முயல் தான்.


இந்த முடிவு யாருக்கு ஆச்சர்யமாக இருந்ததோ தெரியாது. ஆனால் முயலுக்கு சிறிதளவும் ஆச்சர்யம் இருக்கவில்லை.



இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே முடிவு முயலுக்குத் தெரிந்திருந்தது. முயல் போட்டியிட்டு தோற்கவில்லை. போட்டியால் தோற்றது.



ஆமையுடன் போட்டி என்பதே முயலுக்குத் தோல்விதான்.

21 ஜனவரி 2011

விட்டுச் சென்றவை

சந்திக்க வந்த விற்பனைப் பிரதிநதி
தன் முகவரி அட்டையை விட்டுச் செல்வதைப் போல,




வீடெங்கும் பொம்மைகளைப் பரப்பிவைத்துவிட்டு
தூங்கச் சென்றுவிடும் குழந்தைப் போல





வாசலெங்கும் தங்கள் உடல்களை விட்டுச் சென்றிருக்கின்றன
ஈசல்கள்!

11 ஜனவரி 2011

புத்தகத் திருவிழா - ஒரு யோசனை

புத்தகத் திருவிழா ஆரம்பித்துவிட்டது. "இந்த வருடம் என்ன special?"
 
இன்னும் ஒரு விஷயம் செய்தால் இந்த முயற்சி இன்னும் நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
இங்கு அதிக கூட்டம் இருக்கும், அதிக விற்பனையாகும் அரங்குகளைக் கவனித்தால் ஒன்று புரியும். மக்கள் பொதுவாக அவர்களுக்கு நன்கு தெரிந்த புத்தகங்களையே வாங்க விரும்புகிறார்கள். 
  • பரிச்சயமான எழுத்தாளர்
  • விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் வந்த தொடர்களின் தொகுப்பு
  • வலைத்தளங்கள் மூலமாக பிரபலமான பதிப்பகங்கள்.
  • ஏற்கனேவே படித்த புத்தகம். மறு வாசிப்புக்கு அல்லது பரிசளிக்க
நமக்குத் தெரிந்த புத்தகங்களையே வாங்குவதற்குப் பெயர் கண்காட்சியா?
 
பொதுவாக கண்காட்சி  என்பது மக்களுக்கு சிலவற்றை அறிமுகப் படுத்தும் விதமாக இருக்கவேண்டும். அதை இந்தக் கண்காட்சி செய்கிறதா?
 
உதாரணமாக புத்தகக் கண்காட்சி நடக்கும் இதே பள்ளியில் போனவாரம் நடந்த ஒரு வீட்டு உபயோக பொருள் கண்காட்சியில் நான் ஒரு toster வாங்கினேன்.  காரணம் அதை அவர்கள் விளக்கிக் காட்டிய விதம்.
 
இது என்ன வீட்டு உபயோகப்பொருளா  Demo  காட்டுவதற்கு? எதை எதனுடன் ஒப்பிடுவது என்று இல்லையா என என் மீது கோபம் கொலைவெறி வேண்டாம்.
 
புத்தகங்களை கண்டிப்பாக இப்படி விளக்க முடியாது. சரி. என்ன செய்ய முடியும்?
 
நல்ல புத்தகங்கள் பற்றிய  அறிமுகம் உருவாக்குவது மிக முக்கியம். எந்த ஒரு கண்காட்சியின் நோக்கமும் மக்களிடம் அறிமுகம் உருவாக்குவதே. இதை இன்னும் எப்படி சிறப்பாக செய்ய முடியும்?
 
நான் கேட்பது எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்ற ஒரு அறிமுகம்.  ஒரு பட்டியல், குறிச் சொற்களோடு தேடும் ஒரு முறை.
 
 IMDB என்ற வலைத்தளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போது மக்கள் மத்தியில் "உலக சினிமா" பற்றி உள்ள எழுச்சிக்கு முக்கிய காரணம் இந்தத் தளம்.
 
இப்போதெல்லாம் இந்த ஒரு சினிமாவைப் பற்றி கேள்விப்பட்டாலும் நான் முதலில் பார்ப்பது இந்தத் தளம் தான். இதன் மூலம் அது  என்னால் ரசிக்கக்கூடிய சினிமாவா என்ற அறிமுகம் கிடைக்கிறது.
 
படைப்பாளிக்கு எப்படி சுதந்திரம் இருக்கிறதோ  அதே போல் வாசகனுக்கும் சுதந்திரம் இருக்கிறது. எல்லா நல்ல படைப்பையும் எல்லா ரசிகனும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இதுபோன்ற ஒரு தளம் வாசகனுக்கு தனக்குத் தேவையான படைப்புகளை அடைய உதவும். படைப்பாளிகளுக்கும் தகுந்த வாசகர்களை அளிக்கும்.
 
அதைப்போன்று புத்தகங்களுக்கு என குறிச்சொல் தேடுதலோடு  ஒரு விரிவான தளம் இருந்தால் நாம் கேள்விப்படும் புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், புதிய புத்தகங்கள் பற்றி அறிமுகமாகவும் இருக்கும்.
 
ஏற்கனவே இப்படி ஒரு தளம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
 
ஏராளமான வாசகர்களும், பல முக்கிய படைப்பாளிகளும் இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இது ஒரு எளிதாகச் செய்யக்கூடியதே.
 
இந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஏன் இப்படி ஒரு முயற்சியை ஆரம்பிக்கக் கூடாது?