Unordered List

07 அக்டோபர் 2014

நீ: தடயங்களைத் தெளிப்பவன்

எதிர்பாராமலோ அல்லது மிக மிக எதிர்பார்த்து திட்டமிட்டோ எப்படியோ நாம் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவரின் தனியறைக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, அதுவும் அவரில்லாத நேரத்தில். என்ன செய்வோம்? நமக்கும் இருக்கும் துப்பறியும் சாம்பு வெளிவரும் நேரம் அதுவாகத்தான் இருக்கும். அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடுவோம் அல்லவா? உண்மையில் நாம் அங்கு பார்ப்பது அங்கே பரவியியிருக்கும் பொருட்களையல்ல, நாம் பார்ப்பது நமது உள்மனம் அங்கே அந்த பொருட்கள் தரும் தடயங்களை வைத்து அவரைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருக்கும் பிம்பத்தைத்தான்.

என்னைப்பத்து நானே சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன் என்று ஆரம்பித்து யாராவது எப்போதும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதை நம்புவதற்குத்தான் யாரும் இல்லை. அவற்றை நம்ப வேண்டும் என்று முயற்சி செய்தாலும் முடிவதில்லை. அவரைப்பற்றி நமக்கும் உருவாகும் பிம்பம், அவரை பார்த்தும் அவரைப்பற்றி கேள்விப்பட்டதும் தான் இருக்கும்

காரணம், சொற்களால் உருவாகும் பிம்மத்தை விட காட்சியால் உருவாகும் பிம்பம் எப்போதும் பலம் வாய்ந்தது.  இரண்டாவது மனம் ஒரு வேட்டை மிருகம் போல, அது தானாக எடுத்துக்கொள்ளும் தகவல்கள் உருவாக்கும் தாக்கத்தை, அதற்கு கொடுக்கப்படும் தகவல்கள் உருவாக்க முடியாது. எனவே தான் அவர் தன்னைப் பற்றி சொல்வதைவிட அவரைப் பற்றி நாம் பார்ப்பதே அவரை உருவாக்குகிறது

சரி, அவர் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், ஆனால் உங்களைப் பற்றி? உங்களைப் பற்றி உலகம் எப்படி கருத்து உருவாக்குகிறது? உங்களைப் பற்றி சொல்லச்சொன்னால் நீங்கள் சொல்லவிருப்பது என்ன? அதைத் தான் உங்கள்ச் சுற்றியிருப்பவர்கள் இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? இல்லையென்றால், அது அவர்கள் தவறு இல்லை.





01 அக்டோபர் 2014

நீ : எப்படிக் கண்டுபிடிப்பது?

”வர வர நல்லவங்கள எப்படி கண்டுபிடிக்கிறதுனே தெரியல” என்று அலுத்துக்கொள்பவர்களா நீங்கள், நானும் அப்படித்தான் இருந்தேன், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் வரை. சரி, கெட்டவர்களைக் கண்டிபிடிப்பது? அதுவும் அதே தான்.

மிக எளிதான முறைதான். ஒருவரை பார்க்க்கும்போது நல்லவர் போலத் தெரிகிறதா? அவர் நடவடிக்கைகள் நல்லவர்போலத் தெரிகிறதா? அப்படியென்றால் அவர் நல்லவராக இருக்க வாய்ப்பு அதிகம். திறமையானவர்போலத் தெரித்தால், திறமையானவராக இருக்க வாய்ப்பு அதிகம். என்ன நான் சொல்வது மிகச் சாதாரணமாத் தெரிகிறதா, இருக்கலாம் ஆனால் இது தான் நடைமுறை.

நானெல்லாம் பெரிய திறமைசாலி, என்ன எனக்கு வாய்ப்பு தான் கிடைக்கவில்லை என்று தானே உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருகிறீர்கள், தவறு இல்லை. கிட்டத் தட்ட அணைவருமே அப்படித்தான் தங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சரி யார் தான் அப்பொது திறமைசாலி? திறமையை வெளிப்படுத்துபவர் மட்டுமே.

ஒருவர் என்ன நினைக்கிறார், அல்லது எதற்குத் தகுதியுடையவர் என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், உண்மையில் வெளிப்படுவது அவர் செய்யும் செயல்கள் மட்டுமே.

எதைச்செய்கிறீர்களோ அது தான் நீங்கள்.

28 செப்டம்பர் 2014

தீர்ப்பும் அதற்கு பின்னரும்

நேற்று காலை நூலகம் சென்று திரும்பும்போதுகூட ஏதும் வித்தியாசமாகத் தெரிய்வில்லை, கிண்டி ரயில்நிலையம் அருகில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்த காவல் துறையினரைத்தவிர.

மதியம் தொலைக்காட்சியைப் பார்த்தபோது தான் பரபரப்பு தெரிந்தது. பல செய்திச் சானல்கள் சென்னையில் கலவரம் வரும் என்று அடித்துச் சொல்லியபடியிருந்தன. தமிழில் பார்த்த தந்தி டிவி சற்று பரவாயில்லை, ஆங்கில செய்திச்சானல்களைப் பார்த்தபோது சற்று கலக்கமாகவேயிருந்தது. சென்னையே கலவரத்தில் மூழ்கிவிடும் என்று தோன்றியது. 

சனிக்கிழமை மதிய உறக்கத்தைக் கலைத்தது மதுரையிலிருந்த நண்பரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. மதுரையில் கேபிள், மின்சாரம் இல்லாததால் செய்தியைக் கேட்க என்னை அழைத்திருக்கிறார். உடனடியாக லேப்டாப்பை உயிர்ப்பித்தால் கிட்டத்தட்ட செய்தி உறுதியாகிவிட்டிருந்தது. தொலைகாட்சி சானல்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. தமிழ்நாட்டின் தலைமை மாற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

மாலை ஏழுமணியளவில் எனது நகர் வலத்தைத் தொடங்கினேன். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆர்க்காடு ரோடு முழுவதிலுமே கட்சித்தலைகலோ அல்லது காவல்துறை தலைகளோ தென்படவில்லை. ஆங்காகே கொஞ்சம் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். வளசரவாக்கதில் இருந்த சரவணபவன் மட்டும் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யம். ஆனால் பிரச்சனை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. 

மாலையில் சில நண்பர்களிடம் தொலைபேசினேன். பல பகுதிகளில் இந்த நிலைதான் இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருந்தது, ஆனால் கலவரம் பெரிதாக இல்லை.

பேஸ்புக் சென்று பார்த்ததில் சில நண்பர்கள் ஜெ.-க்கு ஆதரவான நிலைத்தகவல்களை வெளியிட்டுந்தனர். உண்மையில் இப்போது நான் மகிழ்சியடைவதா அல்லது துக்கமா?

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த வருடம் 1996, ஜெ. எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நிலைமை. ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியென நாங்கலெல்லாம் உற்ச்சாகத்தில் திழைத்த நாட்கள். சோ சொல்வதெல்லாம் வேத வாக்கு என்ன நம்பியிருந்த நாட்கள்.  எங்கு பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் அந்த பரப்பரப்பு நம்மைத் தொற்றுக்கொண்டிருந்த நாட்கள். 

ஆனால் அந்தப்பரபரப்பு அப்படியே சென்று விட்டது, சிலபல அரசியல் விளையாடுகளுக்குப்பிறகு திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நாங்கலெள்லாம் எதிர்பார்த்த ரஜினியில் பங்களிப்பு திமுகவுக்கான தொலைக்காட்சி பிர்ச்சாரமாக இனிதே நிறைவடைந்தது.

நிற்க,

இப்போது பல வருடங்கள் கழித்து இன்னொரு வரலாற்றுத் தருணம். இப்போது நான் யார் பக்கம். சட்ட நுணுக்கள் பற்றி பேசுவற்கான தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால், இப்போத நிலைமையில் ஜெ, தான் தழிழ்நாட்டிக்கான தகுதியான முதல்வர் என்பது எனது எண்ணம். மிக உறுதியான, சட்டம் ஒழுங்கு பற்றி மிக அக்கறை கொண்ட, தான் நினைப்பதை நிறைவேற்றும் திறமைகொண்ட, மக்களின் நம்மிக்கையை முழுவதுமாகப் பெற்ற முதல்வர் ஜெ. இதை கட்சி சார்பின்றியே சொல்ல முடியும்.

இந்த நிலைமை எப்படி அவருக்கு பின்னடைவோ, அதேபோல் தமிழ்நாட்க்கும் ஒரு பின்னடைவுதான். ஆனால் இது முடிவு இல்லை.

இதை ஜெ. மற்றும் தமிழகம் எப்படி எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள். ஒரு வெற்றிடம் உருவாகையில் ஒரு தலைமையும் உருவாகிவிடும் என்ற வரலாற்று விதியின்படி ஒரு புதிய சக்தி உருவாகுமா அதை வெற்றிடம் உருவாவதி ஜெ. தடுக்க முடியுமா என்பது கவனிக்கவேண்டிய கேள்வி.






01 செப்டம்பர் 2014

உலகெலாம் புகழ் நம்ம ஏரியா VIP

நம்ம வீட்டுக்கு பக்கத்துல யாராவது வீ.ஐ.பி வீடு இருந்தால் இரு பெருமை தானே. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருப்பது சேக்கிழாருடையது, பெரியபுராணம் எழுதியவர். பெரியவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்காமல் இருக்கலாமா? சென்ற வாரயிறுதியில் கிளம்பிவிட்டேன்.

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்வழியில் வலதுபுறம் செல்லும் ஒரு சிறிய சாலையில் சென்றால் இருக்கிறது அவரது வீடு, சரி கோவில்.




சிறிய கோவில்தான், ஆனால் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. அதிக கூட்டமில்லை. உண்மையைச் சொன்னால் எங்களைத் தவிர யாருமில்லை அப்போது. சரிதான் இந்தக் கோவிலுக்கு எந்தப் பரிகாரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போல. அமைதியே சிறப்புதான் இப்படிப்பட்ட நினைவிடங்களுக்கு.

காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு மணி நேரம் தான் பூஜை நேரம் என்றாலும், கோவில் எப்போதும் திறந்திருக்கிறது. பக்கத்திலயே அவர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிவன் கோவிலும் பக்கத்திலேயே இருப்பது போனஸ்.






உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்



அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்



மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

பெரியபுராணம் இங்கே படிக்கக் கிடைக்கிறது..


நம்ம புராணமே பெரிய புராணமாக இருக்கே இதுல இது வேறயா என்று சலித்துக்கொள்கிறீர்களா? இதையும் படியுங்கள்  :-)




31 ஆகஸ்ட் 2014

பிள்ளையாருக்கு எந்த ஊரு?

பரவசமாகத் தான் இருக்கிறது, இவ்வளவு வரலாற்றாய்வாளர்களை ஒருசேரப்பார்பதற்கு. எங்கு இருந்தார்களோ தெரியவில்லை வரவேண்டிய நேரத்துக்கு, அது தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சரியாக ஆஜராகிவிட்டனர்.

இந்த விநானகர் எங்கே இருந்து வந்தார் என்பதே கேள்வி. இவர்களெல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வேறு எங்கிருந்து வந்த நம்பிக்கைகளையும் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் போல.  வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு? இருக்கட்டும், நமக்கு வேண்டாம் இந்தப் பிரச்சனை.
நமக்கு தெரிந்தவரை பெரும்பாலான வீடுகளில் இருந்த பிள்ளையார்கள் அந்தந்த தெருமுனைகளிலோ அல்லது கடை வீதிகளிலோ தான் உருவானவர்கள். 

இன்னும் சில வீடுகளில், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொழுக்கட்டையில் உருவான பிள்ளையார்கள் பல. 

இதோ வீட்டில் உருவான ஒரு பிள்ளையார்.